MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Career
  • பத்தாம் வகுப்பு கணித பாடத்தில் இருந்து சீட்டுக்கட்டு கணக்கு பகுதி நீக்கம் - ஏன் தெரியுமா?

பத்தாம் வகுப்பு கணித பாடத்தில் இருந்து சீட்டுக்கட்டு கணக்கு பகுதி நீக்கம் - ஏன் தெரியுமா?

பத்தாம் வகுப்பு கணித பாடத்தில் இடம்பெற்றிருந்த சீட்டுக்கட்டு கணக்கு பகுதி நீக்கப்பட்டுள்ளது.

1 Min read
Raghupati R
Published : Jun 07 2023, 11:01 PM IST| Updated : Jun 07 2023, 11:04 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

தமிழகத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் ஜூன் 12 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட இருக்கிறது. இந்நிலையில், மாணவர்கள் பள்ளிக்கு வருகை தந்த முதல்நாளிலேயே புத்தகங்கள் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

24

இந்நிலையில், 10 ஆம் வகுப்பு கணித பாட திட்டத்தில் சீட்டுக்கட்டு பகுதி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. ஆனால், பல வருடங்களாவே 10 ஆம் வகுப்பு கணித பாடத்தில் இந்த சீட்டுக்கட்டு விளையாட்டு ஒரு பாடமாகவே இருந்து வருகிறது. தமிழக அரசு ஏற்கனவே ஆன்லைன் ரம்மியை தடை செய்திருக்கிறது.

34

இதற்கான சட்டம் கொண்டுவரப்பட்டு, அதற்கு கவர்னரும் அனுமதி வழங்கி இருக்கிறார். ஆறாம் வகுப்பு பாட புத்தகத்தில் ஆன்லைன் ரம்மி தொடர்பான பாடப் பகுதிகள் இடம் பெற்றிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அந்த பாடப்பகுதி ஏற்கனவே நீக்கம் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது பத்தாம் வகுப்பு கணித பாடத்தில் இடம்பெற்றிருந்த சீட்டுக்கட்டு தொடர்பான பாடப்பகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

44

சீட்டுக்கட்டு தொடர்பான 5 கேள்விகள் இடம்பெற்றிருந்த நிலையில் அந்த 5 கேள்விகளும் முழுமையாக நீக்கம் செய்யப்பட்டு அதற்கு பதிலாக இரண்டு கேள்விகள் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த கல்வி ஆண்டில் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ள பாடப்புத்தகத்தில் இந்த இந்த புதிய பகுதி அமலுக்கு வருகிறது.

இதையும் படிங்க..இனிமே பெங்களூரு டூ சென்னைக்கு செல்ல 2 மணி நேரம் போதும்.. வந்தே பாரத் ரயிலை மிஞ்சும் வேகம் !!

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
கல்வி
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved