MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • ரூ.50 ஆயிரம் முதலீடு 8 கோடியாக மாறும்! 8-4-3 ஃபார்முலா கேள்விபட்டிருக்கீங்களா?

ரூ.50 ஆயிரம் முதலீடு 8 கோடியாக மாறும்! 8-4-3 ஃபார்முலா கேள்விபட்டிருக்கீங்களா?

நிலையான முதலீடு, கூட்டு வருமானம் மற்றும் சரியான நேரம் ஆகியவற்றின் சக்தமியை புரிந்துகொண்டு முதலீடு செய்பவர்கள் தங்கள் பணத்தைப் பல மடங்கு பெருக்க முடியும். அந்த வகையில், ஒவ்வொரு மாதமும் ரூ.50,000 பணத்தை 12% வருடாந்திர வட்டியில் முதலீடு செய்ய முடியும் என்றால் '8-4-3' விதியைப் பின்பற்றலாம்.இந்த முறையில முதலாவது 80 லட்சம் ரூபாய் சேர 8 வருடம் ஆகும். ஆனால், இரண்டாவது ரூ.80 லட்சம் சேர்வதற்கு மேலும் நான்கு ஆண்டுகள் மட்டுமே ஆகும். மூன்றாவது ரூ.80 லட்சம் கிடைக்க இன்னும் மூன்றே ஆண்டுகள் காத்திருந்தால் போதும்.இந்த வேகமான வளர்ச்சி கூட்டு வட்டி மூலம் சாத்தியமாகிறது. அதாவது செய்யப்பட்ட முதலீடு லாபத்தைப் பெருக்கும் வகையில் மீண்டும் முதலீடு செய்யப்படுகிறது. காலப்போக்கில், கூட்டு வட்டியின் பங்களிப்பு ஆரம்ப முதலீடுகளையே மிஞ்சிவிடும்.முதல் ரூ. 80 லட்சத்தில், சுமார் 61% உங்கள் சொந்தப் பணத்திலிருந்து வரும். அதே சமயம் 39% வட்டி மூலம் சேரும். அடுத்து நான்கு வருடங்கள் சென்றால் ரூ. 1.6 கோடி இருக்கும் இருக்கும். அதில் கிட்டத்தட்ட 70% வட்டி மூலம் இருக்கும். முறையான முதலீடுகளின் பங்களிப்பு 30% மட்டுமே கிடைக்கும். இவ்வாறு வட்டி பங்களிப்பை அதிகரிக்கும் போக்கு தொடர்கிறது.இன்னும் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், கிட்டத்தட்ட 24 ஆண்டுகளில் நீங்கள் ரூ. 8 கோடியை எட்டும்போது, 94% தொகை வட்டி வருவாய் மூலம் கிடைத்திருக்கும். ஆரம்ப முதலீட்டின் பங்களிப்பு வெறும் 6% ஆக இருக்கும்.பொதுவாக நீண்ட காலத்திற கருத்தில் கொண்டு, ஒரு முறையான முதலீட்டுத் திட்டம் (SIP) மூலம் குறியீட்டு அடிப்படையிலான ETF (எக்ஸ்சேஞ்ச் டிரேடட் ஃபண்ட்), லார்ஜ்-கேப் மியூச்சுவல் ஃபண்ட் அல்லது ஃப்ளெக்ஸி-கேப் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். அதன் வட்டி தோராயமாக 12 சதவீதம் இருக்கும்.

1 Min read
SG Balan
Published : May 15 2024, 03:35 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
8 4 3 Rule for ETF investment

8-4-3 Rule for ETF investment

நிலையான முதலீடு, கூட்டு வருமானம் மற்றும் சரியான நேரம் ஆகியவற்றின் சக்தமியை புரிந்துகொண்டு முதலீடு செய்பவர்கள் தங்கள் பணத்தைப் பல மடங்கு பெருக்க முடியும். அந்த வகையில், ஒவ்வொரு மாதமும் ரூ.50,000 பணத்தை 12% வருடாந்திர வட்டியில் முதலீடு செய்ய முடியும் என்றால் '8-4-3' விதியைப் பின்பற்றலாம்.

26
Investment Schemes

Investment Schemes

இந்த முறையில முதலாவது 80 லட்சம் ரூபாய் சேர 8 வருடம் ஆகும். ஆனால், இரண்டாவது ரூ.80 லட்சம் சேர்வதற்கு மேலும் நான்கு ஆண்டுகள் மட்டுமே ஆகும். மூன்றாவது ரூ.80 லட்சம் கிடைக்க இன்னும் மூன்றே ஆண்டுகள் காத்திருந்தால் போதும்.

36
What is 8-4-3 investment scheme

What is 8-4-3 investment scheme

இந்த வேகமான வளர்ச்சி கூட்டு வட்டி மூலம் சாத்தியமாகிறது. அதாவது செய்யப்பட்ட முதலீடு லாபத்தைப் பெருக்கும் வகையில் மீண்டும் முதலீடு செய்யப்படுகிறது. காலப்போக்கில், கூட்டு வட்டியின் பங்களிப்பு ஆரம்ப முதலீடுகளையே மிஞ்சிவிடும்.

46
8-4-3 Investments

8-4-3 Investments

முதல் ரூ. 80 லட்சத்தில், சுமார் 61% உங்கள் சொந்தப் பணத்திலிருந்து வரும். அதே சமயம் 39% வட்டி மூலம் சேரும். அடுத்து நான்கு வருடங்கள் சென்றால் ரூ. 1.6 கோடி இருக்கும் இருக்கும். அதில் கிட்டத்தட்ட 70% வட்டி மூலம் இருக்கும். முறையான முதலீடுகளின் பங்களிப்பு 30% மட்டுமே கிடைக்கும். இவ்வாறு வட்டி பங்களிப்பை அதிகரிக்கும் போக்கு தொடர்கிறது.

56
8-4-3 Investment Rule

8-4-3 Investment Rule

இன்னும் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், கிட்டத்தட்ட 24 ஆண்டுகளில் நீங்கள் ரூ. 8 கோடியை எட்டும்போது, 94% தொகை வட்டி வருவாய் மூலம் கிடைத்திருக்கும். ஆரம்ப முதலீட்டின் பங்களிப்பு வெறும் 6% ஆக இருக்கும்.

66
Investment Portfolio

Investment Portfolio

பொதுவாக நீண்ட காலத்திற கருத்தில் கொண்டு, ஒரு முறையான முதலீட்டுத் திட்டம் (SIP) மூலம் குறியீட்டு அடிப்படையிலான ETF (எக்ஸ்சேஞ்ச் டிரேடட் ஃபண்ட்), லார்ஜ்-கேப் மியூச்சுவல் ஃபண்ட் அல்லது ஃப்ளெக்ஸி-கேப் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். அதன் வட்டி தோராயமாக 12 சதவீதம் இருக்கும்.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved