- Home
- Astrology
- Trigrahi Yog : புதன், குரு, சுக்கிரனால் உருவாகும் திரிகிரஹி யோகம்... இந்த 5 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கு!
Trigrahi Yog : புதன், குரு, சுக்கிரனால் உருவாகும் திரிகிரஹி யோகம்... இந்த 5 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கு!
Trigrahi Yog : ஜூன் 2026-ல் உருவாகும் திரிகிரஹி யோகத்தால், 5 ராசிக்காரர்களுக்கு மகாலட்சுமியின் அருள் கிடைத்து, அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் என்று ஜோதிடம் கூறுகிறது. அந்த அதிர்ஷ்ட ராசிகள் எவை?

Trigrahi Yog 2026
ஜூன் 22, 2026 அன்று, புதன் கிரகம் மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு இடம் பெயர்கிறார். கடக ராசியில் ஏற்கனவே குரு மற்றும் சுக்கிரன் இருக்கிறார்கள். இப்போது புதனும் அவர்களுடன் சேர்வதால், அங்கு 'திரிகிரஹி யோகம்' உருவாகிறது. இந்த மூன்று கிரகங்களுமே சுப பலன்களைத் தருபவை என்பதால், சில ராசிக்காரர்களுக்கு இதன் மூலம் பலன்கள் கிடைக்கும். அந்த 5 ராசிகள் எவை என்று பார்ப்போம்.
மேஷம்
இந்த ராசிக்காரர்களுக்கு திடீர் பண லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. வேலை பார்ப்பவர்களுக்குப் புதிய பொறுப்புகளும், பதவி உயர்வும் கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் இந்த நேரத்தில் வெற்றிகரமாக முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். குழந்தைகள் மூலம் ஒரு குட் நியூஸ் வரலாம்.
ரிஷபம்
இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் முழுமையாக கைகொடுக்கும். முதலீடுகள் மூலம் பெரிய லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. வேலை தேடுபவர்களுக்கு அவர்கள் விரும்பிய வேலை கிடைக்கும். சமூகத்தில் உங்கள் நல்ல செயல்களுக்கு மதிப்பும் மரியாதையும் கூடும். புதிய தொழில் தொடங்க இது சரியான நேரம்.
கடகம்
இந்த திரிகிரஹி யோகம் கடக ராசியில்தான் உருவாகிறது. அதனால் இந்த ராசிக்காரர்களுக்கு ஸ்பெஷல் பலன்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. வேலையில் பதவி உயர்வும், கரியரில் நல்ல முன்னேற்றமும் இருக்கும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களிலும் பெரிய வெற்றி கிடைக்கலாம். குடும்பத்துடன் ஆன்மீக அல்லது சுற்றுலாப் பயணம் செல்ல நேரிடலாம்.
கன்னி
நீண்ட நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இந்த ராசிக்காரர்கள், அதிலிருந்து மீண்டு வருவார்கள். நீண்ட காலமாக தடைபட்டிருந்த வேலைகள் மீண்டும் வேகம் பிடிக்கும். வேலை மற்றும் தொழிலில் நல்ல வாய்ப்புகள் தேடி வரும். நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்துடன் நல்ல நேரத்தை செலவிட வாய்ப்பு அமையும்.
மீனம்
இந்த ராசிக்காரர்கள் வீடு, கடை போன்ற புதிய சொத்துக்களை வாங்கலாம். கல்வி, கரியர் மற்றும் பொருளாதாரம் தொடர்பான விஷயங்களில் நல்ல முடிவுகள் கிடைக்கும். காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் இனிமை அதிகரிக்கும். முன்பு செய்த முதலீடுகளின் பலனை இந்த நேரத்தில் அறுவடை செய்யலாம்.

