MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • வெறும் 55 ரூபாய் போதும்! சிறு விவசாயிகளுக்கு மத்திய அரசு வழங்கும் பென்ஷன் திட்டம்!

வெறும் 55 ரூபாய் போதும்! சிறு விவசாயிகளுக்கு மத்திய அரசு வழங்கும் பென்ஷன் திட்டம்!

பிரதான் மந்திரி கிசான் மந்தன் யோஜனா திட்டத்தில் 18 முதல் 40 வயதுடைய விவசாயிகள் சேரலாம். அவர்களுக்கு 60 வயது ஆகும்போது, மாதம்தோறும் வங்கிக் கணக்கில் 3000 ரூபாய் ஓய்வூதியம் கிடைக்கும்.

2 Min read
Author : SG Balan
Published : Sep 03 2024, 04:38 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

பிரதமரின் கிசான் மாந்தன் யோஜனா 18 முதல் 40 வயதுடைய விவசாயிகளுக்கு உதவும் நோக்கில் செயல்படுகிறது. இந்தத் திட்டத்தில் சேரும் விவசாயிகள் வயது 60 வயதை எட்டும்போது, ​​ஒவ்வொரு மாதமும் 3000 ரூபாய் ஓய்வூதியமாகக் கிடைக்கும். இந்தத் தொகை அவரது வங்கிக் கணக்கிலேயே நேரடியாகச் செலுத்தப்படும்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
27

மாநில அரசுடன் இணைந்து மத்திய அரசும் நாட்டின் ஏழை மக்களுக்கு நிதிப் பாதுகாப்பு அளிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மத்திய அரசு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

37

அந்த வகையில் விவசாயிகளுக்காக சிறப்பாக மத்திய அரசால் செயல்படுத்தப்படும் பிரதமரின் கிசான் மந்தன் திட்டம் பற்றித் தெரிந்துகொள்ளலாம். இத்திட்டம் நாட்டின் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கான ஓய்வூதியத் திட்டம் ஆகும்.

47
PM kisan

PM kisan

பிரதான் மந்திரி கிசான் மந்தன் யோஜனா திட்டத்தில் 18 முதல் 40 வயதுடைய விவசாயிகள் சேரலாம். அவர்களுக்கு 60 வயது ஆகும்போது, மாதம்தோறும் வங்கிக் கணக்கில் 3000 ரூபாய் ஓய்வூதியம் கிடைக்கும். இத்தொகை முதலீடு செய்யும் பணத்தைப் பொறுத்து மாறுபடும்.

57

மேலும், இத்திட்டத்தில் விவசாயி ஒருவர் இறந்துவிட்டால், ஓய்வூதியத்தில் 50 சதவீதம் அவரது மனைவிக்கு குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும். இறந்தவரின் கணவன் அல்லது மனைவிக்கு மட்டுமே இந்தக் குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும்.

67

இந்தத் திட்டத்தின் கீழ், விவசாயிகள் ஒவ்வொரு மாதமும் ரூ.55 முதல் ரூ.200 வரை டெபாசிட் செய்ய வேண்டும். விவசாயி எந்த தொகையை டெபாசிட் செய்கிறார்களோ, அதே தொகையை அவரது பெயரில் மத்திய அரசும் டெபாசிட் செய்யும். இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் ரூ.3000 ஓய்வூதியம் பெற முடியும்.

77

ஒரு விவசாயி 18 வயதில் இத்திட்டத்தில் சேர்ந்தால், ஒவ்வொரு மாதமும் ரூ.55 டெபாசிட் செய்ய வேண்டும். 40 வயதில் இணைந்தால் ஒவ்வொரு மாதமும் ரூ.200 டெபாசிட் செய்ய வேண்டும். இத்திட்டத்தின் பலன்களைப் பெற, விவசாயிக்கு ஆதார் அட்டை மற்றும் வங்கிக் கணக்கு அல்லது பிரதமரின் கிசான் திட்டக் கணக்கு இருக்க வேண்டும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
ஓய்வூதியம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
RBI: ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கி கணக்கு இருந்தால் ரூ.10,000 அபராதம்? ஆர்பிஐ ரூல்ஸ் சொல்வது என்ன?
Recommended image2
Irctc Rules: ரயிலை தவறவிட்டால் அதே டிக்கெட்டில் வேறு ரயிலில் பயணிக்கலாமா? ரீஃபண்ட் கிடைக்குமா?
Recommended image3
Atal Pension: அடல் ஓய்வூதியத் திட்டத்தில் இனி மாதம் ரூ.10,000 ஓய்வூதியம்? மத்திய அரசு தீவிர பரிசீலனை
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved