டிமார்ட்டின் அசுர வளர்ச்சி.. பங்கு விலை ராக்கெட் வேகத்தில் புதிய உச்சம்?
டிமார்ட் நிறுவனம் வெறும் 4 நாட்களில் 500 கடைகள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளது. இந்த அதிவேக வளர்ச்சியால், நிறுவனத்தின் பங்கு விலை உயர்ந்து, நிறுவனர் ராதாகிஷன் தமானியின் சொத்து மதிப்பு ரூ.16,100 கோடி அதிகரித்துள்ளது.

டிமார்ட் நிறுவனம்
டிமார்ட் நிறுவனம் வெறும் 4 நாட்களில் 478 கடைகளிலிருந்து 500 கடைகளாக கிளைகளை விரிவுபடுத்தியுள்ளது. லக்னோ, புனே, சென்னை முதல் ஒடிசா, உத்தரகாண்ட் வரை புதிய கிளைகள் திறக்கப்பட்டுள்ளன. இந்த அதிவேகமான வளர்ச்சிதான் முதலீட்டாளர்களை ஈர்த்துள்ளது.
டிமார்ட் நிறுவனர் ராதாகிஷன் தமானி
பங்கு விலை உயர்ந்ததால், நிறுவனர் ராதாகிஷன் தமானி மற்றும் அவரது குடும்பத்தின் சொத்து மதிப்பு இரண்டே நாட்களில் ரூ.16,100 கோடி அதிகரித்துள்ளது. இது நிறுவனத்தின் மீதான சந்தை நம்பிக்கையை வலுப்படுத்துகிறது.
85 புதிய கடைகள்
CLSA நிறுவனம், ஒரு பங்கின் விலை ரூ.6,583 வரை செல்ல வாய்ப்புள்ளதாக கணித்துள்ளது. மோர்கன் ஸ்டான்லி தனது இலக்கை ரூ.4,552 ஆக உயர்த்தியுள்ளது. அடுத்த ஆண்டுக்குள் 85 புதிய கடைகளைத் திறக்கலாம் என்றும் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
முதலீட்டாளர்கள்
ஏப்ரல் 2 அன்று சந்தை 1,500 புள்ளிகள் சரிந்தபோதும், டிமார்ட் பங்குகள் 0.55% உயர்ந்து ரூ.4,294.40-க்கு வர்த்தகமாகிறது. இது முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
ராக்கெட் வேகத்தில் புதிய உச்சம்
பங்கு விலை 8% உயர்ந்தாலும், அதன் 52 வார உச்சநிலையிலிருந்து இன்னும் 12% குறைவாகவே உள்ளது. எனவே, பழைய உச்சத்தைத் தொட்டு, அதைத் தாண்டிச் செல்லவும் வாய்ப்புள்ளது என நிபுணர்கள் கூறி வருகின்றனர்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

