MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
TRENDING :
Moon Transit in Scorpio
OTT Release This Week
DA Hike
Venus Retrograde
Train Lower Berth
Mercury Transit
8th Pay Commission
Chanakya Niti
Tamil Nadu Power Cut
FD Vs RD Calculator
Single Door Fridge Tips
Upcoming Hatchback Cars
Bigg Boss Tamil Season 10
  • Home
  • Career
  • ஆன்லைன் எக்ஸாம் வேண்டாம்.. மீண்டும் பழைய முறை? நீட், ஜேஇஇ மாணவர்களுக்கு முக்கிய செய்தி!

ஆன்லைன் எக்ஸாம் வேண்டாம்.. மீண்டும் பழைய முறை? நீட், ஜேஇஇ மாணவர்களுக்கு முக்கிய செய்தி!

NTA ஆன்லைன் தேர்வு வேண்டாம்.. மீண்டும் 'பேப்பர் - பேனா' முறை? நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளில் மாற்றத்தை பரிந்துரைத்த நாடாளுமன்றக் குழு!

2 Min read
Author : Suresh Manthiram
Published : Dec 18 2025, 07:00 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
NTA
Image Credit : Gemini

NTA

இந்தியாவில் நடைபெறும் முக்கிய நுழைவுத் தேர்வுகளான நீட் (NEET), ஜேஇஇ (JEE) மற்றும் கியூட் (CUET) போன்றவற்றை நடத்தும் தேசிய தேர்வு முகமையின் (NTA) செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்த நாடாளுமன்ற நிலைக்குழு, மிக முக்கியமான பரிந்துரையை முன்வைத்துள்ளது. கணினி வழித் தேர்வுகளில் (Computer Based Tests - CBT) தொடர்ந்து ஏற்படும் தொழில்நுட்பக் கோளாறுகள் மற்றும் ஹேக்கிங் புகார்களைத் தவிர்க்க, மீண்டும் பழைய முறையான 'பேப்பர் - பேனா' (Pen-and-Paper) தேர்வு முறைக்கே முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று அக்குழு தெரிவித்துள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
தொடரும் குளறுபடிகள்: நாடாளுமன்றக் குழுவின் அதிரடி அறிக்கை
Image Credit : Gemini

தொடரும் குளறுபடிகள்: நாடாளுமன்றக் குழுவின் அதிரடி அறிக்கை

காங்கிரஸ் எம்பி திக்விஜய் சிங் தலைமையிலான கல்வி, பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் விளையாட்டுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு, நாடாளுமன்றத்தில் விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்தது. அதில், 2024-ம் ஆண்டில் NTA நடத்திய 14 போட்டித் தேர்வுகளில் குறைந்தது ஐந்தில் பெரிய அளவில் சிக்கல்கள் இருந்ததாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறிப்பாக UGC-NET, CSIR-NET மற்றும் NEET-PG தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டதையும், NEET-UG தேர்வில் வினாத்தாள் கசிந்ததையும், CUET முடிவுகள் தாமதமானதையும் குழு கவலையுடன் பதிவு செய்துள்ளது. மேலும், ஜனவரி 2025-ல் நடைபெற்ற JEE (Main) தேர்வில் இறுதி விடைக் குறிப்பில் (Answer Key) ஏற்பட்ட பிழைகளால் 12 கேள்விகள் நீக்கப்பட வேண்டிய சூழல் உருவானதையும் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

Related Articles

Related image1
அது எப்படி குமாரு? நீட் தேர்வில் மைனஸ் மதிப்பெண் பெற்றவர்களுக்கும் முதுகலை படிப்பில் சேர அனுமதி
Related image2
ஆமாம்! நீட் தேர்வை ரத்து செய்ய முடியவில்லை! உண்மையை ஒத்துக் கொண்ட முதல்வர் ஸ்டாலின்!
36
ஏன் இந்த மாற்றம் தேவை? - பாதுகாப்பு காரணங்கள்
Image Credit : Getty

ஏன் இந்த மாற்றம் தேவை? - பாதுகாப்பு காரணங்கள்

தேர்வுக் குழு, கணினி வழித் தேர்வு மற்றும் பேப்பர்-பேனா தேர்வு ஆகிய இரண்டு முறைகளையும் ஆய்வு செய்தது. பேப்பர்-பேனா முறையில் வினாத்தாள் கசிவதற்கான வாய்ப்புகள் இருந்தாலும், சிபிஎஸ்இ (CBSE) மற்றும் யுபிஎஸ்சி (UPSC) போன்ற அமைப்புகள் அதை நம்பகத்தன்மையுடன் நடத்தி வருவதை குழு சுட்டிக்காட்டியுள்ளது. மறுபுறம், கணினி வழித் தேர்வுகளில் ஹேக்கிங் நடப்பதைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினமாக உள்ளதால், நம்பகத்தன்மை கேள்விக்குறியாகிறது. எனவே, முடிந்தவரை கணினி வழித் தேர்வுகளைத் தவிர்த்து, பேப்பர்-பேனா முறைக்கு மாறுவதே சிறந்தது என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

46
தனியார் மையங்களுக்குத் தடை மற்றும் 'பிளாக்லிஸ்ட்' நடவடிக்கை
Image Credit : Getty

தனியார் மையங்களுக்குத் தடை மற்றும் 'பிளாக்லிஸ்ட்' நடவடிக்கை

ஒருவேளை கணினி வழித் தேர்வு நடத்தப்பட்டால், அது கண்டிப்பாக அரசு அல்லது அரசு கட்டுப்பாட்டில் உள்ள மையங்களில் மட்டுமே நடத்தப்பட வேண்டும் என்றும், தனியார் மையங்களில் (Private Centres) நடத்தக்கூடாது என்றும் குழு கண்டிப்புடன் கூறியுள்ளது. மேலும், தேர்வு நடத்துவதில் முறைகேடுகளில் ஈடுபடும் தனியார் நிறுவனங்களை நாடு தழுவிய அளவில் 'பிளாக்லிஸ்ட்' (Blacklist) செய்ய வேண்டும் என்றும், அத்தகைய நிறுவனங்களுக்கு எதிர்காலத்தில் எந்த ஒப்பந்தமும் வழங்கக்கூடாது என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

56
நிதிப் பயன்பாடு மற்றும் உள்கட்டமைப்பு
Image Credit : Getty

நிதிப் பயன்பாடு மற்றும் உள்கட்டமைப்பு

கடந்த ஆறு ஆண்டுகளில் NTA சுமார் ரூ.3,512.98 கோடியை வசூலித்துள்ளது. இதில் செலவு போக ரூ.448 கோடி உபரி நிதியாக உள்ளது. இந்த நிதியைப் பயன்படுத்தி NTA தனது சொந்த உள்கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் என்றும், தனியார் வெண்டர்களைச் சார்ந்திருப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் குழு அறிவுறுத்தியுள்ளது. இந்த நிதியைத் தேர்வுகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், கண்காணிப்பைத் தீவிரப்படுத்தவும் பயன்படுத்தலாம்.

66
மாணவர்களின் சுமையைக் குறைக்கப் புதிய திட்டம்
Image Credit : Getty

மாணவர்களின் சுமையைக் குறைக்கப் புதிய திட்டம்

மாணவர்கள் கோச்சிங் சென்டர்களை (Coaching Centres) மட்டுமே நம்பியிருப்பதைக் குறைக்கவும் சில மாற்றங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. ஜேஇஇ, நீட் போன்ற தேர்வுகளை 12-ம் வகுப்பிற்குப் பதிலாக 11-ம் வகுப்பிலேயே நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. மேலும், பள்ளிப் பொதுத்தேர்வு மதிப்பெண்களையும், நுழைவுத் தேர்வு மதிப்பெண்களையும் இணைத்து 'ஹைப்ரிட்' (Hybrid) முறையில் மாணவர் சேர்க்கையை நடத்தலாம் என்றும் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இது மாணவர்கள் கோச்சிங் சென்டர்களில் செலவிடும் நேரத்தைக் குறைத்து, பள்ளிப் பாடங்களில் கவனம் செலுத்த உதவும்.

About the Author

SM
Suresh Manthiram
இவர் தொடர்பியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். மேலும் காட்சி தொடர்பியல் துறையில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். செய்தி எழுதுவதில் எட்டு ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ள இவர், தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் பகுதி நேர ஊடகவியலாளராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்திருப்பதுடன், அதில் அனுபவமும் பெற்றிருக்கிறார். கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் செய்திகள் எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்.
தொழில்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
NCRTC Recruitment 2026: டிப்ளமோ, ITI படித்தவர்களுக்கு செம வாய்ப்பு! ரூ.1.15 லட்சம் சம்பளம்..90 அரசு வேலைகள்!
Recommended image2
DA Hike: அரசு ஊழியர்களுக்கு டபுள் ஜாக்பாட்! 5% அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு!
Recommended image3
8th Pay Commission: கடைசி சம்பளத்தில் 67% பென்ஷன்! LPD குறித்து அரசு ஊழியர்களின் முக்கிய கோரிக்கை!
Related Stories
Recommended image1
அது எப்படி குமாரு? நீட் தேர்வில் மைனஸ் மதிப்பெண் பெற்றவர்களுக்கும் முதுகலை படிப்பில் சேர அனுமதி
Recommended image2
ஆமாம்! நீட் தேர்வை ரத்து செய்ய முடியவில்லை! உண்மையை ஒத்துக் கொண்ட முதல்வர் ஸ்டாலின்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved