MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Career
  • Job Vacancy: ரூ.1 லட்சம் சம்பளத்தில் அரசு வேலை.! மருத்துவர், செவிலியர்களுக்கு ஜாக்பாட்.! தேதி முடிய போகுது, மறந்துடாதீங்க.!

Job Vacancy: ரூ.1 லட்சம் சம்பளத்தில் அரசு வேலை.! மருத்துவர், செவிலியர்களுக்கு ஜாக்பாட்.! தேதி முடிய போகுது, மறந்துடாதீங்க.!

விழுப்புரம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் மருத்துவ மையத்தில் மருத்துவர், செவிலியர் மற்றும் நர்சிங் உதவியாளர் என 6 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்து மதத்தை சேர்ந்த தகுதியான விண்ணப்பதாரர்கள் நவம்பர் 24-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். 

1 Min read
Vedarethinam Ramalingam
Published : Nov 17 2025, 07:03 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
12
நவம்பர் 24 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.!
Image Credit : Getty

நவம்பர் 24-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.!

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூரில் உள்ள அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவில் மருத்துவ மையத்தில் பல்வேறு பணியிடங்களை நிரப்ப இந்து சமய அறநிலையத் துறை வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த மருத்துவ மையத்தில் மருத்துவர், செவிலியர் மற்றும் நர்சிங் உதவியாளர் உள்ளிட்ட மொத்தம் 6 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்து மதத்தைச் சார்ந்த, தகுதியான தமிழ்நாட்டு விண்ணப்பதாரர்கள் நவம்பர் 24-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

22
காலிப்பணியிடங்கள் & தகுதிகள்
Image Credit : Getty

காலிப்பணியிடங்கள் & தகுதிகள்

1. Medical Officer – 2 இடங்கள்

தகுதி: எம்பிபிஎஸ்

சம்பளம்: ₹36,700 – ₹1,16,200

2. Staff Nurse – 2 இடங்கள்

தகுதி: ANM / Nursing Diploma

சம்பளம்: ₹18,500 – ₹58,600

3. Nursing Assistant – 2 இடங்கள்

தகுதி: பிளஸ்-2 தேர்ச்சி

சம்பளம்: ₹11,600 – ₹36,800

எல்லா பணியிடங்களுக்கும் அதிகபட்ச வயது வரம்பு 45 ஆண்டுகள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், எந்தவிதமான விண்ணப்பக் கட்டணமும் பெறப்படாது.

தேர்வு நடைமுறை

விண்ணப்பங்கள் முழுமையாக சரிபார்க்கப்பட்டு, தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு அனுப்பப்படும். நேர்முகத் தேர்வின் அடிப்படையிலேயே இறுதி தேர்வு மேற்கொள்ளப்படும்.

விண்ணப்பிக்கும் முறை

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் இணையதளம் melmalayanurangalamman.hrce.tn.gov.in இலிருந்து விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்ய வேண்டும். தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களும் இணைக்கப்பட வேண்டும். அனுப்பும் உறையின் மேல் விண்ணப்பிக்கும் பதவியின் பெயர் தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி

உதவி ஆணையர் / செயல் அலுவலர் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவில், மேல்மலையனூர் (ம) வட்டம், விழுப்புரம் – 604 204 விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி: 24.11.2025

Related Articles

Related image1
Job Alert: தமிழ் தெரிந்தவர்களுக்கு ரூ.60 ஆயிரம் சம்பளத்தில் அரசு வேலை.! எழுத்து தேர்வு கிடையாது.! நேர்காணல் மட்டும்தான்.!
Related image2
Jobs Alert: ஐடி துறையில் வேலை வேண்டுமா? டீசிஎஸ் அழைக்கிறது.! நேர்முகத்தேர்வு நடைபெறும் தேதி இதுதான்.!

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
வேலைவாய்ப்பு
வேலை வாய்ப்பு முகாம்
வேலை வாய்ப்பு
வேலை வாய்ப்பு
வேலை வாய்ப்பு
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved