MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • சொந்தமா கடை நடத்துறீங்களா? டீக்கடை முதல் திருமண மண்டபம் வரை... லைசென்ஸ் கட்டாயம்.! எவ்வளவு செலவாகும் தெரியுமா.?!

சொந்தமா கடை நடத்துறீங்களா? டீக்கடை முதல் திருமண மண்டபம் வரை... லைசென்ஸ் கட்டாயம்.! எவ்வளவு செலவாகும் தெரியுமா.?!

தமிழகத்தில் கிராம பஞ்சாயத்து பகுதிகளில் தொழில் செய்பவர்கள் அனைவரும் கட்டாயம் உரிமம் பெற வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. டீக்கடை முதல் திருமண மண்டபங்கள் வரை 119 வகையான தொழில்கள் இந்த உத்தரவின் கீழ் வருகின்றன. 

1 Min read
Vedarethinam Ramalingam
Published : Jul 29 2025, 06:53 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
தொழில் செய்ய உரிமம் பெறுவது கட்டாயம்
Image Credit : our own

தொழில் செய்ய உரிமம் பெறுவது கட்டாயம்

தமிழக அரசு, கிராம பஞ்சாயத்து பகுதிகளில் தொழில் செய்பவர்கள் கட்டாயம் உரிமம் (லைசென்ஸ்) பெற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு டீக்கடை முதல் பல்வேறு தொழில்கள் வரை அனைவருக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

24
புதிய சட்டம் அமல்
Image Credit : our own

புதிய சட்டம் அமல்

தமிழ்நாடு கிராம பஞ்சாயத்து வணிகம் அல்லது தொழில் உரிமம் வழங்குவதற்கான விதிகள்-2025 என்ற சட்டம் கடந்த சட்டசபை கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டு, கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்ததையடுத்து, அரசாணை வெளியிடப்பட்டு தற்போது அமலுக்கு வந்துள்ளது. இதன்படி, கிராம பகுதிகளில் தொழில் செய்பவர்கள் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி உரிமம் பெற வேண்டும்.

Related Articles

Related image1
தொழில் தொடங்க உரிமம் பெற கட்டணம் எவ்வளவு தெரியுமா.? தமிழக அரசு புதிய பட்டியல் வெளியீடு
Related image2
எத்தனை முறை அபராதம் செலுத்தினால் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும்?
34
எந்தெந்த தொழில்களுக்கு பொருந்தும்?
Image Credit : our own

எந்தெந்த தொழில்களுக்கு பொருந்தும்?

இந்த உத்தரவு, டிக்கடை, பழைய பேப்பர்கள் மற்றும் இரும்பு பொருட்கள் விற்பனை, கொரியர் சேவைகள், அச்சகம், இறைச்சி மற்றும் மீன் கடைகள், தையல் தொழில், சலவை கடைகள், திருமண மண்டபங்கள் உள்ளிட்ட 119 சேவை தொழில்களை உள்ளடக்கியது. இந்தத் தொழில்களுக்கு கிராம பஞ்சாயத்துக்கு ஏற்ப ரூ.500 முதல் ரூ.30,000 வரை உரிமக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

44
நோக்கம் மற்றும் எதிர்பார்ப்பு
Image Credit : F/mk stalin

நோக்கம் மற்றும் எதிர்பார்ப்பு

இந்தப் புதிய சட்டம், கிராமப்புறங்களில் உள்ள தொழில்களை ஒழுங்குபடுத்துவதற்கும், உரிமம் பெறுவதன் மூலம் அரசுக்கு வருவாய் ஈட்டுவதற்கும் உதவும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும், இது கிராமப்புற வணிகங்களின் தரத்தை மேம்படுத்துவதற்கும் பங்களிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
தமிழ்நாடு அரசு
மு. க. ஸ்டாலின்
தமிழ்நாடு
தமிழ்நாடு சட்டமன்றம்
தமிழ்நாடு அரசு

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved