- Home
- Business
- குட் நியூஸ் வருது.. மத்திய அரசு ஊழியர்கள் காத்திருக்கும் முக்கிய அறிவிப்பு.. டிஏ அப்டேட்
குட் நியூஸ் வருது.. மத்திய அரசு ஊழியர்கள் காத்திருக்கும் முக்கிய அறிவிப்பு.. டிஏ அப்டேட்
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி (டிஏ) உயர்வு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நீண்ட நாட்களாக காத்திருக்கும் ஒரு முக்கிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அது அகவிலைப்படி (டிஏ) மற்றும் அகவிலைப்படி நிவாரணம் (டிஆர்) உயர்வு பற்றிய அறிவிப்பாகும். பொதுவாக ஆண்டுக்கு இரண்டு முறை இந்த உயர்வு அறிவிக்கப்படும். ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களை கொண்டு இந்த உயர்வு அமல்படுத்தப்படும். ஆனால் 2026 ஜனவரி மாதத்திற்கான டிஏ உயர்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள்
பொதுவாக ஹோலி திருவிழா காலத்தில் மத்திய அரசு டிஏ உயர்வை அறிவிப்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு ஹோலி கடந்தும் எந்த அறிவிப்பும் வராததால் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்த முறை டிஏ சுமார் 2 சதவீதம் உயரக்கூடும் என்ற கணிப்பு வெளியாகியுள்ளது. தற்போது 58 சதவீதமாக உள்ள டிஏ, இந்த உயர்வு அமலாகினால் 60 சதவீதமாக அதிகரிக்கும்.
டிஏ உயர்வு
டிஏ உயர்வு கணக்கிடப்படுவது தொழில்துறை தொழிலாளர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீடு (AICPI-IW) என்ற தரவின் அடிப்படையில் தான். கடந்த 12 மாதங்களின் சராசரி மதிப்பைக் கொண்டு டிஏ உயர்வு தீர்மானிக்கப்படுகிறது. பணவீக்கம் அதிகரிக்கும் சூழலில், ஒவ்வொரு முறையும் டிஏ உயர்வு அறிவிக்கப்படுவது அரசு ஊழியர்களுக்கு கூடுதல் நிதி உதவியாக இருக்கும். இதேபோல் ஓய்வூதியதாரர்களுக்கும் டிஆர் என்ற பெயரில் இதே அளவு உயர்வு வழங்கப்படும்.
அடிப்படை சம்பளம்
உதாரணமாக, ஒரு ஊழியரின் அடிப்படை சம்பளம் ரூ.30,000 என்றால், தற்போது 58% டிஏ அடிப்படையில் அவருக்கு மாதம் ரூ.17,400 அகவிலைப்படி கிடைக்கிறது. இதனால் மொத்த சம்பளம் ரூ.47,400 ஆக இருக்கும். டிஏ 2% உயர்ந்து 60% ஆக மாறினால், அகவிலைப்படி ரூ.18,000 ஆகும். அதாவது மாதம் கூடுதலாக ரூ.600 அதிகரிக்கும்.
மத்திய அரசு
மேலும் அடிப்படை சம்பளம் ரூ.50,000 என்றால், தற்போது 58% டிஏ அடிப்படையில் ரூ.29,000 அகவிலைப்படி கிடைக்கிறது. மொத்தம் ரூ.79,000 சம்பளம் இருக்கும். டிஏ 2% உயர்ந்து 60% ஆன பிறகு, அகவிலைப்படி ரூ.30,000 ஆக அதிகரிக்கும். இதனால் மாத சம்பளம் ரூ.80,000 ஆகும். இருப்பினும் இந்த உயர்வு குறித்து மத்திய அரசு எப்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது என்பது குறித்து இன்னும் தெளிவான தகவல் வெளியாகவில்லை.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

