MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Career
  • சென்னையில் தொகுப்பூதியத்தில் வேலைவாய்ப்பு.! உடனே விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு

சென்னையில் தொகுப்பூதியத்தில் வேலைவாய்ப்பு.! உடனே விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு

Assistant cum computer operator jobs : சென்னை மத்திய மண்டல குழந்தைகள் நல குழுவில், கணினி இயக்குபவர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். 12 ஆம் வகுப்பு தேர்ச்சி,  42 வயதுக்குட்பட்டவர்கள் இந்த தொகுப்பூதிய பணிக்கு விண்ணப்பிக்கலாம். 

1 Min read
Ajmal Khan
Published : Oct 31 2025, 08:01 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Image Credit : our own

வேலை இல்லாதவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கிடும் வகையில் பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தனியார் நிறுவனங்களோடு இணைந்து வேலைவாய்ப்பை வழங்கும் வகையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்தி வருகிறது. 

இந்த நிலையில் சென்னை மத்திய மண்டல குழந்தைகள் நல குழுவில் தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரிய உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். சென்னை மத்திய மண்டல குழந்தைகள் நல குழுவில் காலியாக உள்ள ஒரு உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவர் பணியிடம் தொகுப்பூதியம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.

24
Image Credit : Pixabay

உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விண்ணப்பதார்கள் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், கணினி அறிவு (சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்) மற்றும் தட்டச்சில் தமிழ் மற்றும் ஆங்கிலம் முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 42 வயதுக்கு மேற்பட்டவராக இருத்தல் கூடாது. (பொது விண்ணப்பதாரர்களுக்கு) இப்பணியிடத்திற்கான தொகுப்பூதியமாக மாதம் ரூ.11,916/- நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Related image1
ரயில்வேயின் ராக் ஸ்டார்! டிக்கெட் எடுக்காத வித் அவுட் ஆசாமிகளை கதற விடும் ரூபினா அகிப்!
Related image2
மிஸ் பண்ணாதீங்க! 12வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு NABARD துணை நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! திருச்சி, மதுரை, சேலத்தில் பணி.
34
Image Credit : stockPhoto

இதற்கான விண்ணப்ப படிவத்தை https://chennai.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தகுதி வாய்ந்த நபர்கள் மேற்கண்ட பதவிக்கு விண்ணப்ப படிவத்தில் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடன் பூர்த்தி செய்து 14.11.2025 (வெள்ளிக்கிழமை) மாலை 5.00 மணிக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, எண். 13, சாமி பிள்ளைத் தெரு, சூளை நெடுஞ்சாலை, சூளை, சென்னை-600 112 என்ற முகவரியில் கிடைக்கப் பெறுமாறு விண்ணப்பிக்கலாம்.

44
Image Credit : getty

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மேற்குறிப்பிட்ட அலுவலகத்திற்கு வந்து சேர வேண்டும். தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும். இது குறித்து அரசின் முடிவே இறுதியானது என சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு
வேலை வாய்ப்பு
வேலை வாய்ப்பு
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved