MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • அம்பானி, அதானி, ரத்தன் டாடா இல்லை.. சொந்தமாக ரயிலை வைத்திருக்கும் ஒரே நபர் யார் தெரியுமா?

அம்பானி, அதானி, ரத்தன் டாடா இல்லை.. சொந்தமாக ரயிலை வைத்திருக்கும் ஒரே நபர் யார் தெரியுமா?

அம்பானி, அதானி, ரத்தன் டாடாவுக்கு சொந்தமாக ரயில் இல்லை. ஆனால் இந்த மனிதருக்கு ரயில் சொந்தமாக உள்ளது. இந்திய ரயில்வே செய்த சிறு தவறால், ஒரு விவசாயி முழு ரயிலுக்கும் சொந்தக்காரரானார். ரயில் நிலையத்தை பிடித்துக்கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

2 Min read
Author : Raghupati R
Published : Aug 30 2024, 01:46 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Farmer Becoming A Train Owner

Farmer Becoming A Train Owner

இந்திய ரயில்வே பயணிகளின் விருப்பமான போக்குவரத்து சாதனமாகும். அனைத்து தரப்பு மக்களும் பயணிக்கின்றனர். இந்திய ரயில்வே பொதுத்துறை நிறுவனமாகும், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. இந்திய ரயில்வேயின் பராமரிப்பு, பணியமர்த்தல் உள்ளிட்ட அனைத்து வகையான பணிகளையும் இந்திய அரசே செய்கிறது. எனவே தனியார் உரிமைக்கு இங்கு இடமில்லை.

28
Ambani

Ambani

இந்திய அரசே முழு உரிமையாளராக உள்ளது. ஆனால் இந்தியாவில் ஒரு நபரிடம் மட்டுமே ஒரு ரயிலின் உரிமை உள்ளது. அந்த நபர் மிகவும் பணக்காரர் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. அந்த நபர் நீங்கள் நினைப்பது போல் அதானி, அம்பானி குடும்பத்தினரிடம் ரயில்வே உரிமை இல்லை. ரத்தன் டாடாவிடம் கூட சொந்த ரயில் இல்லை. நீங்கள் விரும்பினால் உங்களுக்கென ஒரு தனியார் ஜெட் விமானத்தை வைத்திருக்கலாம்.

38
Adani

Adani

ஆனால் ரயில் வாங்க முடியாது. நாட்டின் பிரதமர் அல்லது குடியரசுத் தலைவருக்கு கூட எந்த சிறப்பு ரயில்களும் இல்லை. அப்படியானால், சொந்தமாக ரயில் வைத்திருக்கும் நபர் யார் என்று நீங்கள் யோசிக்கலாம். சொந்தமாக ரயில் வைத்திருக்கும் நபரின் பெயர் சம்புரன் சிங் (Sampuran Singh). பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவட்டத்தில் உள்ள கட்டானா என்ற கிராமத்தைச் சேர்ந்த விவசாயி.

48
Ratan Tata

Ratan Tata

2017 ஆம் ஆண்டில், சம்புரன் சிங் ஒரு ரயிலின் உரிமையாளரானார். தில்லியில் இருந்து அமிர்தசரஸ் செல்லும் ஸ்வர்ண சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலின் (Delhi-Amritsar Swarna Shatabdi Express) உரிமையாளரானார் விவசாயி சம்புரன் சிங். லூதியானா-சண்டிகர் ரயில் பாதை கட்டுமானத்திற்காக 2007 ஆம் ஆண்டில் விவசாயிகளிடமிருந்து விவசாய நிலம் வாங்கப்பட்டது. இந்த நேரத்தில், சம்புரன் சிங் தனது நிலத்தை இந்திய ரயில்வேக்கு வழங்கினார்.

58
Indian Railways

Indian Railways

ஒரு ஏக்கருக்கு ரூ.25 லட்சம் விலையில் ரயில்வே துறை விவசாயிகளிடமிருந்து நிலத்தை வாங்கியது. இதே விலையில் சம்புரன் சிங்கும் தனது நிலத்தை கொடுத்தார். ஆனால் சில நாட்களுக்குப் பிறகு, அருகிலுள்ள கிராமத்தில் ஒரு ஏக்கருக்கு ரூ.71 லட்சம் விலையில் ரயில்வே துறை நிலம் வாங்கியது சம்புரன் சிங்கிற்குத் தெரியவருகிறது.  தனக்கும் இதே அளவிலான இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று சம்புரன் சிங் நீதிமன்றத்தை அணுகினார்.

68
Train

Train

நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்த பிறகு, இந்திய ரயில்வே ரூ.25 லட்சத்தில் இருந்து ரூ.50 லட்சம் வரை இழப்பீடு வழங்க முன்வந்தது. பின்னர் இழப்பீட்டுத் தொகை ரூ.1.47 கோடியாக உயர்த்தப்பட்டது. 2015 ஆம் ஆண்டுக்குள் சம்புரன் சிங்கிற்கு அனைத்து இழப்பீட்டுத் தொகையையும் வழங்க உத்தர பிரதேச ரயில்வேக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. ரூ.42 லட்சம் வழங்கிய வடக்கு ரயில்வே, மீதமுள்ள ரூ.1.05 கோடியை வழங்கத் தவறியது.

78
Shatabdi Express Train

Shatabdi Express Train

நீதிமன்ற உத்தரவைப் பின்பற்ற வடக்கு ரயில்வே தவறியதால், 2017 ஆம் ஆண்டில் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஜஸ்பால் வர்மா, லூதியானா ரயில் நிலையத்தை பிடித்துக்கொள்ளுமாறு உத்தரவிட்டார். இதனுடன், ரயில் நிலைய அலுவலகத்தையும் பிடித்துக்கொள்ளுமாறு உத்தரவில் கூறப்பட்டது. உத்தரவின் நகலுடன் புறப்பட்ட சம்புரன் சிங், நிலைய நடைமேடையில் நின்று கொண்டிருந்த ஸ்வர்ண சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலை பிடித்துக்கொண்டு உரிமையாளரானார்.

88
Farmer

Farmer

இதன் மூலம் சம்புரன் சிங் ஒரு ரயிலின் உரிமையாளரானார். இதற்குப் பிறகு சிறிது நேரத்திலேயே ரயில்வே அதிகாரிகள் நீதிமன்றத்தின் மூலமாகவே ரயில் நிலையத்தை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டனர். செய்தி அறிக்கைகளின்படி, இந்த வழக்கின் விசாரணை இன்னும் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

ஆதார் இலவச அப்டேட் முதல் கேஸ் சிலிண்டர் விலை வரை.. செப்டம்பர் 1 முதல் ஏற்படப்போகும் 7 மாற்றங்கள்!

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
இந்திய இரயில்வே
ரத்தன் டாடா
ரயில்
தமிழ் செய்திகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
SBI வாடிக்கையாளர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்..! ATM பரிவர்த்தனை கட்டணத்தை உயர்த்திய ஸ்டேட் வங்கி..
Recommended image2
இந்தியாவின் நேரடி வரி வசூல் ₹18.38 லட்சம் கோடி..! டிரம்பின் வரி அடாவடியிலும் அசத்தல் வரப்பிரசாதம்..!
Recommended image3
SBI-யின் லக்கி ஆஃபர்! மாசம் ரூ. 610 கட்டினா ரூ. 1 லட்சம் உங்க கையில.. மிஸ் பண்ணிடாதீங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved