MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • குட் நியூஸ்.! இனி இந்த வாகனங்களுக்கு ரோடு டாக்ஸ் இல்லை.. சுப்ரீம் கோர்ட் உத்தரவு

குட் நியூஸ்.! இனி இந்த வாகனங்களுக்கு ரோடு டாக்ஸ் இல்லை.. சுப்ரீம் கோர்ட் உத்தரவு

மோட்டார் வாகன வரி என்பது சாலைகளை பயன்படுத்தும் வசதிக்காக செலுத்தப்படும் ஈடுசெய்யும் வரி என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

2 Min read
Author : Raghupati R
Published : Sep 03 2025, 08:50 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Image Credit : Google

வாகனத்தை சாலையில் ஓட்டும்போது 'மோட்டார் வாகன வரி' (சாலை வரி) கட்டுவது கட்டாயம். இது சாலை பராமரிப்புக்கான கட்டணம் போன்றது. ஆனால், சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் வழங்கிய முக்கிய தீர்ப்பில் பொது சாலையில் இயங்காத வாகனங்களுக்கு மோட்டார் வாகன வரி விதிக்க முடியாது எனத் தெளிவுபடுத்தியுள்ளது. இதனால் தொழிற்சாலை வளாகங்கள், தனியார் எஸ்டேட்கள், கல்லூரி/கேம்பஸ் போன்ற இடங்களில் மட்டுமே இயங்கும் வாகன உரிமையாளர்களுக்கு பெரிய நிம்மதி கிடைக்கிறது.

25
Image Credit : Google

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மனோஜ் மிஸ்ரா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர், மோட்டார் வாகன வரி என்பது "சாலைகளை பயன்படுத்தும் வசதிக்காக செலுத்தப்படும் ஈடுசெய்யும் வரி" எனக் குறிப்பிட்டனர். அதாவது, அரசின் சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தினால் மட்டுமே வரி செலுத்த வேண்டும். தனியார் இடத்தில் மட்டும் பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு அரசு வரி விதிக்க முடியாது எனவும் அவர்கள் விளக்கினர்.

Related Articles

Related image1
பள்ளிக்கல்வி ஆசிரியர்களின் பணிக்கு வேட்டு வைத்த நீதிமன்றம்! பணியில் தொடர தகுதி தேர்வு கட்டாயம்
Related image2
கல்வி நிதிக்கு யார் பொறுப்பு? மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
35
Image Credit : Google

இந்த தீர்ப்பு 'ஆந்திரப் பிரதேச மோட்டார் வாகன வரி சட்டம், 1963'ன் பிரிவு 3 அடிப்படையில் வழங்கப்பட்டது. அந்தச் சட்டத்தில் "பொது இடம்" என்ற சொல்லின் முக்கியத்துவத்தை நீதிபதிகள் வலியுறுத்தினர். வாகனம் பொது இடத்தில் இயக்கப்பட்டாலோ அல்லது அங்கு பயன்படுத்த தயாராக வைக்கப்பட்டாலோ தான் வரி விதிக்க வேண்டும் என்று சட்டம் சொல்கிறது எனவும் கோர்ட் எடுத்துக்கூறியது.

45
Image Credit : Google

இந்த வழக்கு விசாகப்பட்டினம் ஸ்டீல் பிளாண்ட் வளாகத்தில் இயங்கும் 'ராஷ்டிரிய இஸ்பாத் நிகாம் லிமிடெட்' (RINL) நிறுவன வாகனங்களைச் சார்ந்தது ஆகும். அந்த நிறுவனம் வைத்திருந்த 36 கனரக வாகனங்கள் பிளாண்ட் உள்ளேயுள்ள டிஸ்பாட்ச் ஓட்டலில் மட்டுமே பொருட்கள் எடுத்துச் சென்றன. பொதுமக்கள் நுழைய முடியாத, சிஐஎஸ்எஃப் பாதுகாப்பு அந்த வளாகத்தில் மட்டுமே வாகனங்கள் இயங்கியதால், நிறுவனம் வரி விலக்கு கேட்டது.

55
Image Credit : Google

முதலில் உயர் நீதிமன்ற ஒற்றை நீதிபதி நிறுவனம் சார்பாக உத்தரவு வழங்கி, ரூ.22.71 லட்சம் திருப்பித் தர உத்தரவிட்டார். ஆனால், பிரிவு பெஞ்ச் அதை ரத்து செய்தது. இதனைத் தொடர்ந்து நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டை அணுகியது. இறுதியாக உச்சநீதிமன்றம், “வாகனம் பொது இடத்தில் இயங்கவில்லையெனில் அல்லது அங்கு பயன்படுத்தும் நோக்கில் வைக்கப்படவில்லையெனில், மோட்டார் வாகன வரி விதிக்க முடியாது” ​​எனத் தெளிவுபடுத்தி நிறுவனத்திற்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வரி
உச்ச நீதிமன்றம்
வாகனம்
வணிகம்
இந்தியா

Latest Videos
Recommended Stories
Recommended image1
ரூ.20 கட்டினால் ரூ.2 லட்சம் காப்பீடு.. ஏழை, நடுத்தர குடும்பங்களுக்கு பாதுகாப்பு திட்டம்
Recommended image2
ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. இனி டிக்கெட் புக் செய்தால் கேஷ்பேக்.. சூப்பர் ஆஃபர்!
Recommended image3
இந்த 5 விஷயங்கள் நடந்தால்.. உங்கள் வங்கி கணக்கை பயன்படுத்த முடியாது.. உடனே செக் பண்ணுங்க
Related Stories
Recommended image1
பள்ளிக்கல்வி ஆசிரியர்களின் பணிக்கு வேட்டு வைத்த நீதிமன்றம்! பணியில் தொடர தகுதி தேர்வு கட்டாயம்
Recommended image2
கல்வி நிதிக்கு யார் பொறுப்பு? மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved