MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • வங்கி வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்.. இனி உடனே பணம்! ஆர்பிஐ அறிவிப்பு

வங்கி வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்.. இனி உடனே பணம்! ஆர்பிஐ அறிவிப்பு

இந்த முறையில், முதல் கட்டமாக அக்டோபர் 4, 2025 முதல் காலை 10 மணி முதல் மாலை 4 மணிக்குள் செலுத்திய காசோலை அதே நாளிலேயே செயலாக்கப்படும். இரண்டாம் கட்டமாக ஜனவரி 3, 2026 முதல் காசோலை 3 மணி நேரத்திற்குள் செயலாக்கப்படும்.

1 Min read
Raghupati R
Published : Aug 20 2025, 03:42 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ரிசர்வ் வங்கி அறிவிப்பு
Image Credit : Equitypandit

ரிசர்வ் வங்கி அறிவிப்பு

சேமிப்பு கணக்கில் காசோலை (Cheque) செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு, இனி 2 முதல் 3 நாட்கள் காத்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. இந்திய ரிசர்வ் வங்கி (RBI) முக்கியமான மாற்றத்தை அறிவித்துள்ளது. வரும் அக்டோபர் 4, 2025 முதல் காசோலை செலுத்தினால் அதே நாளிலேயே பணம் கணக்கில் வந்து சேரும்.

25
இந்திய ரிசர்வ் வங்கி
Image Credit : ANI

இந்திய ரிசர்வ் வங்கி

இந்திய ரிசர்வ் வங்கி இந்த முறையை Continuous Clearing and Settlement on Realization என்று பெயரிட்டுள்ளது. வாடிக்கையாளர் காசோலை வங்கியில் செலுத்தியவுடன், அது உடனடியாக ஸ்கேன் செய்யப்பட்டு கிளியரிங் ஹவுஸ் (Clearing House) நோக்கி அனுப்பப்படும். அங்கு நேரடியாக செயலாக்கம் நடைபெறும், மேலும் காசோலை எந்த வங்கியைச் சேர்ந்தது என்பதைத் தெரிந்தவுடன் அந்த வங்கி உடனடியாக சரிபார்க்க வேண்டும்.

Related Articles

Related image1
அதிர்ச்சி! 'நான் ரோபோட் இல்லை' என்று அழுத்துவதற்குள் உங்கள் வங்கி கணக்கு காலி! கேப்சா மோசடி பற்றித் தெரியுமா?
Related image2
இதை மட்டும் செய்யுங்க.! பேங்க பேலன்ஸ் ஆப்படியே இருக்கும்.! பணத்தை சேமிக்க ஸ்மார்ட் டிப்ஸ்.!
35
இரண்டு கட்டங்கள்
Image Credit : Social Media

இரண்டு கட்டங்கள்

இந்த முறை இரண்டு கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்படும். முதல் கட்டம் – அக்டோபர் 4, 2025 முதல் காலை 10 மணி முதல் மாலை 4 மணிக்குள் செலுத்திய காசோலை அதே நாளிலேயே செயலாக்கப்படும். மாலை 7 மணிக்குள் வங்கி பதில் அளிக்காவிட்டால், காசோலை தானாகவே அங்கீகரிக்கப்பட்டதாகக் கருதப்படும். இரண்டாம் கட்டம் – ஜனவரி 3, 2026 முதல் காசோலை 3 மணி நேரத்திற்குள் செயலாக்கப்பட வேண்டும், மேலும் அதில் பணம் வாடிக்கையாளர் கணக்கில் 1 மணி நேரத்திற்குள் சேர வேண்டும்.

45
காசோலை
Image Credit : ANI

காசோலை

இந்த மாற்றம் பொதுமக்களுக்கு மிகப் பெரிய சலுகை. இனி காசோலை வைப்பு செய்த பிறகு பல நாட்கள் காத்திருக்க வேண்டியதில்லை. குறிப்பாக தினசரி பணப்புழக்கம் (cash flow) தேவையான வியாபாரிகள் மற்றும் சிறு தொழிலாளர்களுக்கு இது மிகுந்த உதவியாக இருக்கும்.

55
செட்டில்‌மென்ட்
Image Credit : X

செட்டில்‌மென்ட்

வாடிக்கையாளர்கள் மட்டுமல்லாமல் வங்கிகளுக்கும் இது நன்மை பயக்கும். நேரடி கிளியரன்ஸ் மூலம் வங்கிகளின் செட்டில்‌மென்ட் அபாயம் குறையும். இதனால் முழு வங்கி அமைப்பும் வேகமாகவும் சீராகவும் இயங்கும்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வங்கி
இந்திய ரிசர்வ் வங்கி
இந்திய ரிசர்வ் வங்கி
வங்கிக் கணக்கு
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved