MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Savings Scheme:மாதா மாதம் ரூ.20 ஆயிரம் கிடைக்கும்.! திட்டத்தில் சேர்ந்தால் ஜாக்பாட்தான்.!

Savings Scheme:மாதா மாதம் ரூ.20 ஆயிரம் கிடைக்கும்.! திட்டத்தில் சேர்ந்தால் ஜாக்பாட்தான்.!

மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் ஓய்வு பெற்றவர்களுக்கு 8.2% வட்டி விகிதத்தில் மாத வருமானம் அளிக்கிறது. ரூ.30 லட்சம் வரை முதலீடு செய்து, வருடத்திற்கு ரூ.2.46 லட்சம் வரை வருமானம் பெறலாம். வரிச் சலுகைகளும் உண்டு.

2 Min read
Vedarethinam Ramalingam
Published : Jul 30 2025, 10:43 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
பாதுகாப்பான சேமிப்பு திட்டம்
Image Credit : iSTOCK

பாதுகாப்பான சேமிப்பு திட்டம்

அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்டு, தபால் நிலையத்தின் கீழ் இயங்கும் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (Senior Citizens Savings Scheme - SCSS) என்பது, ஓய்வு பெற்றவர்களுக்கான மிகச் சிறந்த மற்றும் பாதுகாப்பான சேமிப்பு வாய்ப்புகளில் ஒன்றாகத் திகழ்கிறது. இத்திட்டம் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் அல்லாமல், சில விதிமுறைகளின் அடிப்படையில் 55 வயதுக்கு மேற்பட்ட அரசு ஊழியர்கள், பாதுகாப்புப் படையிலிருந்து ஓய்வுபெற்ற நபர்களுக்கும் நடைமுறையில் உள்ளது.

26
ஆண்டுக்கு 8.2% வட்டி
Image Credit : social media

ஆண்டுக்கு 8.2% வட்டி

இந்த திட்டத்தின் முக்கிய சிறப்பம்சம், அதிக வட்டி விகிதத்துடன் வரும் மாதந்தோறும் நிலையான வருமானம் என்பதுதான். தற்போது இந்த திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 8.2% வட்டி வழங்கப்படுகிறது. இது மற்ற பல வங்கிகள் வழங்கும் நிரந்தர வைப்பு வட்டியைவிட அதிகமாகும். முதலீட்டுக்கான அதிகபட்ச வரம்பு ரூ.30 லட்சம். முழு தொகையை ஒரே நேரத்தில் முதலீடு செய்தால், வருடத்திற்கு சுமார் ரூ.2.46 லட்சம் வருமானம் கிடைக்கும். அதாவது, மாதத்திற்கு சுமார் ரூ.20,500 வரை வீடில் இருந்தபடியே வட்டி தொகை கிடைக்கும்.

36
குறைந்தபட்ச தொகை ரூ.1,000 மட்டுமே
Image Credit : social media

குறைந்தபட்ச தொகை ரூ.1,000 மட்டுமே

முதல் முதலீட்டிற்கான குறைந்தபட்ச தொகை ரூ.1,000 மட்டுமே. இதனால், சிறிய அளவிலிருந்து சேமிப்பை துவக்க விரும்புபவர்களும் இத்திட்டத்தில் சேர முடியும். இந்தச் சேமிப்பு திட்டத்தின் காலம் 5 ஆண்டுகள். அதன்பின் விருப்பத்திற்கேற்ப மேலும் 3 ஆண்டுகள் நீட்டிக்கலாம். வருமான வரி சலுகைகள் குறித்தாகப் பேசும்போது, இந்தத் திட்டத்தில் செய்யப்படும் முதலீடுகள் வருமான வரி சட்டத்தின் 80C பிரிவின் கீழ் ரூ.1.5 லட்சம் வரை வரி விலக்கு பெற முடியும். அதேசமயம், வருடாந்தம் ரூ.50,000க்கு மேல் வட்டி வருமானம் இருந்தால் TDS (Tax Deducted at Source) விதிக்கப்படும். ஆனால், வருமான வரிக்குட்படாத மூத்த குடிமக்கள் படிவம் 15G அல்லது 15H சமர்ப்பித்தால், TDS தவிர்க்கலாம்.

46
தேவையான போது பணத்தை எடுக்கலாம்
Image Credit : social media

தேவையான போது பணத்தை எடுக்கலாம்

இந்த திட்டத்தின் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், தேவையின்பேரில் கணக்கை மூடுவதற்கான வசதியும் உள்ளடக்கப்பட்டுள்ளது. ஆனால், இது சில கட்டுப்பாடுகளுடன் வருகிறது. 1 வருடத்திற்குள் கணக்கை மூடினால், வட்டி கிடையாது. 1 முதல் 2 ஆண்டுகளுக்குள் மூடினால், 1.5% வட்டி கழிப்பு, 2 முதல் 5 ஆண்டுகளுக்குள் மூடினால் 1% கழிப்பு ஏற்படும்.

56
முதலீடு செய்வது எளிது
Image Credit : social media

முதலீடு செய்வது எளிது

இந்த திட்டத்தில் முதலீடு செய்யும் செயல்முறை மிகவும் எளிதானது. உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தில் அல்லது அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளில் சென்று, ஆதார், பான் கார்டு, முகவரி ஆதாரம் போன்ற தேவையான ஆவணங்களுடன் SCSS கணக்கைத் திறக்கலாம். ஒரே நபராகவோ அல்லது இணை கணக்காகவோ இது இயலும்.

66
சீரான மற்றும் பாதுகாப்பான மாத வருமானம்
Image Credit : social media

சீரான மற்றும் பாதுகாப்பான மாத வருமானம்

சுருக்கமாகச் சொன்னால், தபால் நிலைய மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம், ஓய்வு பெற்ற பிறகும், சீரான மற்றும் பாதுகாப்பான மாத வருமானம் தேவைப்படுவோருக்கான ஒரு நம்பிக்கைக்குரிய நிதி திட்டமாகும். அரசு உத்தரவாதத்துடன் கிடைக்கும் பாதுகாப்பு, வருமானம், வரி சலுகை ஆகியவை மூலமாக இது ஒரு பரிந்துரைக்கத்தக்க சேமிப்பு வழியாக திகழ்கிறது. உங்கள் முதுமையை நிதிச்சுமையின்றி மகிழ்ச்சியுடன் கழிக்க விரும்புகிறீர்களானால், இந்தத் திட்டம் உங்கள் வசதிக்கு ஏற்ற சிறந்த தேர்வாக இருக்கும்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
சேமிப்புக் கணக்கு
அஞ்சல் அலுவலகம்
தபால் அலுவலகத் திட்டம்
தபால் அலுவலகம்
வணிகம்
வணிக யோசனை

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved