MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • 40 வயதில் ஓய்வு: மாதம் ரூ.1 லட்சம் பென்ஷன் கிடைக்குமா?

40 வயதில் ஓய்வு: மாதம் ரூ.1 லட்சம் பென்ஷன் கிடைக்குமா?

முன்கூட்டியே ஓய்வு பெறுவது என்பது நிதிச் சுதந்திரத்தை அடைவதாகும். உங்கள் வாழ்க்கைச் செலவுகளுக்கு நீங்கள் உழைக்காமல், தேவையான பணத்தை முன்கூட்டியே சேமித்து வைத்திருப்பதே இதன் பொருள். சரியான திட்டமிடல் மற்றும் செயல்முறையின் மூலம் இதை அடைய முடியும்.

2 Min read
Author : Raghupati R
Published : May 25 2025, 01:18 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Retirement Planning
Image Credit : Freepik@robiulcc2

Retirement Planning

முன்கூட்டியே ஓய்வு பெறுவதைப் பற்றி பேசும்போது, ​​அந்த வேலையை விட்டு ஓய்வு பெறுவது மட்டுமல்ல. இது ஒரு நிதிச் சுதந்திர நிலையை அடைவதை குறிக்கிறது. இதன் பொருள், உங்கள் வாழ்க்கைச் செலவுகளுக்காக உழைப்பதற்குப் பதிலாக, தேவையான பணத்தை முன்னமே சேமித்து வைத்திருப்பது. ஒரு நபர் தனது 35, 50, 60 ஆகிய வயதுகளில் அல்லது ஒருபோதும் இந்த நிலையை அடையாமல் இருக்கலாம். இது அவர்களின் திட்டமிடல் மற்றும் செயல் முறை ஏற்றது.

25
மாதம் முதலீடு செய்ய வேண்டும்?
Image Credit : iSTOCK

மாதம் முதலீடு செய்ய வேண்டும்?

நிதிச் சுதந்திரத்துக்கான திட்டமிடலைத் தொடங்கும்போது சில முக்கியமான கேள்விகள் எழும்: எப்போது துவங்க வேண்டும்? எவ்வளவு தொகையை மாதம் முதலீடு செய்ய வேண்டும்? ஓய்வு பெறும் நேரத்தில் எவ்வளவு நிதி தேவை? எவ்வளவு காலத்தில் அந்த இலக்கை அடைய முடியும்? இந்த கேள்விகளுக்கு விடை தெரிந்தால், உங்கள் எதிர்கால நிதி நிலைமை மிகவும் உறுதியானதாக அமையும்.

Related Articles

Related image1
வெறும் ரூ.250 போதும்! எஸ்பிஐயின் புதிய SIP திட்டம் அறிமுகம்! எப்படி முதலீடு செய்வது?
Related image2
Mahindra Finance: RBI: மகிந்திரா நிதி நிறுவனம் ஏஜென்டுகள் மூலம் கடனை வசூலிக்கத் தடை: ஆர்பிஐ அதிரடி
35
எவ்வளவு கிடைக்கும்?
Image Credit : social media

எவ்வளவு கிடைக்கும்?

ஒரு உதாரணம் பார்க்கலாம். 25 வயதில் ஒருவர் தனது மாதச் செலவை ₹30,000 என்று வைத்துக்கொள்வோம். பணவீக்க விகிதம் ஆண்டுக்கு 6% என்றால், 15 ஆண்டுகளில் அதே செலவு ₹1,00,000 ஆக உயரும். இத்தனை ஓய்வூதிய இலக்காகக் கொண்டால், மாதம் ₹20,000 முதலீடு செய்து ஒவ்வொரு ஆண்டும் 5% உயர்த்தி, வருடம் 14% வருமானம் வந்தால், 40 வயதில் அந்த நபரிடம் இருக்கும் தொகை ₹2.04 கோடியை அடையும்.

45
மியூச்சுவல் ஃபண்ட்
Image Credit : Google

மியூச்சுவல் ஃபண்ட்

இந்த தொகையை ஒரே மாதிரியான வருமானம் தரும் இடத்தில் வைத்தால், மாதம் ₹1,00,000 வருமானம் கிடைக்கும். இதனால் 7% வருமானம் தரும் ஹைப்ரிட் மியூச்சுவல் ஃபண்ட் போன்ற குறைந்த அபாயத் தேர்வுகள் ஏற்றதாக இருக்கும். இது, எதிர்கால செலவுகளை சமாளிக்க ஒரு நிலையான வழியை உருவாக்கும்.

55
ஓய்வூதிய வருமானம்
Image Credit : our own

ஓய்வூதிய வருமானம்

இந்த மாதவருமானத் திட்டத்தில் 30 ஆண்டுகள் ₹1,00,000 மாதம் பெற முடியும். அதன்பின் கூட அந்த நிதியில் ₹9.82 கோடி வரை மீதம் இருக்க வாய்ப்பு உள்ளது. இது உங்கள் குடும்பத்திற்கு பாதுகாப்பான நிதி ஆதாரமாக அமையும். ஆனால், இந்த மாதிரி கணக்கீடுகள் கல்வி நோக்கங்களுக்கானவை மட்டுமே; திட்டமிடுவதற்கு முன் நிதி ஆலோசகரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
நிதி
எஸ்ஐபி வருமானம்
மூத்த குடிமக்கள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
கர்ப்பிணிகளுக்கு ஜாக்பாட் அறிவிப்பு.. ரூ.5000 அள்ளி கொடுக்கும் அரசு..! விண்ணப்பிப்பது எப்படி..?
Recommended image2
பணம் போட்டா காசு, எடுத்தா காசு. பணம் இல்லேனாலும் காசு..! இலவசம்னு சொல்லி கொள்ளை அடிக்கும் வங்கிகள்..
Recommended image3
ரூ.20 கட்டினால் ரூ.2 லட்சம் காப்பீடு.. ஏழை, நடுத்தர குடும்பங்களுக்கு பாதுகாப்பு திட்டம்
Related Stories
Recommended image1
வெறும் ரூ.250 போதும்! எஸ்பிஐயின் புதிய SIP திட்டம் அறிமுகம்! எப்படி முதலீடு செய்வது?
Recommended image2
Mahindra Finance: RBI: மகிந்திரா நிதி நிறுவனம் ஏஜென்டுகள் மூலம் கடனை வசூலிக்கத் தடை: ஆர்பிஐ அதிரடி
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved