MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Career
  • இனி 75% வருகைப்பதிவு இருந்தா தான் தேர்வு எழுத முடியும்! சிபிஎஸ்இ புதிய விதிகள் அறிவிப்பு!

இனி 75% வருகைப்பதிவு இருந்தா தான் தேர்வு எழுத முடியும்! சிபிஎஸ்இ புதிய விதிகள் அறிவிப்பு!

2026ஆம் ஆண்டு சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் பங்கேற்க 75% வருகை கட்டாயம் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. உடல்நலக் குறைபாடு, குடும்பத்தில் மரணம் போன்ற காரணங்களுக்கு மட்டுமே விலக்கு அளிக்கப்படும்.

2 Min read
SG Balan
Published : Aug 06 2025, 08:52 PM IST| Updated : Aug 06 2025, 09:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
சிபிஎஸ்இ வருகைப்பதிவு விதிகள்
Image Credit : Getty

சிபிஎஸ்இ வருகைப்பதிவு விதிகள்

2026ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவர்கள் பங்கேற்க, 2025-26 கல்வி ஆண்டில் குறைந்தபட்சம் 75% வருகைப் பதிவை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இதற்கான புதிய மற்றும் கடுமையான விதிமுறைகளை உள்ளடக்கிய சுற்றறிக்கையை ஆகஸ்ட் 4 அன்று சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது.

26
போலி மாணவர்களை தடுப்பதே நோக்கம்
Image Credit : Getty

போலி மாணவர்களை தடுப்பதே நோக்கம்

மாணவர்களின் வருகைப்பதிவு குறைவாக உள்ள புகார்களை அடுத்து, கல்வி ஒழுக்கத்தை உறுதிசெய்யும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ தேர்வுகள் விதி 13 மற்றும் 14-ன்படி, 75% வருகைப்பதிவு இல்லாத மாணவர்கள் தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என வாரியம் எச்சரித்துள்ளது. கடுமையான உடல்நலக் குறைபாடுகள், குடும்பத்தில் மரணம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட தேசிய/சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பது போன்ற சில குறிப்பிட்ட காரணங்களுக்கு மட்டுமே விலக்கு அளிக்கப்படும். இருப்பினும், அதற்கான முறையான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

Related Articles

Related image1
பள்ளிகளில் 'ஆயில் போர்டு' அமைக்க வேண்டும்: சிபிஎஸ்இ அறிவுறுத்தல்
Related image2
எல்லாம் AI தான் பாஸ்! இனி ஸ்கூலே இருக்காது! எதிர்காலக் கல்வி பற்றி சாம் ஆல்ட்மேன் பேட்டி
36
புதிய வழிகாட்டுதல்கள்
Image Credit : Asianet News

புதிய வழிகாட்டுதல்கள்

புதிய கல்வி ஆண்டு தொடங்கும்போதே, மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் வருகைப்பதிவு விதிமுறைகள் மற்றும் அதை பின்பற்றாததால் ஏற்படும் விளைவுகள் குறித்து பள்ளிகள் தெளிவாகத் தெரிவிக்க வேண்டும்.

ஒரு மாணவரின் வருகைப்பதிவு குறைந்தால், பெற்றோர்களுக்குப் பதிவு அஞ்சல் அல்லது மின்னஞ்சல் வழியாக எழுத்துபூர்வமாக எச்சரிக்கை அனுப்ப வேண்டும்.

46
ஆவணங்கள் முக்கியம்
Image Credit : Getty

ஆவணங்கள் முக்கியம்

உடல்நலக் குறைவு காரணமாக விடுப்பு எடுக்கும் மாணவர்கள், அரசு அங்கீகாரம் பெற்ற மருத்துவரின் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். பிற அவசர காரணங்களுக்கு, இறப்புச் சான்றிதழ் போன்ற முறையான ஆவணங்கள் கட்டாயம். விடுப்பு எடுத்த உடனேயே இந்த ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

ஜனவரி 1, 2026 வரை உள்ள வருகைப்பதிவு கணக்கிடப்பட்டு, வருகைப்பதிவு குறைவாக உள்ள மாணவர்களின் விவரங்களை ஜனவரி 7-ஆம் தேதிக்குள் சிபிஎஸ்இ-க்கு பள்ளிகள் சமர்ப்பிக்க வேண்டும். இதற்குப் பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்படாது.

56
தணிக்கை மற்றும் நடவடிக்கை
Image Credit : Getty

தணிக்கை மற்றும் நடவடிக்கை

வருகைப்பதிவு விதிகள் முறையாகப் பின்பற்றப்படுகிறதா என்பதை உறுதிசெய்ய, சிபிஎஸ்இ தனது இணைக்கப்பட்ட பள்ளிகளில் திடீர் ஆய்வுகளை நடத்த உள்ளது. இந்த ஆய்வின் போது, வருகைப்பதிவு பதிவேடுகளில் குறைபாடுகள் அல்லது முறைகேடுகள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட மாணவர்களின் தகுதியை ரத்து செய்வது, மற்றும் பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்வது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

66
வருகைப்பதிவு குறைவாக இருந்தால்...
Image Credit : Getty

வருகைப்பதிவு குறைவாக இருந்தால்...

வருகைப்பதிவு குறைவாக உள்ள மாணவர்களின் விவரங்கள் ஒருமுறை சிபிஎஸ்இ-க்கு சமர்ப்பிக்கப்பட்ட பிறகு, அதில் எந்த மாற்றமும் செய்ய அனுமதிக்கப்படாது என்றும், அவ்வாறு செய்ய முயன்றால் அது மோசடியாகக் கருதப்படும் என்றும் வாரியம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கைகள், மாணவர்களிடையே ஒழுக்கம் மற்றும் பொறுப்புணர்வை வளர்ப்பதற்கான ஒரு முக்கிய நடவடிக்கை என சிபிஎஸ்இ சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
சி.பி.எஸ்.ஈ.
தேர்வு
தேர்வு
பள்ளி

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved