- Home
- Astrology
- வைபவ் சூர்யவன்ஷி அதிரடிக்கு இதுதான் காரணமா? பிறந்த தேதி சொல்லும் வியக்க வைக்கும் ரகசியம்!
வைபவ் சூர்யவன்ஷி அதிரடிக்கு இதுதான் காரணமா? பிறந்த தேதி சொல்லும் வியக்க வைக்கும் ரகசியம்!
Vaibhav Suryavanshi Numerology Secrets: ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரில் வைபவ் சூர்யவன்ஷி அதிரடிக்கு அவரது பிறந்த தேதி வலுவாக இருப்பதே காரணம் என ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. இது குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

ஐபிஎல் தொடரில் கலக்கும் வைபவ் சூர்யவன்ஷி
IPL 2026 கிரிக்கெட் தொடர் களைகட்டி வருகிறது. நடப்பு ஐபிஎல் தொடரில் இளம் வீரர்கள் பலர் அசத்தி வருகின்றனர். இதில் முதன்மையானவர் இளம் அதிரடி புயல் 15 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஆடும் இவர், பும்ரா ஓவரிலேயே இரண்டு சிக்சர்கள் அடித்து அனைவரிடமும் மீண்டும் பேசுபொருளாகியுள்ளார். வைபவ்வின் இந்த வெற்றிக்குப் பின்னால் அவரது பிறந்த தேதிக்கும் ஒரு பங்கு இருக்கிறது.
வைபவ் சூர்யவன்ஷி பிறந்த தேதி ரகசியம்
வைபவ் சூர்யவன்ஷி மார்ச் 27, 2011-ல் பீகார் மாநிலம், மிதிலா பகுதியின் சமஸ்திபூர் மாவட்டத்தில் உள்ள தாஜ்பூரில் பிறந்தார். அவரது பிறந்த தேதி 27 என்பதால், அவரின் ராசியான எண் (Radix) 9. இந்த எண் செவ்வாய் கிரகத்தைக் குறிக்கிறது. செவ்வாய் கிரகத்தின் தாக்கத்தால்தான், வைபவ் இந்தச் சின்ன வயதிலேயே இவ்வளவு பெரிய ஸ்டார் ஆகியுள்ளார். நியூமராலஜியில் செவ்வாய் கிரகத்தை ஆற்றலுடன் தொடர்புபடுத்துகிறார்கள். அதனால்தான் வைபவ்விடம் இவ்வளவு ஆற்றல் தெரிகிறது.
ஜோதிட சாஸ்திரம் சொல்வது என்ன?
ஜோதிட சாஸ்திரப்படி, செவ்வாய் கிரகம் தேவர்களின் சேனாதிபதி. இதனால், அவரிடம் அதிக தைரியம் இருக்கும், வீரத்தின் அடையாளமாகவும் கருதப்படுகிறார். செவ்வாயின் ஆதிக்கம் உள்ள 9-ம் எண் கொண்டவர்களிடம் இந்த இரண்டு குணங்களும் இருக்கும். இவர்கள் சொந்த முயற்சியால் தங்களுக்கு என ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொள்வார்கள். மிகவும் கடின உழைப்பாளிகள், பிடிவாத குணம் கொண்டவர்கள். ஒன்றை முடிவு செய்துவிட்டால், அதை அடைந்தே தீருவார்கள். வைபவ்வின் குணத்திலும் இந்த அம்சங்கள் தெரிகின்றன.
செவ்வாயின் ஆதிக்கம் உள்ள 9-ம் எண்
நியூமராலஜிப்படி, செவ்வாயின் ஆதிக்கம் உள்ள 9-ம் எண் கொண்டவர்களிடம் தன்னம்பிக்கை அதிகமாக இருக்கும். அவர்கள் வெளிப்படையாகப் பேசக்கூடியவர்கள், லட்சியவாதிகள். அவர்களின் குணம் ஒரு அச்சமற்ற வீரனைப் போன்றது. எந்தத் துறையில் இருந்தாலும், அங்கே தங்கள் முத்திரையைப் பதிப்பார்கள். அவர்களுக்கு முன்னால் எவ்வளவு பெரிய வீரர் இருந்தாலும், பயப்படாமல் தங்கள் வேலையை முடிப்பார்கள்.
யார் இந்த வைபவ் சூர்யவன்ஷி?
பீகாரில் உள்ள தாஜ்பூர் கிராமத்தைச் சேர்ந்த வைபவ் சூர்யவன்ஷி ஐபிஎல் ஏலத்தில் ராஜஸ்தான் அணியால் ரூ.1.10 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். இதன்மூலம் மிக இளம் வயதில் ஐபிஎல்லில் விளையாடும் வீரர் என்ற பெருமையை பெற்றார். இவரது தந்தை விவசாயி. தனது மகனின் கிரிக்கெட் மீதான அன்பைக் கவனித்து மகனை ஊக்குவிக்க அவர்களின் கொல்லைப்புறத்தில் ஒரு சிறிய விளையாட்டுப் பகுதியை உருவாக்கினார். பின்னர் வைபவின் கிரிக்கெட் கனவுகளை ஆதரிக்க தனது பண்ணையை விற்றார். வைபவ் சூர்யவன்ஷி தனது 12 வயதில் பீகார் அணிக்காக வினூ மன்கட் டிராபியில் விளையாடியது குறிப்பிடத்தக்கது.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது.

