- Home
- Business
- Free Aadhaar Update : ரூ.75 செலவில்லாமல் ஆதாரை அப்டேட் செய்யலாம்.. மக்களுக்கு வந்த பெரிய குட் நியூஸ்
Free Aadhaar Update : ரூ.75 செலவில்லாமல் ஆதாரை அப்டேட் செய்யலாம்.. மக்களுக்கு வந்த பெரிய குட் நியூஸ்
UIDAI, இலவச ஆதார் ஆவண புதுப்பிப்பு சேவைக்கான கடைசி தேதியை நீட்டித்துள்ளது. இந்த இலவச வசதி மை ஆதார் போர்டலில் ஆன்லைனில் மட்டுமே கிடைக்கும், அதே நேரத்தில் புதிய ஆதார் செயலியும் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார் அப்டேட்
ஆதார் அட்டை தொடர்பான தகவல்களை அப்டேட் செய்யாமல் தள்ளிப்போட்டு வந்தவர்களுக்கு தற்போது பெரிய நிம்மதி செய்தி வெளியாகியுள்ளது. UIDAI, இலவச ஆதார் ஆவண புதுப்பிப்பு சேவைக்கான கடைசி தேதியை மீண்டும் நீட்டித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பயனர்கள் இந்த ஒரு வருடம் கட்டணமின்றி ஆன்லைனில் ஆதார் ஆவணங்களை அப்டேட் செய்ய முடியும். முன்னதாக இந்த இலவச சேவை ஜூன் 2026-ல் முடிவடைந்தது.

இலவச ஆதார் சேவை
ஆனால் மை ஆதார் போர்டல் மூலம் பலரும் ஆதார் விவரங்கள் அப்டேட் செய்து வருவதால், இந்த சேவையை ஜூன் 14, 2027 வரை நீட்டிக்க UIDAI முடிவு செய்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அலுவலக நினைவுக் குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த இலவச வசதி ஆன்லைனில் மட்டும் கிடைக்கும் என்பது முக்கிய விஷயம். அடையாளச் சான்று (PoI) மற்றும் முகவரிச் சான்று (PoA) தொடர்பான ஆவணங்களை மை ஆதார் போர்டல் மூலம் பதிவேற்றம் செய்து சரிபார்ப்பு செய்யலாம்.
ஆதார் ஆவண அப்டேட்
ஆனால் ஆதார் பதிவு அல்லது புதுப்பிப்பு மையங்களில் நேரடியாக சென்று அப்டேட் செய்தால் ரூ.75 கட்டணம் தொடரும். ஆன்லைனில் அப்டேட் செய்வது மிகவும் எளிதாக மாற்றப்பட்டுள்ளது. ஆதார் எண் மற்றும் ஓடிபி மூலம் உள்நுழைவு செய்து, தேவையான ஸ்கேன் செய்யப்பட்ட ஆவணங்களை பதிவேற்றம் செய்து கோரிக்கையை சமர்ப்பிக்கலாம். அதன் பிறகு கிடைக்கும் 14 இலக்க URN எண் மூலம் அப்டேட் ஸ்டேட்டஸ்- ஐ நீங்கள் கண்காணிக்க முடியும்.
ஆன்லைன் ஆதார் அப்டேட்
இதற்கிடையில் UIDAI, புதிய ஆதார் ஆப் விரைவில் அறிமுகமாகும் என்றும் தெரிவித்துள்ளது. தற்போதைய mAadhaar செயலிக்கு பதிலாக வரும் இந்த புதிய செயலியில் QR அடிப்படையிலான ஆதார் பகிர்வு, மேம்பட்ட தனியுரிமை அமைப்புகள் மற்றும் வேகமான அணுகல் போன்ற ஸ்மார்ட் வசதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. நிபுணர்கள் கூறுவதன்படி, வங்கி கணக்கு, பான் இணைப்பு, சிம் சரிபார்ப்பு மற்றும் அரசு சேவைகளில் ஆதார் முக்கிய பங்கு வகிப்பதால், மக்கள் தங்களது விவரங்களை சரிபார்த்து தேவையான மேம்படுத்தல்களை முன்கூட்டியே தெரிந்து கொள்ள வேண்டும். தற்போது இலவச சேவை நீட்டிக்கப்பட்டிருப்பதால், இதை பயன்படுத்த நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

