- Home
- Business
- 2000-ல் ரூ.1 லட்சம் போட்டிருந்தா இன்று ரூ.47 லட்சம்.. இந்த ஒரு பங்கு பலரை கோடீஸ்வரராக்கியது
2000-ல் ரூ.1 லட்சம் போட்டிருந்தா இன்று ரூ.47 லட்சம்.. இந்த ஒரு பங்கு பலரை கோடீஸ்வரராக்கியது
2000-ம் ஆண்டில் எம்.ஆர்.எஃப் பங்கில் செய்யப்பட்ட ரூ.1 லட்சம் முதலீடு, நீண்ட கால அடிப்படையில் எப்படி ரூ.50 லட்சமாக வளர்ந்தது என்பதை இந்த கட்டுரை விளக்குகிறது.

பங்குச் சந்தை முதலீடு
பங்குச் சந்தை என்றாலே பலருக்கும் ஒரு மர்மம் போலத் தான் தெரியும். சிலர் இதில் முதலீடு செய்து லட்சங்களையும் கோடிகளையும் சம்பாதித்திருக்கிறார்கள். அதே நேரத்தில், புரிதல் இல்லாமல் முதலீடு செய்ததால் அனைத்தையும் சரியான இழந்தவர்களும் உண்டு. ஆனால், நீண்ட கால பொறுமையுடன் தரமான நிறுவனங்களில் முதலீடு செய்தால், பங்குச் சந்தை எவ்வளவு பெரிய செல்வத்தை உருவாக்க முடியும் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம் தான் எம்.ஆர்.எஃப் (MRF).
நீண்டகால முதலீடு
2000-ம் ஆண்டை நினைத்துப் பார்ப்போம். அப்போது எம்.ஆர்.எஃப் நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை சுமார் ரூ.2,800 மட்டுமே. அந்த தேதி கூட “இது ஏற்கனவே விலை உயர்ந்த பங்கு” என பலர் நினைத்தனர். ஆனால், டயர் துறையில் முன்னணி நிறுவனமாகத் திகழ்ந்த எம்.ஆர்.எஃப், தனது நிலையான வணிக முறை, லாப வளர்ச்சி மற்றும் வலுவான பிராண்டு மதிப்பின் மூலம், காலப்போக்கில் முதலீட்டாளர்களின் நம்பிக்கை உறுதி செய்யப்பட்டது.
சிறந்த பங்குகள்
அந்த நேரத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்திருந்தால் என்ன நடந்திருக்கும்? ரூ.2,800 என்ற விலையில், சுமார் 35 எம்.ஆர்.எஃப் பங்குகளை வாங்க முடிந்திருக்கும். அப்போது பங்குச் சந்தையை நன்கு புரிந்த சிலர், இந்த நிறுவனத்தில் முதலீடு செய்திருந்தனர். அவர்களுக்கு அது ஒரு சாதாரண முதலீடு போல தோன்றியிருக்கலாம்.
முதலீட்டு திட்டம்
ஆனால் 2026-க்கு வந்தபோது, ஒரு எம்.ஆர்.எஃப் பங்கின் விலை ரூ.1,35,580 என்ற அளவுக்கு உயர்ந்தது. இதன்படி, அந்த 35 பங்குகளின் மொத்த மதிப்பு சுமார் ரூ.47 லட்சத்தை கடந்திருக்கும். இதனுடன் பல ஆண்டுகளில் கிடைத்த டிவிடெண்ட் தொகையும் சேர்த்தால், முதலீட்டின் மதிப்பு ரூ.50 லட்சத்திற்கு அருகில் சென்றிருக்கும். இது நீண்ட கால முதலீட்டின் சக்தியை தெளிவாக காட்டுகிறது.
எதிர்கால லாப பங்குகள்
இந்த அபார வளர்ச்சிக்கு சில முக்கிய காரணங்கள் உள்ளன. டயர் துறையில் சந்தையை இழக்காமல் நிலைத்திருத்தல், கடனை கட்டுப்பாட்டில் வைத்திருத்தல், லாபத்தை மீண்டும் தொழிலில் முதலீடு செய்தல் ஆகியவை முக்கியமானவை. எதிர்காலத்தைப் பார்க்கும்போது, உற்பத்தி சார்ந்த தொழில்கள், ஆட்டோ துணைத் துறை, மின்சார உபகரணங்கள், மருந்து தயாரிப்பு, பாதுகாப்புத் துறை மற்றும் ஆற்றல் போன்ற துறைகள், நீண்ட காலத்தில் எம்.ஆர்.எஃப் போன்ற பசுமை தரக்கூடிய வாய்ப்புகள் உள்ளன என நிபுணர்கள் கருதுகின்றனர்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

