MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • இனி நம்ப ஊர்ல பவர் கட்டே இருக்காது! ஏன் தெரியுமா?

இனி நம்ப ஊர்ல பவர் கட்டே இருக்காது! ஏன் தெரியுமா?

என்டிபிசி ரூ.3.32 லட்சம் கோடி முதலீட்டில் அணுமின் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. உலகளாவிய நிறுவனங்களின் ஆதரவுடன் 2047க்குள் 100 ஜிகாவாட் அணுமின் உற்பத்தி இலக்கை எட்டும் முயற்சியில் இறங்கியுள்ளது. 

2 Min read
Vedarethinam Ramalingam
Published : Jul 07 2025, 11:03 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
என்டிபிசி ரூ.3.32 லட்சம் கோடி முதலீடு
Image Credit : google

என்டிபிசி ரூ.3.32 லட்சம் கோடி முதலீடு

இந்தியாவின் மிகப்பெரிய மின்சாரம் தயாரிக்கும் நிறுவனமான என்டிபிசி 3 லட்சத்து 32 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யவுள்ளதால் தொழில்துறைக்கு தேவையான மின்சாரம் பல மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்தியாவின் மிகப்பெரிய மின்சாரம் தயாரிக்கும் நிறுவனமான என்டிபிசி, நிலக்கரி அடிப்படையிலான மின்சாரத்தை குறைத்து மாற்று முறையில் மின்சார உற்பத்தியை தொடங்கியுள்ளது. அனல் மின் திட்டத்திற்கு மாற்றாக அணுமின் திட்டங்களில் கால்பதிக்க திட்டமிட்டுள்ள நிலையில் அதற்கு சர்வதேச நிறுவனங்கள் ஆதரவு கரம் நீட்ட தயாராக உள்ளன.

25
வெளிநாட்டு நிறுவனங்கள் உதவி
Image Credit : google

வெளிநாட்டு நிறுவனங்கள் உதவி

அணுமின் திட்டங்களில் முதலீடு செய்வதற்கான ஆர்வத்தை அமெரிக்கா, தென் கொரியா, பிரான்ஸ் மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. கடந்த மாதம் என்டிபிசி ‘Expression of Interest’ (EOI) அழைப்பை வெளியிட்டு, உலக அணுமின் துறை முன்னணியாளர்களிடமிருந்து பதில்களை பெற்றுள்ளது.இந்த புதிய அணுமின் திட்டங்கள் மூலம் 2047 வரை அணுமின் உற்பத்தி திறனை 100 ஜிகாவாட்டுக்கு அதிகரிக்க திட்டமிட்டுள்ளது என்டிபிசி. தற்போது, சுமார் 8 ஜிகாவாட்டின் உற்பத்தி மட்டுமே நாட்டில் உள்ளது. இதனை இரட்டிப்பாக உயர்த்தும் நோக்கில், Brookfield கட்டுப்பாட்டில் உள்ள Westinghouse, தென் கொரியாவின் KEPCO, பிரான்ஸின் EDF மற்றும் ரஷ்யாவின் Rosatom போன்ற நிறுவனங்கள் முன்வந்துள்ளன. இவர்களுடன் தொழில்நுட்ப பரிமாற்றம், புதிய அணு உலைகளை அமைத்தல், இயக்கம், பராமரிப்பு உள்ளிட்ட பணிகளில் என்டிபிசி உடன்படிக்கைகளை மேற்கொள்ளப்போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

Related Articles

Related image1
ரிலையன்ஸ் சூரிய மின்பலகை உற்பத்தி | 20 ஜிகாவாட் இலக்கு
Related image2
இந்தியாவில் நிலக்கரி அடிப்படையிலான மின் உற்பத்தி அதிகரிப்பு!
35
அட்டகாசமான தொடக்கம்! செம திட்டம்!
Image Credit : google

அட்டகாசமான தொடக்கம்! செம திட்டம்!

ராஜஸ்தானின் பாலைவன பகுதியில் மகி பன்ஸ்வாரா அணுமின் திட்டம் மிக விரைவில் கட்டுமான பணிகளுக்கு முன்னுரிமை அளித்து செயல்பட உள்ளது. அதற்கான சுற்றுச்சூழல் மற்றும் காட்டுப் பாதுகாப்பு அனுமதிகளை கடந்த மார்ச் மாதத்தில் பெற்றுவிட்டது. அண்மையில் கடைசி அனுமதிகளைப் பெற்ற பிறகு, முதற்கட்ட கற்கோள் நிர்வாக வேலைகள் தொடங்க உள்ளன. ஒவ்வொரு ஆறுமாதங்களுக்கும் கூடுதல் உலைகளை இயக்கத்தில் கொண்டு வர திட்டம் உள்ளது. முழுமையான கட்டுமானம் 6 ஆண்டுகள் வரை நீடிக்கக்கூடும்.

45
மின் உற்பத்திக்காக இவ்ளோ முதலீடா!
Image Credit : google

மின் உற்பத்திக்காக இவ்ளோ முதலீடா!

உலக வங்கியும், ஏசியன் டெவலப்மென்ட் வங்கியும் இத்திட்டங்களுக்கு நிதியுதவி செய்ய முன்வந்துள்ளன. அணுமின் உற்பத்தி செலவு $20 பில்லியன் முதல் $40 பில்லியன் வரை ஆகலாம் என வல்லுநர்கள் கூறுகின்றனர். இந்திய ரூபாய் மதிப்பில் அணுமின் உற்பத்தி செலவு ரூ.1.66 இலட்சம் கோடி முதல் ரூ.3.32 இலட்சம் கோடி வரை இருக்கலாம்.

55
இனி தட்டுப்பாடே இருக்காது! அப்படித்தானே!
Image Credit : google

இனி தட்டுப்பாடே இருக்காது! அப்படித்தானே!

NTPC நிறுவனம் தமிழ்நாட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது, குறிப்பாக கடலூர், தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் தங்களுடைய திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. இதனால் தமிழகத்தில் மின் உற்பத்தி அதிகரித்து மின் தட்டுப்பாடு இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.இந்தியாவின் அடிப்படை மின்சாரம் தேவை நிறைவேற்றும் முக்கிய திட்டமாக இது கருதப்படுகிறது.இந்த முன்னேற்றங்களால் அணுமின் துறையில் இந்தியா உலக அரங்கில் புதிய சாதனைகள் படைக்கும் வகையில் ஒரு மைல் கல்லாக அமைந்திருக்கிறது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
மின் தடை
வணிகம்
முதலீடு
இந்தியா
தொழில்

Latest Videos
Recommended Stories
Recommended image1
டிரம்புடன் போனில் பேசிய பிரதமர் மோடி! வர்த்தக பேச்சுவார்த்தைக்கு மத்தியில் முக்கிய ஆலோசனை!
Recommended image2
புதிய தொழிலாளர் சட்டத்தால் 'டேக் ஹோம்' சம்பளம் குறையுமா? மத்திய அரசு விளக்கம்!
Recommended image3
அடேங்கப்பா! ரயிலில் மூத்த குடிமக்களுக்கு இவ்வளவு சலுகையா.. முழு விவரம்! நோட் பண்ணிக்கோங்க!
Related Stories
Recommended image1
ரிலையன்ஸ் சூரிய மின்பலகை உற்பத்தி | 20 ஜிகாவாட் இலக்கு
Recommended image2
இந்தியாவில் நிலக்கரி அடிப்படையிலான மின் உற்பத்தி அதிகரிப்பு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved