தினமும் ரூ.5,000 அபராதம்.. தங்கக் கடனில் புதிய மாற்றம்.. ரிசர்வ் வங்கி அறிவிப்பு
தங்கம் மற்றும் வெள்ளி நகை கடன்களுக்கு ரிசர்வ் வங்கி புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இதன்படி, கடனைத் திருப்பிச் செலுத்திய பின் நகைகளைத் திரும்பத் தருவதில் தாமதம் ஏற்பட்டால் வங்கிகளுக்கு அபராதம் விதிக்கப்படும்.

ரூ.5,000 அபராதம்
தங்கம் அல்லது வெள்ளியை அடகு வைத்து பெற்ற கடனை வாடிக்கையாளர் திருப்பிச் செலுத்தியவுடன், வங்கி அந்தப் பொருட்களைத் திரும்பத் தர வேண்டும். தாமதித்தால், ஒரு நாளைக்கு ரூ. 5,000 அபராதம் செலுத்த வேண்டும். ரிசர்வ் வங்கியின் புதிய வழிகாட்டுதலின்படி, கடன்-மதிப்பு (LTV) விகிதம் மாற்றப்பட்டுள்ளது.
நகை கடன்
ரூ.2.5 லட்சம் வரையிலான கடன்களுக்கு LTV 75%ல் இருந்து 85% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின்படி, தங்கக் கட்டிகள் அல்லது வெள்ளிக் கட்டிகளை கடனுக்காக அடகு வைக்க முடியாது. தங்க, வெள்ளி ஆபரணங்கள், விளக்குகள், பாத்திரங்கள் போன்றவற்றை அடகு வைக்கலாம்.
வங்கி அபராதம்
புதிய வழிகாட்டுதலின்படி, தங்கம் மற்றும் வெள்ளியை அடகு வைப்பதற்கான வரம்புகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. தங்க நகைகள்: 1 கிலோ, தங்க நாணயங்கள்: 50 கிராம், வெள்ளி நகைகள்: 10 கிலோ.
ரிசர்வ் வங்கி
ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள இந்த புதிய வழிகாட்டுதல்கள் ஏப்ரல் 1, 2026 முதல் அமலுக்கு வரும். அனைத்து வங்கிகள், கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் NBFC-க்கள் இதைப் பின்பற்ற வேண்டும்.