MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • ரூ.1.67 கோடியை உடனே கட்டுங்க! கூலித்தொழிலாளிக்கு ஜிஎஸ்டி நோட்டீஸ்!

ரூ.1.67 கோடியை உடனே கட்டுங்க! கூலித்தொழிலாளிக்கு ஜிஎஸ்டி நோட்டீஸ்!

சென்னையை சேர்ந்த கூலித்தொழிலாளிக்கு ரூ.1.67 கோடி செலுத்த ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். 

2 Min read
Rayar r
Published : May 01 2025, 03:53 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

GST issued a notice to a Chennai wage laborer: வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள வெள்ளேரி கிராமத்தில் வசித்து வருபவர் கவிதா. இவர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் (MGNREGS) வேலை செய்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ.1.67 கோடி ஜிஎஸ்டி நிலுவையில் உள்ளதாகவும், அதை உடனே கட்டக்கோரியும் கவிதாவுக்கு ஜிஎஸ்டி நோட்டீஸ் வந்தது.அந்த ஜிஎஸ்டி நோட்டீசில் கவிதா சென்னையை தளமாகக் கொண்ட தர்ஷினி இண்டஸ்ட்ரீஸ் என்ற நிறுவனத்தின் பெயரில் ஜிஎஸ்டி நெட்வொர்க்கின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளார்.
 

24
GST Notice, Chennai

GST Notice, Chennai

கூலித்தொழிலாளிக்கு ஜிஎஸ்டி நோட்டீஸ்

கூலித் தொழிலாளியான கவிதா ரூ.1.67 கோடி ஜிஎஸ்டி நோட்டீசை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார். தனக்கு தவறாக ஜிஎஸ்டி நோட்டீஸ் விதிக்கப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ''2020ஆம் ஆண்டு கொரொனா ஊரடங்கு காலத்தில் என் மகன் என் மொபைல் போனில் ஆன்லைன் கேம் விளையாடிக் கொன்டிருந்தான். அப்போது அவன் பான் எண்ணை கேட்டபோது நான் கொடுத்தேன். ஆகவே எனது பான் எண்ணை போலியாக ஜிஎஸ்டி பதிவுக்கு பயன்படுத்தி இருக்கலாம் என கருதுகிறேன்'' என்றார்.

Related Articles

Related image1
ஒரே நாளில் டாஸ்மாக்கிற்கு டப்.! ரூ. 272 கோடியை குவித்து சாதனை படைத்த பத்திர பதிவு
Related image2
கரும்பு விவசாயிக்கு ரூ.1000 ஊக்கத்தொகை.! முதலமைச்சருக்கு பறந்த முக்கிய கோரிக்கை
34
GST notice to Chennai wage laborer

GST notice to Chennai wage laborer

பான் எண்ணை வைத்து மோசடி

தொடர்ந்து பேசிய அவர், ''தர்ஷினி இண்டஸ்ட்ரீஸ் என்ற எந்த நிறுவனத்துடனும் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. நான் ஒரு சாதாரண கூலித்தொழிலாளி. இது மிகப்பெரிய மோசடி'' என்று தெரிவித்து இருந்தார். போலீஸ் விசாரணையில் கவிதாவின் பான் எண்ணை வைத்து மோசடி நடந்துள்ளது தெரியவந்துள்ளது. அதாவது கவிதாவின் பான் கார்டு எண்ணை வைத்து நிறுவனம் ஒன்றை பதிவு செய்துள்ளனர். 

44
GST Notice

GST Notice

சென்னை நிறுவனம் மோசடி 

மேலும் விசாரணையில் மோசடியில் ஈடுபட்டது சென்னை வில்லிவாக்கத்தை மையமாக கொண்ட வர்த்தக நிறுவனமான தர்ஷினி இண்டஸ்ட்ரீஸ் என்பது தெரியவந்துள்ளது. இந்த நிறுவனம் ரூ.55.58 லட்சம் ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டி இருந்தது. ஆனால் அதை செலுத்த தவறியதால், ரூ.1.12 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. இதனால் செலுத்த வேண்டிய மொத்தத் தொகை ரூ.1.67 கோடியாக உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
தமிழ்நாடு
சென்னை

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved