MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • நடுத்தர மக்களுக்கு நல்ல செய்தி! மளிகை, ஜவுளி விலை கண்டிப்பாக குறைய போகுது! ஆடிக்கு முன்பே தள்ளுபடியா?

நடுத்தர மக்களுக்கு நல்ல செய்தி! மளிகை, ஜவுளி விலை கண்டிப்பாக குறைய போகுது! ஆடிக்கு முன்பே தள்ளுபடியா?

மத்திய அரசு அத்தியாவசியப் பொருட்களின் ஜிஎஸ்டி விகிதங்களைக் குறைக்க பரிசீலித்து வருகிறது. 12% வரி அடுக்கு நீக்கப்படலாம் அல்லது 5%க்குக் குறைவாகக் கொண்டுவரப்படலாம். இதனால், பற்பசை, சமையல் பாத்திரங்கள், ஆடைகள் உள்ளிட்ட பல பொருட்களின் விலை குறையும்.

2 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Jul 04 2025, 09:44 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
குஷியோ !குஷியோ! என்ன சங்கதி தெரியுமா?
Image Credit : X

குஷியோ !குஷியோ! என்ன சங்கதி தெரியுமா?

மத்திய அரசு தொடர்ச்சியாக நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களுக்கு நிவாரணம் அளிக்கக் களமிறங்கி வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு, மத்திய பட்ஜெட் அறிவிப்பில் வருமான வரியில் சலுகைகள் அறிவிக்கப்பட்டது. தற்போது அதன் தொடர்ச்சியாக, பொதுமக்கள் தினமும் பயன்படுத்தும் பொருட்களின் விலை குறைய, ஜிஎஸ்டி விகிதங்களை மாற்றும் திட்டம் தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு வருகிறது.கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை 1 முதல் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. இதில் 12 சதவீத வரி அடுக்கில் பல அத்தியாவசியப் பொருட்கள் உள்ளன. அந்த வரி காரணமாக, ஒவ்வொரு குடும்பத்தின் மாதச் செலவில் பெரிதும் பாரம் ஏற்பட்டது. இந்நிலையில் தற்போது மத்திய அரசு எடுத்துள்ள முடிவு மக்களுக்கு நிச்சயமாக நன்மை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

25
முக்கிய ஆலோசனை என்ன?
Image Credit : AI IMAGE GENERATED WITH GEMINI

முக்கிய ஆலோசனை என்ன?

தற்போது பரிசீலனை நடப்பது இரண்டு வகையில்

  • 12 சதவீத வரி அடுக்கை முற்றிலுமாக நீக்குவது.
  • 12 சதவீத வரியில் உள்ள பொருட்களை 5 சதவீதத்துக்கு கீழ் மாற்றுவது.

இந்த மாற்றங்களில் எது உறுதி செய்யப்பட்டாலும், பொதுமக்களுக்கு நிவாரணம் உறுதி என்றே கூறலாம். காரணம், இப்போது 12 சதவீத ஜிஎஸ்டி கட்ட வேண்டிய பொருட்கள் பெரும்பாலும் நடுத்தர குடும்பங்கள் வாங்கும் அத்தியாவசியங்கள்.

Related Articles

Related image1
Google Pay, PhonePe, Paytm , UPI-ல் ₹2000-க்கு மேல் பரிவர்த்தனை செய்தால் GST விதிக்கப்படுமா? அரசு விளக்கம்!
Related image2
Gpay, PhonePe பயனர்களுக்கு சிக்கல்! ரூ.2000க்கு மேல் UPIல் பணம் அனுப்பினால் GST? விளக்கம் கொடுத்த அரசு
35
விலை குறையப் போகும் முக்கிய பொருட்கள்
Image Credit : SOCIAL MEDIA

விலை குறையப் போகும் முக்கிய பொருட்கள்

இந்த நடவடிக்கை நிறைவேற்றப்பட்டால், பற்பசை, பல் பொடி, குடைகள், தையல் இயந்திரங்கள், பிரஷர் குக்கர்கள், சமையலறை பாத்திரங்கள், அயன்பாக்ஸ், கீசர், சிறிய சலவை இயந்திரங்கள், சைக்கிள்கள், ரூ.1,000 வரை விலை கொண்ட ஆயத்த ஆடைகள், ரூ.500 முதல் ரூ.1,000 வரை விலை கொண்ட காலணிகள், எழுதுபொருட்கள், தடுப்பூசிகள், பீங்கான் ஓடுகள், விவசாய கருவிகள் போன்றவை மலிவாகக் கிடைக்கும். இவை அனைத்தும் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையில் தேவைப்படும் பொருட்கள் என்பதால், விலை குறைப்பு நேரடி நன்மையை தரும். ஒரு குடும்பம் மாதம் இந்த பொருட்களில் எதாவது ஒன்றையாவது வாங்கும் சூழல் காணப்படுகிறது. அதனால் செலவுகள் தாராளமாக குறையும்.

45
ஏன் இப்போது இந்த முடிவு?
Image Credit : our own

ஏன் இப்போது இந்த முடிவு?

அடுத்த சில மாதங்களில் பல மாநிலங்களில் தேர்தல்கள் நடைபெற உள்ளன. விலைவாசி உயர்வு பொதுமக்கள் மனதில் தவறான கருத்தை உருவாக்கும். அதனை சமநிலையில் வைத்திருக்கவும், மக்களின் நம்பிக்கையை பெறவும், அரசு இத்தகைய முடிவை விரைவாக எடுத்துள்ளது என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. மேலும், கடந்த சில ஆண்டுகளாக நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகமாக நடைபெறுவதுடன், வரி வசூலையும் சீரமைப்பது தேவையான சூழலாக உருவாகியுள்ளது. இதற்காகவே, ஜிஎஸ்டியை எளிமைப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

55
விரைவில் இறுதி முடிவு
Image Credit : our own

விரைவில் இறுதி முடிவு

இந்த முன்மொழிவு தற்போது ஆலோசனை நிலையில் உள்ளது. ஜிஎஸ்டி கவுன்சிலின் 56வது கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும். கூட்டத்திற்கு 15 நாட்களுக்கு முன்பு அறிவிப்பு செய்யவேண்டும் என்பதால், விரைவில் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என கூறப்படுகிறது.இந்த வரி குறைப்பு நடைமுறைக்கு வந்தால், 2017ல் ஜிஎஸ்டி அறிமுகமானபின் மிகப்பெரிய மாற்றங்களில் ஒன்று இது ஆகும். நடுத்தர மக்களுக்கு கிடைக்கும் நன்மை, அவர்களது தினசரி வாழ்க்கையை தாங்குதலாக மாற்றும் என்று நம்பப்படுகிறது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
ஆதாரத்தில் பிடித்தம் செய்யப்பட்ட வரி
மத்திய அரசு
வணிகம்
முதலீடு

Latest Videos
Recommended Stories
Recommended image1
பழைய தங்கத்தை விற்றால் லாபமா? மாற்றினால் லாபமா? உங்கள் பணத்தை மிச்சப்படுத்தும் ரகசியம் இதோ!
Recommended image2
வாங்கும் போது இனிக்கும், கட்டும் போது கசக்கும்.. தனிநபர் கடன் vs கிரெடிட் கார்டு EMI.. எது பெஸ்ட்..?
Recommended image3
கர்ப்பிணிகளுக்கு ஜாக்பாட் அறிவிப்பு.. ரூ.5000 அள்ளி கொடுக்கும் அரசு..! விண்ணப்பிப்பது எப்படி..?
Related Stories
Recommended image1
Google Pay, PhonePe, Paytm , UPI-ல் ₹2000-க்கு மேல் பரிவர்த்தனை செய்தால் GST விதிக்கப்படுமா? அரசு விளக்கம்!
Recommended image2
Gpay, PhonePe பயனர்களுக்கு சிக்கல்! ரூ.2000க்கு மேல் UPIல் பணம் அனுப்பினால் GST? விளக்கம் கொடுத்த அரசு
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved