- Home
- Astrology
- உச்ச ராசியில் அமரும் சுக்கிர பகவான்.! இந்த 3 ராசிகளுக்கு சுக்கிர திசை ஆரம்பம்.! சொத்துக்கள் குவியும்.!
உச்ச ராசியில் அமரும் சுக்கிர பகவான்.! இந்த 3 ராசிகளுக்கு சுக்கிர திசை ஆரம்பம்.! சொத்துக்கள் குவியும்.!
சுக்கிர பெயர்ச்சி 2026 மார்ச் மாதம் கேந்திர திரிகோண ராஜயோகத்தை உருவாக்குகிறது. நாளை மார்ச் 2 ஆம் தேதி நிகழும் சுக்கிரனின் சஞ்சாரத்தால் பலன்பெறும் ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

திரிகோண ராஜயோகம் 2026
அசுரர்களின் குருவான சுக்கிர பகவான், உச்ச ராசியான மீனத்தில் நுழைகிறார். இது ஒருபுறம் மாளவ்ய மற்றும் மறுபுறம் கேந்திர திரிகோண ராஜயோகத்தை உருவாக்குகிறது. திருக்கணித பஞ்சாங்கத்தின்படி மார்ச் 01 நள்ளிரவு 01.01 மணிக்கு சுக்கிர பகவான் மீன ராசியில் சஞ்சாரம் செய்கிறார். மார்ச் 2 முதல் 26 வரை இதன் தாக்கம் இருக்கும். இதன் காரணமாக 3 ராசிகளுக்கு சிறப்புப் பலன்கள் கிடைக்கவுள்ளது. அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு கேந்திர திரிகோண ராஜயோகம் மிகவும் நன்மை தரும். இந்த காலக்கட்டத்தில் வருமனத்திற்கான புதிய வழிகள் திறக்கப்படும். செல்வம் பெருகும், நிதி நிலைமை வலுப்பெறும். குடும்பத்தில் இதுவரை நிலவி வந்த தகராறுகள் தீர்க்கப்படும். திருமணமாகாதவர்களுக்கு திருமண வாய்ப்புகள் கைகூடி வரும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு, திரிகோண ராஜயோகம் பல பிரச்சனைகளை முடிவுக்குக் கொண்டுவரும். வலுவான நிதி ஆதாயங்கள் கிடைக்கும். தொழில் முன்னேற்றத்திற்கு புதிய வழிகள் திறக்கும். பதவி உயர்வு கிடைக்கலாம். புதிய தொழில் தொடங்குவதில் இருந்த தடைகள் நீங்கும். முக்கிய முடிவுகளை தாராளமாக எடுக்கலாம்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு, இந்த ராஜயோகம் வாழ்வில் பல நேர்மறை மாற்றங்களைக் கொண்டுவரும். சமூகத்தில் உங்கள் மதிப்பு, மரியாதை, அந்தஸ்து உயரும். வருமானம் அதிகரிக்கும். புதிய வீடு அல்லது வாகனம் வாங்கும் வாய்ப்புகள் உண்டு. இதுவரை உங்களை வாட்டி வதைத்து வந்த உடல்நலக் கோளாறுகளில் இருந்து முழுமையாக விடுபடுவீர்கள்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

