MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Apparel Crisis: டிரஸ் விலை ராக்கெட் வேகத்துல ஏறப்போகுது; ஈரான் போரால் உலக ஜவுளி சந்தை ஸ்தம்பிப்பு!

Apparel Crisis: டிரஸ் விலை ராக்கெட் வேகத்துல ஏறப்போகுது; ஈரான் போரால் உலக ஜவுளி சந்தை ஸ்தம்பிப்பு!

Apparel Crisis: ஈரான் போரால் பாலியஸ்டர், பருத்தி, நூல் மற்றும் ரசாயனங்களின் விலை உயர்ந்துள்ளது. இதனால் டிரஸ் விலை, உற்பத்தி மற்றும் இந்திய ஏற்றுமதிக்கு ஏற்படும் தாக்கம் என்ன? என்பதை பார்க்கலாம்.

3 Min read
Author : Raghupati R
Published : Sep 14 2026, 10:23 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
12
டிரஸ் விலை உயர்வு
Image Credit : pinterest

டிரஸ் விலை உயர்வு

ஈரான் போர் இப்போது போர்க்களத்தை தாண்டி உலக ஜவுளித் தொழிலின் செலவுக் கணக்கிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. கச்சா எண்ணெய் விலை உயர்வு, மத்திய கிழக்கில் ஏற்பட்ட விநியோகச் சிக்கல்கள் மற்றும் சரக்கு போக்குவரத்து செலவு அதிகரிப்பு ஆகியவை பாலியஸ்டர் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் பெட்ரோலியம் சார்ந்த மூலப்பொருட்களின் விலையை உயர்த்தியுள்ளது. இதன் நேரடி தாக்கம் நூல் உற்பத்தி முதல் ஆடை தயாரிப்பு வரை சென்று கொண்டிருக்கிறது. ராய்ட்டர்ஸ் செய்தி அறிக்கையின்படி, இந்தியாவின் முக்கிய பாலியஸ்டர் நூல் உற்பத்தியாளர்களில் ஒன்றான ஃபிலாடெக்ஸ், பி.டி.ஏ மற்றும் எம்.ஐ.ஜி போன்ற முக்கிய மூலப்பொருட்களை வாங்குவதற்கு முன்பைவிட கிட்டத்தட்ட 30 சதவீதம் அதிகம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆடை தயாரிப்பு நிறுவனங்களின் செலவுக் கணக்கு வேகமாக மாறி வருகிறது.

இதில் அதிகம் பேசப்படும் பிரச்சினையாக மாறியுள்ளது பாலியஸ்டர் விலை உயர்வு. தொழில்துறை தகவல்களின்படி, போர் தொடங்கிய பிறகு பாலியஸ்டர் விலை சுமார் 25 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. செயற்கை நாரை அதிகம் பயன்படுத்தும் ஆடை தயாரிப்பாளர்களுக்கு இது நேரடி செலவுச் சுமையாக மாறியுள்ளது. பிரச்சினை பாலியஸ்டருடன் மட்டும் நின்றுவிடவில்லை. பருத்தி விநியோகத்திலும் ஏற்பட்ட சிக்கல்கள் உற்பத்தியாளர்களுக்கு கூடுதல் அழுத்தத்தை கொடுத்துள்ளன. அதனுடன் நூல், சாயம், இரசாயனப் பொருட்கள், பேக்கிங் பொருட்கள் மற்றும் தொழில்துறை எரிவாயு உள்ளிட்ட பல்வேறு உற்பத்தி உள்ளீடுகளின் செலவுகளும் அதிகரித்துள்ளன. ஒரு ஆடையை தயாரிப்பதற்கான ஒவ்வொரு கட்டத்திலும் செலவு உயரும்போது, ​​இறுதியில் அந்த சுமையை யார் ஏற்கப் போகிறார்கள் என்ற கேள்வி எழுகிறது.

இந்த தாக்கம் தமிழகத்தின் முக்கிய ஆடை உற்பத்தி மையமான திருப்பூரிலும் எதிரொலித்துள்ளது. மேற்காசிய நெருக்கடியை தொடர்ந்து மூலப்பொருட்களின் விலை அதிகரித்து, பின்னலாடை உற்பத்தியாளர்கள் தங்கள் தயாரிப்புகளின் விலையை உயர்த்த வேண்டிய சூழல் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சில உற்பத்தியாளர்கள் பின்னலாடை விலையை சுமார் 7 சதவீதம் வரை உயர்த்தியதாகவும், சாயமிடும் பணிக்கான கட்டணங்களும் அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே கடுமையான போட்டி நிலவும் இந்த தொழிலில் லாப வரம்பு அதிகமாக இல்லை. எனவே மூலப்பொருள் மற்றும் உற்பத்திச் செலவு தொடர்ந்து உயர்ந்தால், முழு சுமையையும் உற்பத்தியாளர்களே தாங்குவது சிரமமாகிவிடும். விலையை உயர்த்தினால் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு வாடிக்கையாளர்களை இழக்கும் அபாயமும் உள்ளது.

Post Office TD: ரிஸ்க் இல்லாம கேரண்டி வருமானம்... தபால் நிலையத்தின் சூப்பர் திட்டம்!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
22
ஈரான் போர் ஜவுளி சந்தை
Image Credit : pinterest

ஈரான் போர் ஜவுளி சந்தை

இதன் அடுத்த அதிர்ச்சி ஏற்றுமதி சந்தையில் தெரிகிறது. இந்தியாவின் ஆயத்த ஆடை ஏற்றுமதி 2026 ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான முதல் நான்கு மாதங்களில் 10.52 சதவீதம் குறைந்து 4.95 பில்லியன் டாலராக உள்ளது. ஜூலை மாதத்தில் மட்டும் ஆயத்த ஆடை ஏற்றுமதி 4.48 சதவீதம் சரிந்துள்ளது. ஒட்டுமொத்த ஜவுளி ஏற்றுமதியில் சில பிரிவுகள் வளர்ச்சியை பதிவு செய்தாலும், ஆயத்த ஆடைத் துறை தொடர்ந்து அழுத்தத்தை எதிர்கொண்டு வருகிறது. அதிக உற்பத்திச் செலவு, கப்பல் மற்றும் சரக்கு போக்குவரத்தில் ஏற்படும் சிக்கல்கள், வெளிநாட்டு சந்தைகளில் நிலவும் பொருளாதார நிச்சயமற்ற தன்மை ஆகியவை இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு ஒரே நேரத்தில் சவாலாக உள்ளன.

இதனால் அடுத்ததாக எழும் கேள்வி மிகவும் நேரடியானது. ஆடைகளின் விலை இனி உயருமா? மூலப்பொருட்களின் விலை நீண்ட காலத்திற்கு இதேபோல் அதிகமாக இருந்தால், உற்பத்தியாளர்களும் ஆடை பிராண்டுகளும் கூடுதல் செலவின் ஒரு பகுதியையாவது வாடிக்கையாளர்களிடம் மாற்ற வேண்டிய சூழல் உருவாகலாம். குறிப்பாக பாலியஸ்டர் மற்றும் அதனை சார்ந்த பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்தால், செயற்கை நார் பயன்படுத்தப்படும் ஆடைகளில் அதன் தாக்கம் முதலில் தெரிய வாய்ப்புள்ளது. அதே நேரத்தில், விலையை அதிகமாக உயர்த்தினால் மக்கள் ஆடை வாங்குவதை தள்ளிப்போடலாம். இதனால் நிறுவனங்களும் முழு செலவு உயர்வையும் வாடிக்கையாளர்களிடம் மாற்ற முடியாத நிலை.

எனவே, ஈரான் போர் உருவாக்கிய இந்த நெருக்கடியை ஒரு சாதாரண மூலப்பொருள் விலை உயர்வாக மட்டும் பார்க்க முடியாது. கச்சா எண்ணெயில் இருந்து தொடங்கும் தாக்கம் பாலியஸ்டர், நூல், சாயம், ஆடை உற்பத்தி, போக்குவரத்து என பல கட்டங்களை கடந்து இறுதியில் விற்பனை வரை செல்லக்கூடியதாக உள்ளது. குறிப்பாக திருப்பூர் போன்ற ஏற்றுமதி மையங்களுக்கு உற்பத்திச் செலவு உயர்வும் வெளிநாட்டு தேவை குறைவதும் ஒரே நேரத்தில் அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. பாலியஸ்டர் விலை உயர்வு நீடித்தால், இனி ஆடைகளின் விலை மட்டும் அல்லாமல் உலக ஜவுளி சந்தையின் தேவை மற்றும் விற்பனை போக்கு மாறக்கூடும் என்பதே தொழில்துறையின் முக்கிய கவலையாக உள்ளது.

Related Articles

Related image1
Ganesha Currency: விநாயகர் படம் போட்ட கரன்சி நோட்டு! இந்த முஸ்லீம் நாட்டில் இருக்கு தெரியுமா?
Related image2
8th Pay Commission Big Update: சம்பளம் 106% உயருமா? டிஏ இணைப்பு, ஃபிட்மென்ட் கணக்கு இதோ!

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
விலைவாசி
ஈரான்
இந்தியா
தமிழ்நாடு

Latest Videos
Recommended Stories
Recommended image1
8th Pay Commission Big Update: சம்பளம் 106% உயருமா? டிஏ இணைப்பு, ஃபிட்மென்ட் கணக்கு இதோ!
Recommended image2
Ganesha Currency: விநாயகர் படம் போட்ட கரன்சி நோட்டு! இந்த முஸ்லீம் நாட்டில் இருக்கு தெரியுமா?
Recommended image3
RBI Rules: திடீர்னு உங்க பேங்க் அக்கவுன்ட் முடங்குமா? RBI-ன் புதிய விதிகளை தெரிஞ்சுக்கோங்க!
Related Stories
Recommended image1
Ganesha Currency: விநாயகர் படம் போட்ட கரன்சி நோட்டு! இந்த முஸ்லீம் நாட்டில் இருக்கு தெரியுமா?
Recommended image2
8th Pay Commission Big Update: சம்பளம் 106% உயருமா? டிஏ இணைப்பு, ஃபிட்மென்ட் கணக்கு இதோ!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved