ரயிலில் இரவில் செய்யக்கூடாத 8 விஷயங்கள்! உஷார் மக்களே!
நாட்டில் தினமும் கோடிக்கணக்கான மக்கள் ரயிலில் பயணம் செய்கிறார்கள். அவர்களின் பாதுகாப்பிற்காக இந்திய ரயில்வே பல விதிகளை உருவாக்கியுள்ளது. இரவில் எந்த பயணிக்கும் சிரமம் ஏற்படாத வகையில் தனி விதிகள் உள்ளன. இரவில் சில செயல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்திய ரயில்வே விதிகளின்படி, இரவு 10 மணிக்கு பிறகு இரவு விளக்குகளைத் தவிர மற்ற விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட வேண்டும். காலை 6 மணி வரை ரயிலின் பெட்டியில் தேவையற்ற சத்தம் எழுப்பவோ, உரத்த குரலில் பேசவோ, மொபைலில் அதிக சத்தத்தில் வீடியோ பார்க்கவோ அல்லது பாடல்கள் கேட்கவோ கூடாது. இந்த விதிகளை மீறி யாராவது புகார் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
ரயில் சார்ஜிங் பாயிண்ட்
ரயில்வே பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை சார்ஜிங் பாயிண்ட் மூடப்படும். தொடர்ச்சியான சார்ஜிங் காரணமாக தீ விபத்துகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, நீங்கள் மொபைலை சார்ஜ் செய்ய விரும்பினால், இரவு 11 மணிக்குள் செய்து விடுங்கள்.
போர்வை, தலையணை
நீங்கள் ஏசி கோச்சில் பயணம் செய்கிறீர்கள் என்றால், இரவில் எந்தவொரு அறிமுகமில்லாத நபரும் உங்களிடம் போர்வை, தலையணை கேட்டால், கவனமாக இருங்கள். ரயில்வே விதிகளின்படி, ரயில்வே ஊழியர்கள் மட்டுமே இந்த பொருட்களை வழங்க முடியும். யாராவது அப்படிச் செய்தால் உடனடியாக ரயில்வே போலீசுக்கு (RPF) அல்லது TTEக்குத் தெரிவிக்கவும்.
இந்திய ரயில்வே விதி
இந்திய ரயில்வே விதிகளின்படி, இரவில் கீழ் படுக்கையில் தூங்கும் பயணியை அடிக்கடி எழுப்பச் சொல்வது அல்லது தொந்தரவு செய்வது விதிகளுக்கு எதிரானது. இரவில் அனுமதி இல்லாமல் கீழ் படுக்கையில் உட்காருவது, கட்டாயமாக சீட் மாற்றுவது, அடிக்கடி எழுப்ப முயற்சிப்பது போன்ற புகார்கள் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
பெண் பயணி
இரவில் ரயிலில் பயணம் செய்யும் பெண் பயணிகளின் பாதுகாப்பிற்காக, பெண்கள் பெட்டியில் ஆண்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த பெட்டியை சுற்றி திரிவதும் குற்றம். அவ்வாறு செய்தால் தண்டனை கிடைக்கும்.
சட்டவிரோத விற்பனை
இந்திய ரயில்வேயில் இரவு நேரத்தில் சட்டவிரோத விற்பனையாளர்கள் எந்தப் பொருளையும் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. பல நேரங்களில் இந்த விற்பனையாளர்கள் போலியான அல்லது தரம் குறைந்த பொருட்களை விற்பனை செய்து பயணிகளை ஏமாற்றுகிறார்கள். அப்படிச் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும். இ-கேட்டரிங் சேவை மூலம் இரவில் உணவை முன்பதிவு செய்யலாம்.
மது அருந்தக்கூடாது
இந்திய ரயில்வேயில் எந்தவொரு பொது இடத்திலும் மது அருந்துவது அல்லது போதையில் பயணிகளை தொந்தரவு செய்வது தண்டனைக்குரிய குற்றம். யாராவது போதையில் காணப்பட்டால், இந்திய ரயில்வே சட்டம் 1989 பிரிவு 145ன் கீழ் அபராதம் அல்லது சிறை தண்டனை விதிக்கப்படலாம்.
TTE டிக்கெட்
இந்திய ரயில்வே விதிகளின்படி, இரவு 10 மணிக்கு பிறகு, TTE ரயிலில் பயணிகளின் டிக்கெட்டை பரிசோதிக்க வர முடியாது. அப்படி நடந்தால், பயணி ஆட்சேபம் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படலாம்.
பேங்க் அக்கவுண்ட் இருக்கா.. இதுதான் லிமிட்.. வீட்டுக்கே வரி நோட்டீஸ் வரும்!