MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • ஒரு நாளைக்கு இதான் லிமிட்.. பேங்கில் பணம் போடுவதற்கு முன்பு.. விதிகளை நோட் பண்ணுங்க

ஒரு நாளைக்கு இதான் லிமிட்.. பேங்கில் பணம் போடுவதற்கு முன்பு.. விதிகளை நோட் பண்ணுங்க

அரசு மற்றும் வருமான வரித்துறை கருப்புப் பணத்தைத் தடுக்க ரொக்கப் பரிவர்த்தனைகளை தீவிரமாகக் கண்காணிக்கின்றன. இந்த விதியை மீறினால், பெறப்பட்ட தொகைக்கு சமமான அபராதம் விதிக்கப்படும்.

2 Min read
Raghupati R
Published : Nov 06 2025, 12:21 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
பணம் டெபாசிட் லிமிட்
Image Credit : Asianet News

பணம் டெபாசிட் லிமிட்

இன்றைய டிஜிட்டல் காலத்தில் அரசு மற்றும் வருமான வரித்துறை ரொக்க பரிவர்த்தனைகளை கடுமையாக கண்காணித்து வருகிறது. இதன் நோக்கம் கருப்புப் பணம் மற்றும் வரி ஏய்ப்பை தடுக்கச் செய்வது. பெரும்பாலானோர் அறியாமல் பெரிய அளவில் ரொக்கப் பரிவர்த்தனைகள் செய்வதுண்டு. ஆனால், இவை சட்டப்படி தவறாகிவிடும் அபாயம் உள்ளது. எனவே, ரொக்க வரம்பு குறித்த விதிகளை தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.

24
வருமான வரி சட்டம்
Image Credit : our own

வருமான வரி சட்டம்

வருமான வரி சட்டம் பிரிவு 269ST படி, ஒரே நாளில் ஒரு நபரிடமிருந்து ரூ.2 லட்சத்தைத் தாண்டி ரொக்கமாக பெறுவது தடைசெய்யப்பட்டுள்ளது. இதுவே பரிசு, கடன், வணிகம் அல்லது வேறு எந்த காரணத்திற்காக இருந்தாலும் விதிமுறை மீறல் என கருதப்படும். உதாரணமாக, ஒருவர் ரூ.3 லட்சம் ரொக்கமாக பெற்றால், அந்தத் தொகை வரித்துறையால் கைப்பற்றப்படலாம், மேலும் காரணம் கூறுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

Related Articles

Related image1
டெலிட் பண்ணுங்க இல்லைன்னா பணம் போயிடும்! கூகுள் வெளியிட்ட பயங்கர எச்சரிக்கை.. ஆண்ட்ராய்டு, ஐபோன் பயனர்களே உஷார்!
Related image2
உங்களிடம் ரூ.500 நோட்டு இருக்கா.? ரிசர்வ் வங்கி எச்சரிக்கை.!
34
அபராதம் எவ்வளவு?
Image Credit : our own

அபராதம் எவ்வளவு?

ஒரு ஆண்டில் ரூ.10 லட்சத்தைத் தாண்டி வங்கியில் ரொக்கமாக வைப்பு செய்தல், ரூ.1 லட்சத்தை மீறி கிரெடிட் கார்டு பில் செலுத்துதல், ரூ.30 லட்சத்திற்கும் மேற்பட்ட சொத்து வாங்குதல் அல்லது விற்பனை, ரூ.50,000-ஐ மீறும் ரொக்க பரிசு பெறுதல் போன்றவை அனைத்தும் வரித்துறை கண்காணிப்பில் உள்ளன. மேலும், வணிகம் மேற்கொள்ளும் நபர்கள் ரூ.2 லட்சத்தை மீறி ரொக்கமாக பணம் பெற்றாலும் அந்த விதிமுறை மீறல் ஆகும். பிரிவு 269ST-ஐ மீறினால், பெற்ற ரொக்கத் தொகைக்கு சமமான அபராதம் விதிக்கப்படும்.

44
வங்கி பரிவர்த்தனைகள்
Image Credit : Asianet News

வங்கி பரிவர்த்தனைகள்

உதாரணமாக, ரூ.2.5 லட்சம் ரொக்கமாக பெற்றால், அதே அளவு ரூ.2.5 லட்சம் அபராதமாக செலுத்த வேண்டியிருக்கும். இது ஊழியர், வணிகர், தொழில்முனைவர் என அனைவருக்கும் பொருந்தும். பெரிய பரிவர்த்தனைகள் அனைத்தையும் வங்கி அல்லது டிஜிட்டல் வழியே மேற்கொள்ளுங்கள். அனைத்து செலவுகளுக்கும் ரசீது அல்லது பதிவு வைத்திருங்கள். பரிசு அல்லது கடனுக்கான பரிமாற்றம் எழுதப்பட்ட ஆவணமாக இருக்கட்டும். அவசியமான நேரங்களில் மட்டுமே ரொக்கப் பரிவர்த்தனை செய்ய வேண்டும். அரசு டிஜிட்டல் இந்தியாவை நோக்கி நகரும் நிலையில், வங்கி பரிவர்த்தனைகள் உங்கள் பணத்தையும் வரியையும் பாதுகாக்கும்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வருமான வரி
வங்கி
வங்கிக் கணக்கு
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved