வீட்டில் பணம் தங்கலையா? பீரோ, பணப்பெட்டியை 'இந்த' திசையில் வைங்க.. செல்வம் பொங்கும்!
Vastu Tips for Money Box Direction: எவ்வளவுதான் சம்பாதித்தாலும் வீட்டில் பணம் தங்கவில்லை என கவலைப்படுகிறீர்களா? பணப்பெட்டியை குறிப்பிட்ட திசையில் வைத்தால் லட்சுமி கடாட்சம் பொங்குமாம். இந்த வாஸ்து டிப்ஸ் குறித்து பார்ப்போம்.

Vastu Tips for Money Box Direction
நீங்கள் நன்றாகச் சம்பாதிக்கிறீர்கள், கைக்குப் பணமும் வருகிறது, ஆனால் மாதக் கடைசிக்குள் எல்லாம் காலியாகிவிடுகிறதா? நாம்தான் தேவையில்லாமல் செலவு செய்கிறோம் என்று நினைப்போம். ஆனால், இதற்கு வாஸ்துபடி ஒரு முக்கியமான காரணம் இருக்கிறது. அதுதான் நீங்கள் பணம் வைக்கும் இடம், அதாவது உங்கள் லட்சுமி உண்டியல் அல்லது பணப்பெட்டி.
வாஸ்து மற்றும் ஜோதிட சாஸ்திரப்படி, பணம் வைக்கும் இடம் சரியாக இல்லை என்றால், லட்சுமி தேவி வீட்டில் அதிக நேரம் தங்க மாட்டாராம். அவர் வருவார், ஆனால் வந்த வேகத்தில் தண்ணீர் மாதிரி செலவாகிவிடும். எனவே, பணத்தைத் தக்க வைக்க வேண்டும் என்றால், முதலில் நீங்கள் பணம் வைக்கும் திசையைச் சரி செய்ய வேண்டும்.
பணம் வைப்பதற்கு உகந்த திசை
சாஸ்திரங்களின்படி, பணம் வைப்பதற்கு மிக உகந்த திசை வடக்குதான். ஏனெனில், இந்த திசைக்கு அதிபதி செல்வத்தின் கடவுளான குபேரன். உங்கள் பீரோ அல்லது லாக்கரை வீட்டின் வடக்கு திசையில் வையுங்கள். ஆனால் ஒரு விஷயத்தை நன்றாக நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். லாக்கரைத் திறக்கும்போது, அதன் கதவு தெற்கு திசையை நோக்கி இருக்க வேண்டும். அதாவது, நீங்கள் பணத்தை எடுக்கும்போது உங்கள் முகம் வடக்கு திசையைப் பார்த்தவாறு இருக்க வேண்டும். இப்படிச் செய்தால், பணம் வருவதற்கு வழி பிறக்கும், வரும் பணமும் வீட்டில் தங்கும்.
இதற்கு நேர் எதிரானது தெற்கு திசை. வாஸ்துபடி, தெற்கு திசையை எமனின் திசை என்று சொல்வார்கள். எனவே, தப்பித்தவறி கூட இந்த திசையில் பணப்பெட்டியை வைத்துவிடாதீர்கள். தெற்கில் வைத்தால் செலவுகள் அதிகமாகும், சேமிக்கவே முடியாது, தேவையில்லாமல் பணம் விரயமாகும். திசையை மட்டும் மாற்றினால் போதாது, இன்னும் இரண்டு விஷயங்களையும் கவனிக்க வேண்டும்.
பணப்பெட்டியை காலியாக வைக்கக் கூடாது
முதல் விஷயம், பணப்பெட்டியை எப்பொழுதும் முழுமையாகக் காலியாக வைக்காதீர்கள். அதில் எப்பொழுதும் சில சில்லறை காசுகள் அல்லது ஒரு 10, 20 ரூபாய் நோட்டையாவது போட்டு வையுங்கள். காலியான பெட்டியைப் பார்த்தால் லட்சுமி தேவிக்குக் கோபம் வருமாம். இரண்டாவது, பணம் வைக்கும் இடத்தை எப்பொழுதும் சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள். குப்பை, பழைய பேப்பர் என்று எதுவும் பக்கத்தில் இருக்கக் கூடாது. முடிந்தால், லாக்கருக்கு முன்னாடி கண்ணாடியை வைக்காதீர்கள். கண்ணாடி முன்னாடி இருக்கிற பணம், செலவை இரண்டு மடங்காக்கும் என்று சொல்வார்கள்.
வீட்டில் பணம் தங்க எளிய பரிகாரம்
பணம் இன்னும் நன்றாகத் தங்க வேண்டும் என்றால், ஒரு சின்ன பரிகாரம் செய்யலாம். ஒவ்வொரு வியாழக்கிழமையும் லட்சுமிக்கு உகந்த நாள். அன்று, ஒரு மஞ்சள் துணியில் 7 முழு சோழிகள் மற்றும் ஒரு 1 ரூபாய் நாணயத்தை முடிந்து உங்கள் பணப்பெட்டியில் வையுங்கள். அதுமட்டுமில்லாமல், தினமும் காலையில் வீடு துடைக்கும்போது, தண்ணீரில் ஒரு சிட்டிகை கல் உப்பைக் கலந்து துடையுங்கள். இது வீட்டில் இருக்கிற எதிர்மறை ஆற்றலை (நெகட்டிவ் எனர்ஜியை) நீக்கி, பணத்தை வீட்டில் நிலைக்கச் செய்யும்.

