- Home
- Business
- Railways Fare Discount: ரயில் கட்டணத்தில் 75% வரை தள்ளுபடி.. இந்த பயணிகளுக்கு மட்டும் சூப்பர் சலுகை!
Railways Fare Discount: ரயில் கட்டணத்தில் 75% வரை தள்ளுபடி.. இந்த பயணிகளுக்கு மட்டும் சூப்பர் சலுகை!
Railways Fare Discount: ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு பெரிய நிதி நிம்மதி தரும் ஒரு சிறப்பு சலுகை அமைதியாக நடைமுறையில் உள்ளது. ஆனால் இந்த சலுகை யாருக்கு கிடைக்கும், எப்படி பெறுவது என்பது பலருக்கும் தெரியாத தகவலாகவே உள்ளது.

ரயில்வே கட்டண சலுகை
இந்திய ரயில்வே, மாற்றுத்திறனாளிகள் எளிதாகவும் பயணம் செய்யவும் பல்வேறு சலுகைகளை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ரயில் கட்டணத்தில் 25% முதல் 75% வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்தச் சலுகையைப் பெறுவதற்காக மாற்றுத்திறனாளர் சலுகை கார்டை ஆன்லைனிலேயே விண்ணப்பித்து பெறும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
யாரெல்லாம் இந்தச் சலுகையைப் பெறலாம்?
பார்வைத்திறன் குறைபாடு உள்ளவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் குறைபாடு உள்ளவர்கள், எலும்பியல் உடல் ஊனமுற்றோர் உள்ளிட்டோர் தகுதியான மாற்றுத்திறனாளிகள் இந்த கட்டணச் சலுகையைப் பெறலாம். மேலும், அவர் உதவியாளராக (எஸ்கார்ட்) பயணம் செய்யும் நபருக்கும் அதே அளவிலான கட்டணச் சலுகை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வசதி ரயில்வேயின் சமூகப் பொறுப்புணர்வை வெளிப்படுத்துகிறது.
ஆன்லைனில் எப்படி விண்ணப்பிப்பது?
விண்ணப்பதாரர்கள் மாவட்ட அரசு மருத்துவமனை வழங்கிய மாற்றுத்திறனாளி சான்றிதழ், அரசு மருத்துவமனை வழங்கிய ரயில்வே சலுகை சான்றிதழ், ஆதார் அட்டை, பிறப்புச் சான்றிதழ் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகிய ஆவணங்களைத் தயாராக வைத்திருக்க வேண்டும். பின்னர் இந்திய ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இந்த ஆவணங்களை பதிவேற்றி விண்ணப்பிக்கலாம். அனைத்து தகவல்களும் சரிபார்க்கப்பட்ட பிறகு சலுகை அட்டை வழங்கப்பட்டது, விண்ணப்பதாரருக்கு எஸ்எம்எஸ் மூலம் தகவல் அனுப்பப்படும்.
டிக்கெட் முன்பதிவிலும் சலுகை கிடைக்கும்
இந்த மாற்றுத்திறனாளர் சலுகை கார்டை பயன்படுத்தி ரயில் டிக்கெட்டை கவுண்டரிலும் ஆன்லைனிலும் முன்பதிவு செய்யலாம். இதன் மூலம் தகுதியான பயணிகள் குறைந்த செலவில் பாதுகாப்பாகவும் வசதியாகவும் பயணம் செய்ய முடியும். மாற்றுத்திறனாளிகளுக்கான சேவைகளை மேலும் மேம்படுத்தும் நோக்கில் இந்திய ரயில்வே தொடர்ந்து புதிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தகுதியுள்ளவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு அரசின் இந்த முக்கிய நலத்திட்டத்தின் பலனைப் பெறலாம்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

