MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Fact Check: புதிய 350 ரூபாய், 5 ரூபாய் நோட்டுகள் வந்திருக்கா? தீயாய் பரவும் போட்டோஸ்!

Fact Check: புதிய 350 ரூபாய், 5 ரூபாய் நோட்டுகள் வந்திருக்கா? தீயாய் பரவும் போட்டோஸ்!

RBI on new currency notes: இந்தியாவில் கரன்சி நோட்டுகளை வெளியிட இந்திய ரிசர்வ் வங்கிக்குதான் அதிகாரம் உள்ளது. இந்நிலையில் புதிய 350 ரூபாய் நோட்டுகளையும் 5 ரூபாய் நோட்டுகளையும் அறிமுகம் செய்திருப்பதாகத் தகவல் பரவி வருகிறது. இது உண்மையா என்று ஆர்பிஐ பதில் அளித்துள்ளது.

1 Min read
Author : SG Balan
| Updated : Jan 23 2025, 11:57 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
New Currency Notes

New Currency Notes

புதிய கரன்சி நோட்டுகள் வெளியாகியுள்ளதா? இந்தியாவில் கரன்சி நோட்டுகளை வெளியிட இந்திய ரிசர்வ் வங்கிக்குதான் அதிகாரம் உள்ளது. ரிசர்வ் வங்கி தேவைப்படும்போது புதிய நோட்டுகளை வெளியிடுகிறது. இந்நிலையில் புதிய 350 ரூபாய் நோட்டுகளையும் 5 ரூபாய் நோட்டுகளையும் அறிமுகம் செய்திருப்பதாகத் தகவல் பரவி வருகிறது. இது உண்மையா என்று ஆர்பிஐ பதில் அளித்துள்ளது.

25
Fake Currency Notes

Fake Currency Notes

2023ஆம் ஆண்டில், ரிசர்வ் வங்கி ரூ.2,000 நோட்டை வாபஸ் பெற்றது. இதனால் ரூ.500 ரூபாய் நோட்டு நாட்டின் மிகப்பெரிய மதிப்புள்ள கரன்சி நோட்டாக மாறியது. இந்நிலையில், தற்போது, ​​350 மற்றும் 5 ரூபாய் நோட்டுகள் ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்டதாகக் கூறி சில புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன.

35

ஆனால் வைரலாகும் படங்கள் புதியவை அல்ல. இதே போன்ற படங்கள் மூன்று ஆண்டுகளுக்கு முன்பே வெளிவந்தன. இவை அனைத்தும் போலியான ரூபாய் நோட்டுகள். புதிய ரூபாய் நோட்டு எதையும் ரிசர்வ் வங்கி வெளியிடவில்லை. தற்போது ரூ.5, ரூ.10, ரூ.20, ரூ.50, ரூ.100, ரூ.200 மற்றும் ரூ.500 நோட்டுகள் மட்டுமே உள்ளன.

45
Fake Currency Notes

Fake Currency Notes

புதிதாக வடிவமைக்கப்பட்ட ரூ.5 நோட்டுகள் எதுவும் ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படவில்லை. 2 மற்றும் 5 ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை ரிசர்வ் வங்கி நிறுத்தியுள்ளது. ஆனால் சந்தையில் தற்போதுள்ள நோட்டுகள் தொடர்ந்து செல்லுபடியாகின்றன.

55
Fake Currency Notes

Fake Currency Notes

"இந்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படும் ஒவ்வொரு ரூபாய் நோட்டுகளும் (ரூ. 2, ரூ. 5, ரூ. 10, ரூ. 20, ரூ. 50, ரூ. 100, ரூ. 200, ரூ. 500), புழக்கத்தில் இருக்கும் வரை எந்த இடத்திலும் செல்லுபடியாகும்" என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி சட்டம், 1934 இன் பிரிவு 26 இன் மூலம் இதற்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் என்று ஆர்பிஐ கூறுகிறது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
இந்திய ரிசர்வ் வங்கி
இந்திய ரிசர்வ் வங்கி

Latest Videos
Recommended Stories
Recommended image1
ரூ.20 கட்டினால் ரூ.2 லட்சம் காப்பீடு.. ஏழை, நடுத்தர குடும்பங்களுக்கு பாதுகாப்பு திட்டம்
Recommended image2
ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. இனி டிக்கெட் புக் செய்தால் கேஷ்பேக்.. சூப்பர் ஆஃபர்!
Recommended image3
இந்த 5 விஷயங்கள் நடந்தால்.. உங்கள் வங்கி கணக்கை பயன்படுத்த முடியாது.. உடனே செக் பண்ணுங்க
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved