- Home
- Business
- Money Saving Tips: மாசக் கடைசியில் பர்ஸ் காலியாகிடுதா? சம்பளம் கையில் நிற்க இந்த 3 பணச்சேமிப்பு டிப்ஸ் போதும்
Money Saving Tips: மாசக் கடைசியில் பர்ஸ் காலியாகிடுதா? சம்பளம் கையில் நிற்க இந்த 3 பணச்சேமிப்பு டிப்ஸ் போதும்
Money Saving Tips: மாதக் கடைசியில் பணம் இல்லாமல் சிரமப்படுகிறீர்களா? 24 மணி நேர விதி, கணக்கு பிரிப்பு உள்ளிட்ட 3 எளிய பணச்சேமிப்பு வழிகளை தெரிந்துகொள்ளுங்கள்.

மாதக் கடைசியில் பணம் இல்லாமல் போகாமல்
சம்பளம் வந்தவுடன் மொத்த பணத்தையும் செலவு செய்யக்கூடிய தொகையாக நினைப்பது மாதக் கடைசியில் சிக்கலை ஏற்படுத்தலாம். வாடகை, இஎம்ஐ, மின்சாரம், உணவு, போக்குவரத்து போன்ற தவிர்க்க முடியாத செலவுகளுக்கு முதலில் பணத்தை ஒதுக்க வேண்டும். அதன் பிறகு சேமிப்பு மற்றும் விருப்ப செலவுகளுக்கான தொகையை பிரிப்பது பணத்தை கட்டுப்பாட்டுடன் பயன்படுத்த உதவும். இதில் முதலில் முயற்சி செய்ய வேண்டியது 24 மணி நேர விதி.
சம்பளம் சேமிப்பது எப்படி?
ரூ.2,000-க்கு மேல் மதிப்புள்ள, உடனடியாக தேவையில்லாத பொருளை வாங்க வேண்டும் என்ற ஆசை வந்தால், உடனே பணம் செலுத்தாமல் 24 மணி நேரம் காத்திருக்கலாம். ஒரு நாள் கழித்து அந்த பொருள் உண்மையில் தேவையா அல்லது அந்த நேரத்தில் ஏற்பட்ட ஆசையால் வாங்க நினைத்தோமா என்று மீண்டும் யோசிக்கலாம். இந்த சிறிய இடைவெளி தேவையற்ற வாங்குதல்களை குறைக்க உதவும். குறிப்பாக இணையதளங்களில் அடிக்கடி பொருட்களை வாங்குபவர்களுக்கு இந்த விதி பயனுள்ளதாக இருக்கும்.
School Holidays: ஆகஸ்ட் கடைசி வாரம் 5 நாள் லீவு! எந்தெந்த தேதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை?
மாத செலவு கட்டுப்பாடு
அடுத்ததாக செலவுகளுக்கான பணத்தை பிரித்து வைப்பது முக்கியம். வாடகை, இஎம்ஐ மற்றும் பில்களுக்கான தொகையை ஒரு தனி கணக்கில் வைத்துக்கொள்ளலாம். தினசரி உணவு, பயணம் மற்றும் சிறிய செலவுகளுக்கென மற்றொரு கணக்கை பயன்படுத்தலாம். இதனால் செலவு செய்யக்கூடிய பணம் எவ்வளவு இருக்கிறது என்பது தெளிவாக தெரியும். ஒரு கணக்கில் இருக்கும் மொத்த தொகையையும் செலவு செய்யும் பழக்கத்தையும் இதன் மூலம் கட்டுப்படுத்த முடியும்.
பண மேலாண்மை
மூன்றாவதாக சம்பள உயர்வு அல்லது போனஸ் கிடைக்கும்போது முழுத் தொகையையும் வாழ்க்கைமுறை செலவுகளுக்கு பயன்படுத்தாமல் இருப்பது நல்ல பழக்கம். கூடுதல் வருமானத்தின் ஒரு பகுதியை சேமிப்பு அல்லது உங்கள் நிதி இலக்குகளுக்கு ஒதுக்கலாம். முதலீடு செய்யும் முன் அதன் அபாயங்கள், கால அளவு மற்றும் உங்கள் நிதி நிலையை புரிந்துகொள்வது அவசியம். குறிப்பாக எஸ்ஐபி போன்ற முதலீடுகள் அனைவருக்கும் ஒரே மாதிரியாக பொருந்தும் என்று கருதக்கூடாது.
தேவையற்ற செலவுகளை குறைப்பது எப்படி
இதனுடன் பயன்படுத்தாத ஓடிடி மற்றும் செயலி சந்தாக்களை ரத்து செய்வது, சிறியதாக இருந்தாலும் தொடர்ந்து சேமிப்பது, வாடகை மற்றும் காப்பீடு போன்ற வழக்கமான செலவு தொகை தானியங்கி பணப்பரிமாற்றம் அமைப்பது போன்ற நடவடிக்கைகளையும் மேற்கொள்ளலாம். எதிர்பாராத செலவுகளுக்காக தனியாக அவசரகால நிதியையும் உருவாக்குவது நல்லது. முதலில் ரூ.500 அல்லது ரூ.1,000 என்று சிறிய தொகையில் தொடங்கினாலும் பரவாயில்லை. முக்கியமானது, “முதலில் சேமிப்பு, பிறகு செலவு” என்ற பழக்கத்தை உருவாக்குவதுதான்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

