MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • நவம்பர் 30-க்கு முன் இதை செய்யுங்க.. இல்லாவிட்டால் வங்கி கணக்கு முடக்கப்படும்.. எந்த வங்கி.?

நவம்பர் 30-க்கு முன் இதை செய்யுங்க.. இல்லாவிட்டால் வங்கி கணக்கு முடக்கப்படும்.. எந்த வங்கி.?

நவம்பர் 30, 2025-க்குள் e-KYC புதுப்பிக்கப்படாவிட்டால், வங்கி கணக்குகள் தற்காலிகமாக முடக்கப்பட்டு, அனைத்து பரிவர்த்தனைகளும் நிறுத்தப்படும். வாடிக்கையாளர்கள் கிளை, மொபைல் ஆப் அல்லது இணைய வங்கி மூலம் KYC-ஐ எளிதாகப் புதுப்பிக்கலாம்.

2 Min read
Raghupati R
Published : Nov 28 2025, 09:36 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
கணக்கு முடக்கம்
Image Credit : Getty

கணக்கு முடக்கம்

சம்பளம் வருவது, பில் கட்டுவது, குழந்தைகளின் கட்டணங்கள் செலுத்துவது என அனைத்தும் வங்கி கணக்கு மீதே நாம் செய்கிறோம். இந்த நிலையில், திடீரென உங்கள் கணக்கில் ஒரு ரூபாயை கூட எடுத்துக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டால் எப்படி இருக்கும்? இதே சூழலில் கோடிக்கணக்கான பிஎன்பி (PNB) வாடிக்கையாளர்கள் சிக்கிக்கொள்ளக்கூடும், காரணம் ஒரு சிறிய வேலை e-KYC அப்டேட் ஆகும். இந்த செயல்முறை புறக்கணிக்கப்பட்டால், கணக்கு முடக்கப்படும் என்ற கடும் எச்சரிக்கை வங்கியால் வெளியிடப்பட்டுள்ளது.

25
சேமிப்பு கணக்கு அபாயம்
Image Credit : our own

சேமிப்பு கணக்கு அபாயம்

பஞ்சாப் நேஷனல் பேங்க் (PNB) தனது கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு அவசர எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. வரும் நவம்பர் 30, 2025-க்குள் e-KYC புதுப்பிக்கப்படாத நிலையில், அவர்களின் சேமிப்பு கணக்குகள் தற்காலிகமாக முடக்கப்படும் என்று வங்கி அறிவித்துள்ளது. அதாவது பணம் எடுப்பது, பரிமாற்றம் செய்வது உள்ளிட்ட எந்தப் பரிவர்த்தனையும் செய்ய முடியாது. காலக்கெடு கடந்தவுடன் செயல்படாத நிலைக்கு மாற்றப்படும் எனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

Related Articles

Related image1
டிஏ 50% கடந்தது… உடனடி DA Merger வருமா? மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிக்குமா ஜாக்பாட்.?
Related image2
மாதம் ரூ.6,800 வரை வருமானம்.. ரிஸ்க் இல்லாமல் கிடைக்கும் வருமானம்.. சிறந்த சேமிப்பு திட்டம்
35
பஞ்சாப் நேஷனல் பேங்க்
Image Credit : Asianet News

பஞ்சாப் நேஷனல் பேங்க்

KYC என்பதன் பொருள் “உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள்”. வாடிக்கையாளர்களின் அடையாளம் மற்றும் முகவரி சரியாக உள்ளதா என்பதை வங்கி உறுதி செய்யும் கட்டாய செயல்முறை இது. மோசடி, பணமதிப்பு, நிதி குற்றங்களை தடுப்பதற்காக KYC அவசியமானது. வாடிக்கையாளரின் தகவல்கள் பழையதாக இருந்தால் அல்லது புதுப்பிக்கப்படவில்லை என வங்கி கண்டறிந்தால், அடிக்கடி KYC கேட்டுக்கொள்ளப்படுகிறது.

45
பிஎன்வாடிக்கையாளர்கள்
Image Credit : Social Media

பிஎன்வாடிக்கையாளர்கள்

PNB வாடிக்கையாளர்களுக்கு KYC புதுப்பிப்பதற்காக பல எளிய முறைகள் வழங்கப்பட்டுள்ளன. அருகிலுள்ள கிளைக்கு சென்று ஆவணங்களை அளிக்கலாம். ஆதார், PAN, முகவரி சான்று, புகைப்படம், பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் ஆகியவை எடுத்துச் செல்ல வேண்டும். இது தவிர, PNB ONE மொபைல் ஆப் வழியாகவோ, இணைய வங்கி சேவை மூலமாகவோ KYC செய்யலாம். சிலருக்கு தேவையானால், நகல்களை வங்கி கிளையின் மின்னஞ்ச ஆவணங்களுக்கு அல்லது அஞ்சல் மூலம் அனுப்ப முடியும்.

55
PNB e-KYC ஆன்லைன்
Image Credit : Social Media

PNB e-KYC ஆன்லைன்

உங்கள் KYC நிலை புதுப்பிக்கப்பட்டதா என்பதை வீட்டிலிருந்தே அறியவும் முடியும். PNB இன் இணைய வங்கி தளத்தில் உள்நுழைந்து ‘Personal Settings’ அல்லது ‘Profile’ பகுதியில் KYC நிலையை சரிபார்க்கவும் என்பதைக் கிளிக் செய்தால், உங்கள் நிலை உடனே தெரியும். KYC நிலுவையில் இருந்தால் அலர்ட் வரும்; KYC முடிந்திருந்தால் ‘KYC Updated’ என தெளிவாகக் காட்டப்படும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வங்கி
வங்கிக் கணக்கு
PNB (வங்கி)
வாடிக்கையாளர் அறிதல் (KYC)
Latest Videos
Recommended Stories
Recommended image1
டிஏ 50% கடந்தது… உடனடி DA Merger வருமா? மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிக்குமா ஜாக்பாட்.?
Recommended image2
மாதம் ரூ.6,800 வரை வருமானம்.. ரிஸ்க் இல்லாமல் கிடைக்கும் வருமானம்.. சிறந்த சேமிப்பு திட்டம்
Recommended image3
Govt Free Training: இளைஞர்களுக்கு தொழில் தொடங்க இலவச பயிற்சி! சொந்த காலில் நிற்க விரும்புவோருக்கு அட்டகாசமான வாய்ப்பு.!
Related Stories
Recommended image1
டிஏ 50% கடந்தது… உடனடி DA Merger வருமா? மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிக்குமா ஜாக்பாட்.?
Recommended image2
மாதம் ரூ.6,800 வரை வருமானம்.. ரிஸ்க் இல்லாமல் கிடைக்கும் வருமானம்.. சிறந்த சேமிப்பு திட்டம்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved