- Home
- Astrology
- பிப்.21 உருவாகும் அசுப யோகம்.! இன்று முதல் இந்த ராசிகளுக்கு கண்டம் ஆரம்பிக்குது.! ரொம்ப எச்சரிக்கையா இருங்க.!
பிப்.21 உருவாகும் அசுப யோகம்.! இன்று முதல் இந்த ராசிகளுக்கு கண்டம் ஆரம்பிக்குது.! ரொம்ப எச்சரிக்கையா இருங்க.!
Vaidhriti Yoga Effects : பிப்ரவரி 21, 2026 சனிக்கிழமை காலை 8:09 மணிக்கு வைதிருதி யோகம் தொடங்குகிறது. ஜோதிடத்தின்படி, இந்த நேரத்தில் தடைகள், நிதி சிக்கல்கள், உறவுகளில் விரிசல் மற்றும் உடல்நலப் பிரச்சினைகள் அதிகரிக்கக்கூடும்.

வைதிருதி யோகம் 2026
ஜோதிடப்படி, பங்குனி மாதத்தில் ஒரு அசுப யோகம் உருவாகிறது. வைதிருதி என்பது தடை அல்லது எதிர்ப்பு என்று பொருள்படும். இது ராகுவின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட யோகமாக கருதப்படுகிறது. இந்த நேரத்தில் தொடங்கும் காரியங்கள் பெரும்பாலும் இழுபறியாகவோ அல்லது எதிர்பார்த்த பலனை தராமலோ போகலாம் என்பது ஜோதிட நம்பிக்கை.
வைதிருதி யோகம் பிப். 21, 2026 காலை 8:09 மணிக்கு தொடங்குகிறது. இந்த நேரத்தில் தடைகள், நிதி, உறவு மற்றும் உடல்நலப் பிரச்சனைகள் அதிகரிக்கலாம். அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு மன உறுதியின்மை ஏற்படலாம். சிறிய பிரச்சனைகள் கூட பெரிதாகலாம். பணியிடத்தல் வாக்குவாதங்கள் அல்லது அவசர முடிவுகள் நஷ்டத்தை ஏற்படுத்தக்கூடும். இந்த நேரத்தில் புதிய முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது. தலைவலி அல்லது சோர்வு ஏற்படலாம். வீண் விரயங்கள் மற்றும் அலைச்சல்கள் ஏற்படலாம். உடல் நலனில் அக்கறை தேவை.
கடகம்
உணர்ச்சியில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படக்கூடும். முடிவெடுப்பதில் தாமதம் உண்டாகலாம். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். நிதி பரிவர்த்தனைகளில் தாமதம் ஏற்படும். உறவுகளில் தவறான புரிதல்கள் வரலாம். தொழில் ரீதியான முடிவுகளில் அவசரம் காட்ட வேண்டாம். மேலதிகாரிகளுடன் வாக்குவாதம் தவிர்க்கவும்.
துலாம்
திட்டங்களை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்படலாம். வியாபாரத்தில், குறிப்பாக கூட்டாண்மையில் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. மன அழுத்தம் தூக்கத்தைக் கெடுக்கும். வாகனம் ஓட்டும்போது கூடுதல் எச்சரிக்கை தேவை. குடும்ப உறவுகளில் விரிசல் ஏற்பட வாய்ப்புண்டு. பேசும்போது நிதானம் அவசியம்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

