- Home
- Business
- NHAI Toll Exemption: இனி இவர்களின் கார்களுக்கு இலவச டோல் இல்லையா? மத்திய அரசின் புதிய திட்டம்
NHAI Toll Exemption: இனி இவர்களின் கார்களுக்கு இலவச டோல் இல்லையா? மத்திய அரசின் புதிய திட்டம்
NHAI Toll Exemption: புதிய விதிகள் அமலுக்கு வந்தால், பாதுகாப்பு மற்றும் அவசர சேவை வாகனங்கள் மட்டும் டோல் விலக்கு பெறும் சூழல் உருவாகலாம். எதிர்காலத்தில் அவசர மற்றும் பாதுகாப்பு சேவை வாகனங்களுக்கு மட்டுமே விலக்கு அளிக்கப்பட வாய்ப்புள்ளது.

டோல் கேட்களில் புதிய விதிகள்
தேசிய நெடுஞ்சாலை டோல் கேட்களில் நீண்ட நாட்களாக பேசப்பட்டு வரும் விஐபி கலாச்சாரத்திற்கு கட்டுப்பாடு வரப்போகிறதா என்ற கேள்வி மீண்டும் எழுந்துள்ளது. மத்திய அரசு தற்போது தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் டோல் விலக்கு பட்டியலில் பெரிய மாற்றங்களை பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக அரசு அதிகாரிகள் பயன்படுத்தும் வாகனங்களுக்கு வழங்கப்படும் இலவச டோல் சலுகை கட்டுப்படுத்தப்படலாம் என்ற தகவல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
ரூ.1,799-க்கு இத்தனை வசதியா! Voice Assist + FM Radio உடன் அறிமுகம் ஆன ஐடெல் ஆக்வா
டோல் கட்டண விலக்கு
தற்போது தேசிய நெடுஞ்சாலைகளில் சில குறிப்பிட்ட பிரிவுகளுக்கு டோல் கட்டண விலக்கு நடைமுறையில் உள்ளது. உயர்மட்ட அரசு பதவியாளர்கள், பாதுகாப்பு வாகனங்கள் மற்றும் சில அதிகாரப்பூர்வ சேவை வாகனங்கள் இந்த சலுகையைப் பெறுகின்றன. ஆனால் இந்த பட்டியல் மிகவும் விரிவடைந்ததால், பொதுமக்கள் இடையே அதிருப்தியும் அதிகரித்துள்ளது.
இறந்தவரின் ஏடிஎம் கார்டை பயன்படுத்தலாமா.? இந்த தவறை செய்தால் ஜெயிலுக்கு போகணும்.!
மத்திய அரசு திட்டம்
இந்த நிலையை ஆய்வு செய்த உயர்மட்ட குழு, டோல் விலக்கு விதிகளில் கட்டுப்பாடு அவசியம் என பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஒரே நேரத்தில் முழுமையான மாற்றம் செய்யாமல், கட்டங்களாக விலக்கு பட்டியல் குறைக்கப்படலாம். முதற்கட்டமாக மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகள் பயன்படுத்தும் வாகனங்களே இந்த மாற்றத்தின் கீழ் வரக்கூடும்.
தேசிய நெடுஞ்சாலை
மத்திய அரசின் நோக்கம் வெறும் வருவாய் உயர்த்துவது மட்டுமல்ல. டோல் கேட்களில் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படும் விஐபி கலாச்சாரத்தை குறைப்பது முக்கிய இலக்காக பார்க்கப்படுகிறது. இதற்காக பல துறை மாநிலங்களையும் அரசுகளையும் பாஸ்டேக் ஆண்டு பாஸ் பயன்படுத்த ஊக்குவிக்கும் முயற்சியும் நடைபெற்று வருகிறது. தற்போது இந்த பாஸ் ஒரு ஆண்டு அல்லது 200 டோல் பயணங்களுக்கு செல்லுபடியாக உள்ளது.
டோல் விலக்கு வாகனங்கள்
இன்றைய விதிப்படி, பாதுகாப்பு படைகள், தீயணைப்பு துறை, அவசர சேவை மற்றும் ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்களுக்கு டோல் விலக்கு வழங்கப்படுகிறது. புதிய திட்டம் அமலுக்கு வந்தால், எதிர்காலத்தில் அவசர மற்றும் பாதுகாப்பு சேவை வாகனங்கள் மட்டுமே விலக்கு பெறும் சூழல் உருவாகலாம். அதனால், டோல் கேட்களில் சமத்துவம் நோக்கிய புதிய அத்தியாயம் தொடங்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

