500 ரூபாய் சேமிச்சா.. சொளையா 25 லட்சம் கிடைக்கும்! போஸ்ட் ஆபீஸ் மேஜிக் திட்டம்!
போஸ்ட் ஆபிஸ் தொடர் வைப்பு நிதி (RD) திட்டம், ஆண்டுக்கு 6.7% வட்டியுடன், சிறு சேமிப்பை பெரிய தொகையாக மாற்ற ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது. 10 ஆண்டுகளில் லட்சக்கணக்கான ரூபாயை ஈட்ட முடியும் என்பதை இத்திட்டம் விளக்குகிறது.

போஸ்ட் ஆபிஸ் திட்டம்
சாமானிய மக்களும் கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்ற கனவை நனவாக்க அஞ்சலகம் (Post Office) ஒரு அற்புதமான சேமிப்புத் திட்டத்தை வழங்கி வருகிறது. அதுதான் போஸ்ட் ஆபிஸ் தொடர் வைப்பு நிதி (Recurring Deposit - RD) திட்டம்.
சிறு சிறு சேமிப்புகள் எப்படி ஒரு மிகப்பெரிய தொகையாக மாறுகிறது என்பதைப் விளக்குகிறது இந்தத் திட்டம்.
தற்போது போஸ்ட் ஆபீஸ் ஆர்.டி (RD) திட்டத்திற்கு ஆண்டுக்கு 6.7 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இதில் வட்டித் தொகையானது ஒவ்வொரு மூன்று மாதத்திற்கும் ஒருமுறை அசலுடன் சேர்க்கப்படுவதால், உங்கள் பணம் மிக வேகமாக வளரும்.
முதலீடு எப்படி லாபமாக மாறுகிறது?
நீங்கள் தினமும் ரூ.500 சேமிப்பதாக வைத்துக்கொள்வோம். ஒரு மாதத்திற்கு (30 நாட்கள்) உங்கள் சேமிப்பு ரூ.15,000 ஆகும்.
ஆண்டு காலத்திற்கு நீங்கள் கட்டும் மொத்தத் தொகை ரூ.9 லட்சம். வட்டி சுமார் ரூ.1.70 லட்சம். முதிர்வுத் தொகை (Maturity) சுமார் ரூ.10.70 லட்சம் கிடைக்கும்.
இந்தத் திட்டத்தை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்தால், அதன் பலன் இரட்டிப்பாகும். அப்போது நீங்கள் கட்டும் மொத்தத் தொகை: ரூ.18 லட்சம். வட்டி மட்டும் சுமார் ரூ.7.60 லட்சம். 10 வருடம் கழித்து உங்கள் கையில் கிடைக்கும் தொகை சுமார் ரூ.25.60 லட்சம்!
திட்டத்தின் சிறப்பு அம்சங்கள்
மாதம் வெறும் ரூ.100 முதல் சேமிக்கத் தொடங்கலாம். அதிகபட்ச வரம்பு எதுவும் இல்லை. 10 வயது நிறைந்த குழந்தைகள் கூட பாதுகாவலர் உதவியுடன் கணக்கைத் தொடங்கலாம்.
கணக்கு தொடங்கி 1 வருடம் முடிந்த பிறகு, உங்கள் சேமிப்பில் 50% வரை கடனாகப் பெறலாம். 3 ஆண்டுகளுக்குப் பிறகு கணக்கை மூடி பணத்தைப் பெற்றுக்கொள்ளும் வசதியும் உண்டு.
இது மத்திய அரசின் திட்டம் என்பதால் உங்கள் பணத்திற்கு 100% உத்தரவாதம் உண்டு.
யாருக்கெல்லாம் இது உதவும்?
குழந்தைகளின் உயர்கல்வி, திருமணம் அல்லது உங்களது ஓய்வுக்காலத் தேவைக்காகப் பெரிய தொகையைச் சேர்க்க நினைப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு. மாதம் ரூ.15,000 கட்ட முடியாதவர்கள், தினமும் ரூ.100 அல்லது ரூ.200 என உங்கள் வசதிக்கேற்ப சேமிப்பைத் தொடங்கலாம்.
நீங்கள் மாதச் சம்பளம் வாங்குபவர் என்றால், மறந்துவிடாமல் இருக்க 'Auto-Debit' வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இன்றே உங்கள் அருகிலுள்ள அஞ்சலகத்திற்குச் சென்று அல்லது ஆன்லைன் மூலம் இந்தச் சேமிப்பைத் தொடங்குங்கள். சிறு துளி பெருவெள்ளம் என்பது உங்கள் சேமிப்பிற்கும் பொருந்தும்!
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

