ரூ.1.70 லட்சம் வரை சம்பளம்! சூப்பர் வேலை வாய்ப்பு.. 10வது படிச்சிருந்தாலே போதும்!
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் (TANUVAS) உதவியாளர், ஓட்டுநர் உள்ளிட்ட 60 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 10-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை முடித்தவர்கள் வரை இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

கால்நடை பல்கலையில் வேலைவாய்ப்பு
சென்னை மாதவரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் (TANUVAS) காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காஞ்சிபுரம், சிவகங்கை, நாமக்கல் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள பல்கலைக்கழகக் கல்லூரிகளில் இந்த நிர்வாக ரீதியிலான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
காலிப் பணியிடங்கள்
• நிறுவனம்: தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்.
• மொத்த காலியிடங்கள்: 60.
• பதவிகள்: உதவியாளர், சுருக்கெழுத்தர் (தரம்-III), ஓட்டுநர், பண்ணை மேலாளர், திட்ட உதவியாளர் மற்றும் பல.
தகுதிகள் மற்றும் வயது வரம்பு
• கல்வித் தகுதி: விண்ணப்பதாரர்கள் பதவிக்கு ஏற்ப 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ (ITI) அல்லது ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். குறிப்பிட்ட பணிகளுக்குப் பணி அனுபவம் அவசியமாகும்.
• வயது வரம்பு: 30.11.2025 அன்றைய தேதியின்படி, 18 முதல் 32 வயதுக்குள் இருக்க வேண்டும். (அரசு விதிமுறைகளின்படி இடஒதுக்கீடு பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு).
சம்பளம் மற்றும் தேர்வு முறை
• சம்பளம்: குறைந்தபட்ச ஊதியத்துடன், தகுதி மற்றும் பதவியின் அடிப்படையில் அதிகபட்சமாக ரூ. 1,77,500/- வரை வழங்கப்பட வாய்ப்புள்ளது.
• தேர்வு முறை: விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
ஆர்வமுள்ளவர்கள் தகுந்த சான்றிதழ்களுடன் தபால் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
The Director of Extension Education, Tamil Nadu Veterinary and Animal Sciences University, Skill Development Centre Building, Madhavaram Milk Colony, Chennai - 600 051.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 12-01-2026
கூடுதல் விவரங்களுக்கு: https://tanuvas.ac.in/kvk_recruitment.php என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் காலதாமதமின்றி தபால் மூலம் விண்ணப்பித்து இந்த அரசுப் பணி வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

