வீட்டுக் கடன், கார் கடன், கல்விக் கடன்… எல்லாம் ஒரே EMI-ஆக மாற்றலாம்!
மாத சம்பளத்தில் பெரிய பகுதி இஎம்ஐ-களுக்கே செலவாகி விடுகிறது. சிலருக்கு ஒரே நேரத்தில் 5 அல்லது 6 இஎம்ஐ கூட இருக்கலாம். இதனால் சேமிப்பு செய்ய முடியாமல் போகிறது.

ஒரே கடனாக மாற்றுதல்
மாத சம்பளத்தில் பெரிய பகுதி இஎம்ஐ-களுக்கே செலவாகி விடுகிறது. சிலருக்கு ஒரே நேரத்தில் 5 அல்லது 6 இஎம்ஐ கூட இருக்கலாம். இதனால் சேமிப்பு செய்ய முடியாமல் போகிறது. எதிர்பாராத மருத்துவ செலவு, குடும்ப அவசரம், குழந்தைகளின் கல்வி செலவுகள் வந்தால் உடனே சமாளிப்பது கடினமாகிறது. “எல்லா இஎம்ஐ-யும் ஒன்றாக சேர்த்து ஒரே தவணையாக கட்டினால் நிம்மதி கிடைக்கும்” என்று பலரும் நினைப்பது இயல்பே.
இந்த இஎம்ஐ சுமைக்கு தீர்வாக சவுத் இந்தியன் வங்கி புதிய கடன் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு ‘பவர் கன்சோல்’ என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் முக்கிய அம்சம் என்னவென்றால், பல்வேறு கடன்களாக இருக்கும் இஎம்ஐ-களை ஒரே கடனாக இணைத்து குறைந்த வட்டியில் ஒரே இஎம்ஐ ஆக செலுத்தும் வசதியை வழங்குகிறது. இதனால் மாத செலவு கட்டுப்பாட்டில் வர வாய்ப்பு உள்ளது.
இந்த திட்டத்தில் வீட்டுக் கடன், கார் கடன், கல்விக் கடன், தனிநபர் கடன் போன்ற பல வகை கடன்களை ஒரே கடனாக மாற்றிக்கொள்ள முடியும். அதுமட்டுமல்லாமல், உங்கள் சொந்த வீடு அல்லது வணிக சொத்தின் மதிப்பை அடிப்படையாக கொண்டு கடன் பெறும் வசதியும் இதில் உள்ளது. பொதுவாக சொத்தின் மதிப்பில் 75% வரை கடன் பெற வாய்ப்பு உள்ளது.
குறைந்த வட்டி கடன் வசதி
கடன் தொகை தேவைக்கேற்றபடி ரூ.10 லட்சம் முதல் ரூ.3 கோடி வரை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. இது அதிக இஎம்ஐ சுமையால் சிக்கிக் கொண்டிருக்கும் நடுத்தர குடும்பங்களுக்கும், தொழில் செய்பவர்களுக்கும் ஒரு பயனுள்ள தேர்வாக இருக்கலாம். குறிப்பாக பல கடன்களை ஒரே திட்டத்தில் கொண்டு வர முடிந்தால் செலுத்தும் பணமும் “அசல்” குறையலாம்.
இந்த திட்டத்திற்கு பொதுவாக 30 முதல் 55 வயது வரையிலான ஊழியர்கள் மற்றும் தொழில் செய்பவர்கள் தகுதியானவர்களாக பார்க்கப்படுகிறார்கள். திருப்பிச் செலுத்தும் காலக்கெடு 15 ஆண்டுகள் வரை வழங்கப்படலாம். மேலும் வீட்டுக் கடன் மாற்றம் தொடர்பான சில வசதிகளில் 30 ஆண்டுகள் வரை அவகாசம் இருக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த மாதிரி ஒருங்கிணைந்த கடன் திட்டம் சரியான முறையில் பயன்படுத்தப்பட்டால், வட்டி குறையவும், மாத தவணை எளிதாகவும் இருக்கும். ஒரே இஎம்ஐ என்பதால் தவற விடும் வாய்ப்பு குறைந்து, அது சிபில் ஸ்கோருக்கும் நல்ல பயனளிக்கலாம். இந்த திட்டம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றால், இதே மாதிரி திட்டங்களை மற்ற வங்கிகளும் கொண்டு வர வாய்ப்பு உள்ளது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

