MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Solar Eclipse: இருட்டாக மாறப்போகும் பூமி.! சூரிய கிரகணம் எங்கெல்லாம் தெரியும்.?!

Solar Eclipse: இருட்டாக மாறப்போகும் பூமி.! சூரிய கிரகணம் எங்கெல்லாம் தெரியும்.?!

2025 ஆம் ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் செப்டம்பர் 21 அன்று சர்வ பித்ரு அமாவாசை நாளில் நிகழ்கிறது. இந்தியாவில் இரவில் ஏற்படுவதால் இது தெரியாது, ஆனால் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற பகுதிகளில் தெரியும். 

2 Min read
Vedarethinam Ramalingam
Published : Sep 20 2025, 02:06 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
இருளில் மூழ்கும் பூமி.! பயம் வேண்டாம்.!
Image Credit : AI

இருளில் மூழ்கும் பூமி.! பயம் வேண்டாம்.!

2025 ஆம் ஆண்டில் மொத்தம் நான்கு கிரகணங்கள் நிகழும் என்று வானியலாளர்கள் வருடத்தின் தொடக்கத்திலேயே அறிவித்தனர். அதில் இரண்டு சூரிய கிரகணங்களும், இரண்டு சந்திர கிரகணங்களும் இடம்பெறுகின்றன. ஏற்கனவே ஒரு சூரிய கிரகணமும் இரண்டு சந்திர கிரகணங்களும் நிகழ்ந்துவிட்டன. குறிப்பாக செப்டம்பர் 7 ஆம் தேதி நடந்த முழு சந்திர கிரகணத்தில், ரத்த நிலவு (Blood Moon) வானத்தில் தென்பட்டது. இந்த வானியல் காட்சியை பலரும் வெறும் கண்களாலேயே ரசித்தனர்.அந்த வரிசையில், இப்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கும் நிகழ்வு 2025 ஆம் ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சூரிய கிரகணம் ஆகும். இது செப்டம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை, அமாவாசை நாளில் நடைபெறுகிறது. அதேநாள் சர்வ பித்ரு அமாவாசை என்பதும், அதற்கு அடுத்த நாளில் நவராத்திரி பண்டிகை தொடங்குவதும், இந்த கிரகணத்திற்கு சிறப்புசேர்க்கிறது.

25
கிரகண நேரம் - எங்கு தெரியும்?
Image Credit : Getty

கிரகண நேரம் - எங்கு தெரியும்?

கிரகண நேரம்

இந்த கிரகணம் இந்திய நேரப்படி இரவு 11.00 மணி முதல் அதிகாலை 3.23 மணி வரை நீடிக்கும். இது இரவில் நிகழ்வதால் இந்தியாவில் சூரிய கிரகணம் காண்பதற்கான வாய்ப்பு இல்லை.

எங்கு தெரியும்?

இந்த பகுதி சூரிய கிரகணம் தெற்கு பசிபிக் பெருங்கடல், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, இந்தியப் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல், தென் பெருங்கடல், பாலினீசியா, மெலனேசியா, நோர்போக் தீவு, கிறைஸ்ட்சர்ச், வெலிங்டன் போன்ற பகுதிகளில் தென்படும். அங்குள்ள சில பகுதிகளில் சூரியன் 80% வரை மறைந்து, பகல் நேரம் திடீரென இருள் சூழ்ந்தது போல தோற்றமளிக்கும்.

பாதுகாப்பு அறிவுரை

சூரிய கிரகணம் நிகழும் இடங்களில் இதை நேரடியாக பார்க்கக் கூடாது. விசேஷ கிரகணக் கண்ணாடிகள் (Eclipse Glasses) அல்லது பாதுகாப்பான தொலைநோக்கிகள் மூலமாக மட்டுமே பார்க்க வேண்டும். இல்லையேல் கண்களுக்கு தீவிர பாதிப்பு ஏற்படும்.

Related Articles

Related image1
Astrology: செப்.21 கன்னி ராசியில் நிகழும் சூரிய கிரகணம்.! இந்த 4 ராசிகளுக்கு அடி மேல் அடி விழப்போகுது.!
Related image2
Astrology: சந்திர கிரகணத்தை தொடர்ந்து வரும் சூரிய கிரகணம்..! இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை தான்.!
35
ஆன்மீக & ஜோதிட பார்வை
Image Credit : Getty

ஆன்மீக & ஜோதிட பார்வை

சூரிய கிரகணம் விஞ்ஞான ரீதியாக இயற்கையின் ஓர் அற்புத நிகழ்வாகக் கருதப்படுகின்றது. ஆனால் ஜோதிடத்தில் இது சூரியன் – சந்திரன் – பூமி ஆகியவை ஒரே கோட்டில் வருவதால் ஏற்படும் கிரக தோஷ காலம் எனப் பார்க்கப்படுகிறது. சர்வ பித்ரு அமாவாசை நாளில் கிரகணம் ஏற்படுவது, முன்னோர்களுக்கு செய்யப்படும் தான தர்மங்களின் சக்தி பலமடங்காகும் என நம்பப்படுகிறது. கிரகண நேரத்தில் மந்திர ஜெபம், விஷ்ணு சஹஸ்ரநாமம், காயத்ரி மந்திரம் போன்றவற்றைச் சொல்வது ஆன்மீக வளர்ச்சியை தரும் என்று நூல்கள் கூறுகின்றன.கிரகணம் முடிந்த பிறகு தீர்த்த ஸ்நானம் செய்து, முன்னோர்களுக்கு தானம் செய்வது மிகப்பெரிய புண்ணியமாகக் கருதப்படுகிறது.

45
எதை தவிர்க்க வேண்டும்?
Image Credit : Storyblocks

எதை தவிர்க்க வேண்டும்?

ஜோதிட ரீதியாக கிரகண நேரத்தில் சமைக்கப்பட்ட உணவை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும் என கூறப்படுகிறது. அதேபோல் கர்ப்பிணிப் பெண்கள் கிரகணத்தின் போது தேவையில்லாமல் வெளியில் செல்லாமல் இருப்பது பரிந்துரைக்கப்படுகிறது. வழிபாட்டில் உள்ள சிலர், கிரகணம் நேரத்தில் பூஜை செய்வதைத் தவிர்க்கின்றனர்.

55
இந்தியாவில் எங்கு தெரியும்.?!
Image Credit : Storyblocks

இந்தியாவில் எங்கு தெரியும்.?!

இந்தியாவில் நேரடியாகக் காண முடியாதபோதும், செப்டம்பர் 21-ஆம் தேதி நிகழவுள்ள 2025 ஆம் ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் உலகளாவிய அளவில் கோடிக்கணக்கானோரின் கவனத்தை ஈர்க்கும். அறிவியல் நோக்கில் இது வானியல் அற்புதம். ஆன்மீக பார்வையில் இது மனிதர்களின் மனவளர்ச்சிக்கும், முன்னோர்களுக்கான வழிபாட்டிற்கும் சிறப்பு அர்த்தமுடையது. இவ்வாறான கிரகணங்கள், பிரபஞ்சத்தின் அற்புத செயல்பாடுகளையும், மனித வாழ்வில் விண்மீன்களின் தாக்கத்தையும் நினைவூட்டுகின்றன.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
உலகம்
இந்தியா
ஜோதிடம்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved