Birth Month : கல்யாணம் ஆனதும் கோடீஸ்வரன் தான்! இந்த மாதத்தில் பிறந்த ஆணா நீங்க?
ஜோதிடத்தின் படி, சில குறிப்பிட்ட மாதங்களில் பிறந்த ஆண்கள் திருமணத்திற்கு பிறகு பணக்காரராவார்கள் என்று சொல்லப்படுகிறது நீங்கள் பிறந்த மாதம் அதில் இருக்கிறதா? என்று இங்கு பார்க்கலாம்.

Birth Month
ஒரு நபர் பணக்காரராவதற்கு கடின உழைப்பும், விடாமுயற்சியும் தேவை. கூடவே அதிர்ஷ்டமும் வேண்டும். அதிர்ஷ்டம் யாருக்கு எப்போது வேண்டுமானாலும் வரும். அதை யாராலும் கணிக்கவே முடியாது. ஆனால் ஜோதிடத்தின்படி, சில குறிப்பிட்ட மாதங்களில் பிறந்த ஆண்களுக்கு திருமணத்திற்கு அதிர்ஷ்டத்தின் கதவு திறக்கும் என்று சொல்லப்படுகிறது. திருமணத்திற்கு பிறகு அந்த மாதத்தில் பிறந்த ஆண்கள் பணக்காரராவார்களாம். அது எந்தெந்த மாதம். நீங்கள் பிறந்த மாதம் அதில் இருக்கிறதா? என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
ஜனவரி
ஜோதிடத்தின் படி, ஜனவரி மாசம் பிறந்த ஆண்கள் இயற்கையாகவே தலைமைத்துவம் உள்ளவர்கள், திட்டமிடுவதில் வல்லவர்கள், செய்யும் தொழிலில் வெற்றியைக் காண்பார்கள். இந்த மாதத்தில் பிறந்த ஆண்களின் சாதனையானது திருமணத்திற்கு பிறகு இரட்டிப்பாகும். இவர்கள் வெற்றி மேல் வெற்றியை காண்பார்கள். செல்வத்தைக் குவிப்பார்கள். நல்ல நிதி முடிவுகளை எடுப்பார்கள். இவர்களது துணை இவர்களுக்கு உணர்ச்சிபூர்வமான ஆதரவை தருவதால் இவர்கள் எந்த ரிஸ்க் எடுத்தாலும் அதில் சுலபமாக வெற்றியை காண்பார்கள்.
ஏப்ரல்
ஜோதிடத்தின் படி, ஏப்ரல் மாசம் பிறந்த ஆண்கள் மன உறுதியாக இருப்பார்கள். இதனால் இவர்கள் எல்லா விஷயங்களையும் திறம்பட திட்டமிட்டு செயல்படுத்துவார்கள். திருமணத்திற்கு பிறகு இவர்களது நிதிநிலைமை உயரும். இவர்களது துணையின் அன்பான ஆதரவு கிடைப்பதால் எந்த தொழில் செய்தாலும் அதில் சிறந்து விளங்குவார்கள். இவர்களின் அர்ப்பணிப்பு காரணமாக படிப்படியாக முன்னேற்றத்தை காண்பார்கள். இதனால் இவர்களது வாழ்க்கையில் செல்வம் குவியத் தொடங்கும்.
ஆகஸ்ட்
ஜோதிடத்தின்படி, ஆகஸ்ட் மாசம் பிறந்த ஆண்கள் அதில் புத்திசாலியாக இருப்பார்கள். திருமணத்திற்கு பிறகு இவர்கள் நிதி விஷயத்தில் வெற்றியை காண்பார்கள். சொந்த தொழிலில் மிகவும் சிறந்து விளங்குவார்கள். இந்த மாதத்தில் பிறந்த ஆண்கள் பட்ஜெட் உருவாக்குவதில் மற்றும் சேமிப்பதில் திறமையானவர்களாக இருப்பார்களாம். இதனால் இவர்கள் வாழ்க்கையில் பணம் பற்றாக்குறையை காண மாட்டார்கள்.
நவம்பர் :
ஜோதிடத்தின் படி, நவம்பர் மாசம் பிறந்த ஆண்கள் வசீகரத்திற்கு பெயர் பெற்றவர்கள். மேலும் ராஜதந்திரம் உள்ளவர்கள். திருமணத்திற்கு பிறகு இவர்களது நிதிநிலைமை உயர்ந்து கொண்டே இருக்கும்.