MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • வெறும் 100 ரூபாய்க்கு பங்குகளை வாங்கி கோடி கோடியாக குவித்த கிராம மக்கள்!

வெறும் 100 ரூபாய்க்கு பங்குகளை வாங்கி கோடி கோடியாக குவித்த கிராம மக்கள்!

அமல்னர் கிராம மக்கள் வெறும் 100 ரூபாய்க்கு பங்குகளை வாங்கி இன்று கோடீஸ்வரர்களாக மாறியுள்ளனர். அதுவும் ஒரே ஒரு நிறுவனத்தின் பங்குகளை மட்டுமே வாங்கியுள்ளனர். அவர்கள் எப்படி முதலீடு செய்தார்கள்? கிடைத்த லாபம் என்ன என்று விரிவாகப் பார்க்கலாம்.

2 Min read
SG Balan
Published : Nov 11 2024, 09:10 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Amalner, Maharastra, Wipro,

Amalner, Maharastra, Wipro,

நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்று விப்ரோ. நீண்ட காலமாக இந்நிறுவனத்தின் முதலீட்டாளர்கள் நல்ல லாபம் ஈட்டி வருகின்றனர். இந்நிலையில் தனியார் பங்கு நிறுவனமான பிரேம்ஜி இன்வெஸ்ட் 1.6 சதவீத பங்குகளை ரூ.4,757 கோடிக்கு திறந்த சந்தை பரிவர்த்தனை மூலம் வாங்கியுள்ளது. விப்ரோ தனது முதலீட்டாளர்களுக்கு போனஸ் பங்குகளை விநியோகிக்கும் நேரத்தில் இந்த ஒப்பந்தம் நடந்துள்ளது. இந்த போனஸ் பங்கின் அடிப்படையில், 40 ஆண்டுகளுக்கு முன், இந்நிறுவனத்தில், 100 ரூபாய் மட்டுமே முதலீடு செய்தவர்கள், இன்று 14 கோடி ரூபாய் போர்ட்ஃபோலியோ வைத்துள்ளனர்.

25

நவம்பர் 8, 2024 அன்று, வெள்ளிக்கிழமை, விப்ரோ பங்குகள் 0.92% லாபத்துடன் ரூ.568.60 இல் நிறைவடைந்தது. 2024-25 நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் விப்ரோவின் லாபம் 21.2% அதிகரித்து ரூ.3,208.8 கோடியாக உள்ளது. இந்த நிறுவனம் 1:1 விகிதத்தில் போனஸ் பங்குகளை வழங்குகிறது.

பங்குதாரர்களுக்கு ஒரு பங்குக்கு 2 ரூபாய் மதிப்புள்ள ஒரு பங்கு வழங்கப்படும். இந்த நிறுவனம் ஐடி துறையில் பணியாற்றுவதைத் தவிர, சோப்பு மற்றும் தாவர எண்ணெய் வணிகத்திலும் ஈடுபட்டுள்ளது.

35
Amalner, Maharastra, Wipro,

Amalner, Maharastra, Wipro,

விப்ரோ நிறுவனம் 1945ஆம் ஆண்டு மகாராஷ்டிராவின் அமல்னர் கிராமத்தில் தொடங்கப்பட்டது. தகவல்களின்படி, இந்த கிராமத்தில் உள்ள ஒவ்வொரு நபரும் விப்ரோவின் பங்குகளை வைத்திருக்கிறார்கள். இங்கு ஒரு குழந்தை பிறந்தவுடனேயே அதன் பெயரில் விப்ரோ பங்குகள் வாங்கப்படுகின்றன. இதன் மூலம் அமல்னர் கோடீஸ்வரர்களின் கிராமமாக இருந்து வருகிறது.

45

விப்ரோ பங்குகள் 40 ஆண்டுகளாக முதலீட்டாளர்களை பணக்காரர்களாக ஆக்கியுள்ளன. 1980ஆம் ஆண்டு அதன் ஒரு பங்கின் விலை ரூ.100 மட்டுமே. அப்போது அதில் ரூ.10,000 முதலீடு செய்தவர்களிடம் இன்று ரூ.1,400 கோடி உள்ளது. அதாவது, அன்று ஒருவர் வெறும் 100 ரூபாயை பங்குகளில் முதலீடு செய்திருந்தால், இன்று அவருடைய போர்ட்ஃபோலியோ ரூ.14 கோடியாக இருக்கும். இவ்வளவு அபரிமிதமான லாபத்துக்குக் காரணம், கடந்த 40 ஆண்டுகளாக இந்நிறுவனத்தின் போனஸ் பங்குகள், டிவிடெண்டுகள் போன்றவை முக்கியக் காரணம்.

55
Amalner, Maharastra, Wipro,

Amalner, Maharastra, Wipro,

2024 ஆம் ஆண்டுக்கு முன், விப்ரோ 2021 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் ஒரு பங்கிற்கு 1 ரூபாய் ஈவுத்தொகையை வழங்கியது. 40 ஆண்டுகளில், அதாவது 2021க்குள் ஈவுத்தொகை மூலம் மட்டும் முதலீட்டாளர்கள் ரூ.2.56 கோடி பெற்றுள்ளனர். தற்போது விப்ரோ பங்கு விலை ரூ.568.60 ஆக உள்ளது.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
முதலீடு

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved