- Home
- Astrology
- Thulam Rasi Palan Nov 15: துலாம் ராசி நேயர்களே, சாதகமான இடத்தில் சஞ்சரிக்கும் சுக்கிரன்.! இன்று பண வரவு கொட்டும்.!
Thulam Rasi Palan Nov 15: துலாம் ராசி நேயர்களே, சாதகமான இடத்தில் சஞ்சரிக்கும் சுக்கிரன்.! இன்று பண வரவு கொட்டும்.!
Nov 15 Thulam Rasi Palan : நவம்பர் 15, 2025 தேதி துலாம் ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

நவம்பர் 15, 2025 துலாம் ராசிக்கான பலன்கள்:
துலாம் ராசி நேயர்களே, இன்றைய நாள் மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி, தெளிவான துணிச்சலான முடிவுகளை எடுப்பீர்கள். உங்கள் கடின உழைப்புக்கு ஏற்ற பலன்கள் கிடைக்கும். சமூகத்தில் உங்களின் மதிப்பு உயரும். குடும்பம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். குரு வக்ர நிலையில் இருப்பதால் சாதகமான பலன்கள் கிடைக்கும்.
நிதி நிலைமை:
சுக்கிரன் சாதகமான இடத்தில் சஞ்சரிப்பதால் நிதி ரீதியான நன்மைகளைப் பெறுவீர்கள். பணப்புழக்கம் சீராக இருக்கும். எதிர்பாராத வழிகளில் பணம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. செலவுகளை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம். தேவையற்ற அல்லது அவசர முதலீடுகளை தவிர்க்கவும். பேச்சுத்திறனால் தொழிலில் வளர்ச்சி ஏற்படும். முதலீடுகள் குறித்து நிதானமாக சிந்திக்க வேண்டும்.
தனிப்பட்ட வாழ்க்கை:
இன்றைய தினம் பேச்சில் கவனத்துடன் செயல்பட வேண்டும். அவசரப்பட்டு வார்த்தைகளை கொட்டுவதை தவிர்க்கவும். துணையுடன் இணக்கமான சூழல் நீடிக்கும். கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டால் பேச்சுக்கள் மூலம் தீர்வு காணலாம். மனதை அலைபாய விடாமல் அமைதியை காப்பது உறவுகளை மேம்படுத்தும்.
பரிகாரங்கள்:
இன்று மகாலட்சுமி தாயாரை வெள்ளைப் பூக்கள் கொண்டு அர்ச்சனை செய்து வழிபடலாம். பெரியோர்களை மதித்து அவர்களின் ஆசியை பெறுவது நன்மை பயக்கும். உதவி தேவைப்படும் நண்பர்கள் அல்லது மாணவர்களுக்கு உங்களால் இயன்ற உதவிகளை வழங்கலாம்.
முக்கிய குறிப்பு:
இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.