MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Career
  • இனி 'டுபாக்கூர்' வேலை நடக்காது! NEET, JEE தேர்வில் NTA-வின் அதிரடி மாற்றம் - மாணவர்களே உஷார்!

இனி 'டுபாக்கூர்' வேலை நடக்காது! NEET, JEE தேர்வில் NTA-வின் அதிரடி மாற்றம் - மாணவர்களே உஷார்!

NTA ஆள்மாறாட்டத்தைத் தடுக்க 2026 முதல் NEET, JEE தேர்வுகளில் ஆதார் மூலம் முகத்தை அடையாளம் காணும் முறை (Facial Recognition) அமல்படுத்தப்பட உள்ளது.

2 Min read
Suresh Manthiram
Published : Dec 24 2025, 08:19 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
NTA தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு
Image Credit : Gemini

NTA தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு

தேசியத் தேர்வுகள் முகமை (NTA) நடத்தும் நுழைவுத் தேர்வுகளில் முறைகேடுகளைத் தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும் மத்திய அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, அடுத்த ஆண்டு முதல் நடைபெறும் முக்கிய நுழைவுத் தேர்வுகளில் முகத்தை அடையாளம் காணும் (Facial Recognition) தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

25
ஆள்மாறாட்டத்திற்கு முற்றுப்புள்ளி
Image Credit : Getty

ஆள்மாறாட்டத்திற்கு முற்றுப்புள்ளி

NEET, JEE போன்ற உயர்கல்விக்கான நுழைவுத் தேர்வுகளில் ஆள்மாறாட்டம் செய்வதைத் தடுக்கும் நோக்கில் இந்த புதிய முறை கொண்டுவரப்படுகிறது. இஸ்ரோ முன்னாள் தலைவர் கே. ராதாகிருஷ்ணன் தலைமையிலான 7 பேர் கொண்ட குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2024-ம் ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் எழுந்த முறைகேடு புகார்களைத் தொடர்ந்து இந்தக் குழு அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Related image1
UGC NET 2025: அப்ளை பண்ண போறீங்களா? ஆதார் விவரங்களில் 'இந்த' மாற்றம் கட்டாயம்! NTA அதிரடி உத்தரவு!
Related image2
காத்திருந்தது போதும்! CUET UG 2025 தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு: தயாராகும் NTA!
35
எப்போது முதல் அமலுக்கு வருகிறது?
Image Credit : Getty

எப்போது முதல் அமலுக்கு வருகிறது?

இந்த புதிய நடைமுறையானது 2026-ம் ஆண்டு முதல் முழுமையாக அமல்படுத்தப்பட உள்ளது. ஜனவரி 2026-ல் நடைபெறவுள்ள ஜேஇஇ மெயின் (JEE Main Session 1) தேர்வில் இருந்தே இந்தத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் உண்மையான விண்ணப்பதாரர் தான் தேர்வெழுதுகிறார் என்பது உறுதி செய்யப்படும்.

45
ஆதார் கார்டு முக்கியம்
Image Credit : Getty

ஆதார் கார்டு முக்கியம்

தேர்வர்களின் அடையாளத்தைச் சரிபார்க்க ஆதார் அட்டை பயன்படுத்தப்படும். விண்ணப்பதாரர்களின் பயோமெட்ரிக் தரவுகள் (கைரேகை அல்லது முகப் புகைப்படம்) ஆதார் தரவுகளுடன் ஒப்பிடப்பட்டு சரிபார்க்கப்படும். இதற்காக டெல்லியில் உள்ள சில தேர்வு மையங்களில் கடந்த ஆண்டு நீட் தேர்வின் போது சோதனை முறையில் (Pilot Study) இந்தத் திட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

55
விண்ணப்பிக்கும் போதே லைவ் போட்டோ
Image Credit : Getty

விண்ணப்பிக்கும் போதே லைவ் போட்டோ

தேர்வு மையங்களில் மட்டுமல்லாமல், விண்ணப்பப் செயல்முறையிலும் NTA மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. இனி விண்ணப்பதாரர்கள் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்தை அப்லோட் செய்வதற்குப் பதிலாக, வெப்கேம் அல்லது மொபைல் கேமரா மூலம் 'லைவ் போட்டோ' (Live Photograph) எடுக்க வேண்டும். விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்பவரும், தேர்வெழுத வருபவரும் ஒரே நபர்தானா என்பதை உறுதி செய்யவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கணினி வழித் தேர்வுகள்

ராதாகிருஷ்ணன் தலைமையிலான குழு, அனைத்து நுழைவுத் தேர்வுகளையும் ஆன்லைன் வாயிலாக நடத்தப் பரிந்துரைத்துள்ளது. கணினி வழித் தேர்வு சாத்தியமில்லாத பகுதிகளில் 'ஹைபிரிட்' (Hybrid Mode) முறையைப் பின்பற்றவும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சகம் தற்போதுள்ள டிஜிட்டல் உள்கட்டமைப்பை ஆய்வு செய்து வருகிறது.

About the Author

SM
Suresh Manthiram
இவர் தொடர்பியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். மேலும் காட்சி தொடர்பியல் துறையில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். செய்தி எழுதுவதில் எட்டு ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ள இவர், தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் பகுதி நேர ஊடகவியலாளராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்திருப்பதுடன், அதில் அனுபவமும் பெற்றிருக்கிறார். கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் செய்திகள் எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்.
தொழில்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Agriculture Training: இனி செலவே இல்லை.! ஆடு, மாடு, கோழி வளர்ப்பில் கொட்டப்போகுது வருமானம்.! எப்படி தெரியுமா?
Recommended image2
Free Training: வீட்டில் இருந்தே தினமும் ரூ.5,000 சம்பாதிக்கலாம் ஈசியா! இலவச ஆரி ஒர்க் பயிற்சி எங்க நடக்குது தெரியுமா?
Recommended image3
Foreign Jobs: ஜாக்பாட்! கைநிறைய சம்பளத்துடன் ஜெர்மனியில் வேலை.! தமிழ்நாடு அரசு வழங்கும் இலவச பயிற்சி!
Related Stories
Recommended image1
UGC NET 2025: அப்ளை பண்ண போறீங்களா? ஆதார் விவரங்களில் 'இந்த' மாற்றம் கட்டாயம்! NTA அதிரடி உத்தரவு!
Recommended image2
காத்திருந்தது போதும்! CUET UG 2025 தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு: தயாராகும் NTA!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved