தங்கத்தை ஆப்ஸ்களில் வாங்குகிறீர்களா? உங்கள் பணம் ஆபத்தில்! செபி எச்சரிக்கை அறிவிப்பு
டிஜிட்டல் தங்க முதலீடுகள் அதன் கட்டுப்பாட்டில் இல்லை என செபி எச்சரித்துள்ளது. இதனால் முதலீட்டாளர்களுக்கு சட்டப் பாதுகாப்பு இல்லை. சிறிய தொகையில் முதலீடு செய்ய எளிதாக இருந்தாலும், நிறுவனம் திவாலானால் பணத்தை இழக்க நேரிடும்.

டிஜிட்டல் தங்கம் ஆப்ஸ்
டிஜிட்டல் தங்க முதலீடுகள் குறித்து செபி சமீபத்தில் முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த தயாரிப்புகள் அதன் கட்டுப்பாட்டில் இல்லை. முதலீட்டாளர் நஷ்டமடைந்தால் செபி உதவாது. டிஜிட்டல் தங்கம் என்பது தங்கத்தை டிஜிட்டல் முறையில் வாங்கும் ஒரு முறை. ஆப்கள் மூலம் சிறிய தொகையிலும் தங்கம் வாங்கலாம். தங்கம் நிறுவனத்தின் வால்ட்டில் பாதுகாப்பாக இருக்கும்.
செபி எச்சரிக்கை
பயனர் ஆப் மூலம் பணம் செலுத்தி தங்கம் வாங்கலாம். நிறுவனம் உங்கள் பெயரில் தங்கத்தை பதிவு செய்யும். இந்த தங்கத்தை எப்போது வேண்டுமானாலும் விற்கலாம். ஆனால் இதற்கு சட்டப் பாதுகாப்பு இல்லை. இது ஏன் இவ்வளவு பிரபலமானது? என்று பார்க்கையில் சிறிய தொகையில் முதலீடு செய்யலாம், பண்டிகை கால தள்ளுபடிகள், எளிதாக விற்கலாம். இதனால் இளைஞர்கள், பெண்கள் மத்தியில் இது பிரபலமானது.
செபி அறிவிப்பு
செபி, ஆர்பிஐ மேற்பார்வை இல்லாததால், நிறுவனம் திவாலானால் பணத்தை திரும்பப் பெற முடியாது. 3% ஜிஎஸ்டி போன்ற மறைமுக கட்டணங்களால் நஷ்டம் ஏற்படலாம். கடந்த ஓராண்டில் தங்கம் விலை உயர்ந்ததால், மக்கள் தங்கத்தில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டினர். ஆன்லைன் தளங்கள் இதை பயன்படுத்தி டிஜிட்டல் தங்கத்தை பிரபலப்படுத்தின. டிஜிட்டல் தங்கத்திற்கு கட்டுப்பாடு, சட்டப் பாதுகாப்பு இல்லை.
தங்கம் ஆன்லைன் வாங்குதல்
ஆனால் Gold ETF, Sovereign Gold Bonds போன்றவை செபி, ஆர்பிஐ மேற்பார்வையில் உள்ளதால் பாதுகாப்பானவை. Paytm, PhonePe போன்ற ஆப்கள் டிஜிட்டல் தங்கத்தை விற்கின்றன. செபி பாதுகாப்பு வழங்காது என்பது முக்கியம். நிபுணர்கள், முறைப்படுத்தப்பட்ட Gold ETF-களுக்கு மாறுவது நல்லது என்கின்றனர். ஏற்கனவே முதலீடு செய்திருந்தால், உடனடியாக விற்க வேண்டாம். ஆனால், உங்கள் தளம் நம்பகமானதா என சரிபார்க்கவும். நிபுணர்கள், டிஜிட்டல் தங்கத்தை விற்று Gold ETF-ல் முதலீடு செய்ய அறிவுறுத்துகின்றனர்.