MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • அரசின் இந்த திட்டத்தில் ஒருமுறை முதலீடு செய்தால் போதும்.. மாதம் ரூ.5000 வருமானம் பெறலாம்..

அரசின் இந்த திட்டத்தில் ஒருமுறை முதலீடு செய்தால் போதும்.. மாதம் ரூ.5000 வருமானம் பெறலாம்..

தபால் அலுவலக திட்டங்களில் மிகவும் பிரபலமான திட்டம் தான் மாதாந்திர சேமிப்பு திட்டம் ஆகும்.

1 Min read
Ramya s
Published : Nov 23 2023, 11:40 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

பொதுமக்களுக்கு பணத்தை சேமிக்க உதவும் வகையில் மத்திய அரசு பல்வேறு சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அரசின் திட்டங்கள் என்பதால் இதுபோன்ற திட்டங்களில் முதலீடு செய்வது பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. அந்த வகையில் தபால் அலுவலக திட்டங்களில் மிகவும் பிரபலமான திட்டம் தான் மாதாந்திர சேமிப்பு திட்டம்.

28
Post Office Monthly Income Scheme's limit increased

Post Office Monthly Income Scheme's limit increased

இந்த திட்டத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்வதன் மூலம் ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தொகையை வட்டியாக பெறலாம். பணம் பாதுகாப்பாக இருப்பதுடன், ஒவ்வொரு மாதமும் உத்திரவாத வருமானமாக வட்டி கிடைக்கும் என்பதால் இது சிறந்த திட்டங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

38

வாடிக்கையாளர்கள் தங்கள் வசதிக்கேற்ப முதலீடு செய்யும் பல சிறு சேமிப்பு திட்டங்களை தபால் அலுவலகங்கள் மூலம் மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதுபோன்ற திட்டங்களில் மாதாந்திர சேமிப்பு திட்டமும் ஒன்று. இந்த திட்டத்திற்கு தற்போது 7.4% வட்டி வழங்கப்படுகிறது.

48

அதன்படி திட்டத்தில் கணக்கு வைத்திருப்பவர் ரூ.1,000 முதல் ரூ.9 லட்சம் வரையிலும், கூட்டுக் கணக்கில் ரூ.15 லட்சம் வரையிலும் முதலீடு செய்யலாம்.

58

உதாரணமாக தபால் அலுவலக சேமிப்பு திட்டத்தில் ஒருவர் ரூ.9 லட்சம் முதலீடு செய்தால், அவருக்கு 7.4% வட்டியில் ரூ.5,325 மாத வருமானம் கிடைக்கும்.இந்த திட்டத்தின் முதிர்வு காலத்திற்கு பின் மீண்டும் 9 லட்சத்தை திரும்ப பெறலாம். 

68

இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள். ஒரு வருடத்தை முடிக்கும் முன் கணக்கை முன்கூட்டியே மூட முடியாது. ஒரு வருடத்திற்கு பிறகு முன்கூட்டியே மூடினால் அபராதம் விதிக்கப்படும்.

78

எடுத்துக்காட்டாக, தபால் அலுவலக எம்ஐஎஸ் கணக்கில் அதிகபட்சமாக ரூ.9 லட்சம் வரை முதலீடு செய்தால், பதவிக்காலம் முடியும் வரை ஒவ்வொரு மாதமும் மாதாந்திர வட்டியைப் பெறுவீர்கள்.

88

ஐந்தாண்டு காலத்தின் முடிவில் ரூ.9 லட்சம் வைப்புத் தொகையைப் பெறுவீர்கள். இடைப்பட்ட காலத்தில் முதலீட்டு தொகையை பெற முடியாது. எனினும் அரசு உத்தரவாதம் அளிக்கும் திட்டம் என்பதால் இது பாதுகாப்பான திட்டமாக கருதப்படுகிறது.

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved