MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • பெண்களுக்கு ரூ. 5 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கும் அரசு! உடனே அப்ளை பண்ணுங்க!

பெண்களுக்கு ரூ. 5 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கும் அரசு! உடனே அப்ளை பண்ணுங்க!

மத்திய அரசின் லக்பதி திதி யோஜனா திட்டத்தின் கீழ், பெண்களுக்கு 5 லட்சம் ரூபாய் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படுகிறது. இந்த திட்டம் குறித்து விரிவாக பார்க்கலாம். 

2 Min read
Author : Ramya s
Published : Dec 03 2024, 10:11 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Lakhpati Didi Yojana

Lakhpati Didi Yojana

மத்திய அரசு ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களுக்காக பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பல்வேறு மக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு அரசு இந்த திட்டங்களை கொண்டு வருகிறது. அரசின் பெரும்பாலான திட்டங்கள் ஏழைகள் மற்றும் ஆதரவற்றோருக்கானது. அரசின் இந்த இதிட்டங்கள் மூலம் லட்சக்கணக்கான மக்கள் பயனடைகின்றனர்.

அந்த வகையில் பெண்களுக்கு அதிகாரம் அளிக்க மத்திய அரசு தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் அனைத்து துறைகளிலும் பெண்களை ஊக்குவிக்கும் வகையில் அரசு பல்வேறு திட்டங்களை கொண்டு வருகிறது.

26
Lakhpati Didi Yojana

Lakhpati Didi Yojana

குறிப்பாக பெண்களை பொருளாதார ரீதியாக மேம்படுத்தும் புதிய திட்டத்தை இந்திய அரசு தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், பெண்களுக்கு 5 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது., அதுவும் வட்டியில்லா. இந்தத் திட்டத்தைப் பயன்படுத்தி பெண்கள் தங்கள் எப்படி தொழில் தொடங்கலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம். 

லக்பதி திதி யோஜனா என்ற திட்டத்தின் கீழ் அரசு 5 லட்சம் வழங்குகிறது. பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி லக்பதி திதி யோஜனா திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது.

36
Lakhpati Didi Yojana

Lakhpati Didi Yojana

இந்தத் திட்டத்தின் நோக்கம் பெண்களை பொருளாதார ரீதியாக மேம்படுத்துவதும், அவர்கள் தொழில் தொடங்க உதவுவதும் ஆகும். இத்திட்டத்தில் பயன்பெற, பெண்கள் சுயஉதவிக்குழுவில் சேர வேண்டும். 

பெரும்பாலும் கிராமப்புறங்களில் வாழும் பெண்களுக்காக உருவாக்கப்பட்டவை இந்த மகளிர் சுய உதவி குழுக்கள்.. ஒரு பெண் தன் சொந்த தொழிலைத் தொடங்க விரும்பினால், அவள் சுய உதவிக் குழு மூலம் தனது வணிகத் திட்டத்துடன் கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.

46
Lakhpati Didi Yojana

Lakhpati Didi Yojana

சுயஉதவி குழுக்களில் இணைவது அவசியம்

லக்பதி திதி திட்டத்தின் கீழ் பெண்கள் பயன்பெற, சுயஉதவி குழுவில் சேர வேண்டியது அவசியம். இந்த குழுவில் உள்ள பெண்களுக்கு அரசு மூலம் திறன் மேம்பாட்டு பயிற்சியும் அளிக்கப்படுகிறது. மேலும், அவர்களுக்கு நிதியுதவியும் வழங்கப்படுகிறது. இந்த பயிற்சியின் போது பெண்களின் திறன்கள் வளர்க்கப்படுகின்றன.

56
Lakhpati Didi Yojana

Lakhpati Didi Yojana

இந்த வழியில் கடனுக்கு விண்ணப்பிக்கவும்

லக்பதி திதி யோஜனா திட்டத்தின் கீழ், சுயஉதவி குழுவில் சேர்ந்த பிறகு, பெண் ஒரு வணிகத் திட்டத்தை உருவாக்க வேண்டும். அதன்பின், சுயஉதவிக்குழு மூலம் அந்த தொழில் திட்டம் அரசுக்கு அனுப்பப்படும். அரசு அதிகாரிகள் விண்ணப்பத்தை பரிசீலிப்பார்கள். அதன்பின், விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டால், 5 லட்சம் ரூபாய் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும்.

 

66
Lakhpati Didi Yojana

Lakhpati Didi Yojana

இதன் மூலம் பெண்கள் தங்கள் தொழிலை தொடங்கலாம். தொடர்ந்து வெற்றிகரமாக தங்கள் தொழிலை நடத்துவதன் மூலம் பெண்கள் பொருளாதார ரீதியில் சுதந்திரமாக செயல்படலாம். யாரையும் சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Airtel நெட்வொர்க் பயன்படுத்துறீங்களா..? இனி இந்த இலவச சேவையை பயன்படுத்த முடியாது.. நிறுவனம் அதிரடி
Recommended image2
ஏப்ரல் 1க்கு பிறகு சம்பளதாரர்களுக்கு ஆப்பு.. இந்த 14 முடிவுகள் உங்களை பாதிக்கும்.. உஷார்
Recommended image3
சிகரெட் விலை உச்சம்.. ஒரு சிகரெட்டுக்கு ரூ.8.50 உயர்வு.. அடேங்கப்பா! ஒரு பாக்கெட் இவ்வளவா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved