zodiac signs: Overthinking செய்து குழப்பத்திலேயே வாழும் 5 ராசிக்காரர்கள்
எண்ணங்களின் ஓட்டத்தை நிறுத்த முடியாமல் தவிக்கும் நபரா நீங்கள்? உங்கள் ஜாதகக் கட்டத்தில் உள்ள கிரகங்களின் தாக்கத்தால் ஏற்படும் அதீத சிந்தனைகளைக் கட்டுப்படுத்தி, மன அமைதி பெறுவதற்கான எளிய வழிமுறைகளை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

கன்னி ராசி (Virgo) :
புதனை அதிபதியாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்கள் இயற்கையிலேயே எல்லாவற்றிலும் கச்சிதத்தன்மையை (Perfection) எதிர்பார்ப்பவர்கள். ஒரு சிறிய தவறு நடந்தாலும், அது ஏன் நடந்தது என்று பல நாட்களாக ஆராய்ந்து கொண்டிருப்பார்கள். இவர்களின் ராசிநாதன் புதன் என்பதால், இவர்களின் மூளை எப்போதும் கணக்குகளைப் போட்டுக் கொண்டே இருக்கும்.
டிப்ஸ்: "நடப்பவை அனைத்தும் நன்மைக்கே" என்ற மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். இரவு படுக்கைக்குச் செல்லும் முன் அன்றைய நிகழ்வுகளை ஒரு டைரியில் எழுதும் பழக்கம் மன பாரத்தைக் குறைக்கும்.
மிதுனம் (Gemini) :
மிதுன ராசிக்காரர்கள் ஒரே நேரத்தில் இரண்டு விதமாகச் சிந்திக்கக் கூடியவர்கள். ஒரு முடிவை எடுப்பதற்கு முன், அதன் சாதக பாதகங்களை அளவுக்கு அதிகமாக யோசித்து, கடைசியில் எந்த முடிவும் எடுக்க முடியாமல் திணறுவார்கள். காற்று ராசியான மிதுனத்தில் எண்ணங்களின் ஓட்டம் காற்றின் வேகத்தில் இருக்கும்.
டிப்ஸ்: உங்கள் சிந்தனைகளுக்கு ஒரு காலக்கெடுவை (Time limit) நிர்ணயித்துக் கொள்ளுங்கள். தியானம் செய்வதும், மூச்சுப் பயிற்சி (Pranayama) மேற்கொள்வதும் இவர்களின் அதீத சிந்தனையைக் கட்டுப்படுத்தும்.
விருச்சிகம் (Scorpio) :
யாராவது ஒரு வார்த்தை பேசினால், அதற்குப் பின்னால் என்ன உள்நோக்கம் இருக்கும் என்று தீவிரமாக யோசிப்பது விருச்சிக ராசிக்காரர்களின் இயல்பு. தேவையில்லாத சந்தேகங்களும், கற்பனைகளும் இவர்களை ஓவர்திங்கிங் செய்யத் தூண்டும். நீர் ராசியான விருச்சிகத்தின் ஆழமான உணர்ச்சிகளும், செவ்வாயின் ஆதிக்கமும் இவர்களை எப்போதும் விழிப்புடன் இருக்க வைக்கும்.
டிப்ஸ்: மற்றவர்களின் கருத்துக்களை அவர்களின் பார்வையில் மட்டுமே பார்க்கப் பழக வேண்டும். வாரத்திற்கு ஒருமுறை நீர்நிலைகளுக்கு அருகில் (குளம் அல்லது கடற்கரை) சிறிது நேரம் அமைதியாக அமர்ந்திருப்பது இவர்களின் மனதை அமைதிப்படுத்தும்.
மீனம் (Pisces) :
மீன ராசிக்காரர்கள் தங்களின் கற்பனைத் திறனால் ஒரு சிறிய பிரச்சினையைக் கூட உலகப் மகா யுத்தமாகத் தங்கள் மனதில் உருவகப்படுத்திக் கொள்வார்கள். எதிர்காலத்தைப் பற்றிய பயமும், கடந்த கால ஏமாற்றங்களும் இவர்களை அதிகம் யோசிக்க வைக்கும். குருவை அதிபதியாகக் கொண்ட மீன ராசி, எல்லையற்ற சிந்தனைத் திறனைக் குறிக்கும்.
டிப்ஸ்: கற்பனையான பயங்களில் இருந்து விடுபட்டு, நிகழ்காலத்தில் (Present moment) வாழப் பழக வேண்டும். இசை கேட்பதும், ஏதேனும் ஒரு கலை சார்ந்த பொழுதுபோக்கில் ஈடுபடுவதும் இவர்களின் சிந்தனையைத் திசைதிருப்பும்.
கடகம் (Cancer) :
கடந்த காலத்தில் தங்களுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் மற்றும் ஏமாற்றங்களை மீண்டும் மீண்டும் நினைத்து உருகிக் கொண்டிருப்பதே இவர்களின் ஓவர்திங்கிங்கிற்கு முக்கியக் காரணம். மற்றவர்கள் தங்களைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்ற கவலை இவர்களுக்கு எப்போதும் உண்டு. மனோகாரகனான சந்திரன் இந்த ராசியின் அதிபதி என்பதால், சந்திரனின் வளர்பிறை தேய்பிறை மாற்றங்களைப் போல இவர்களின் மனநிலையும் மாறும்.
டிப்ஸ்: கடந்த கால நினைவுகளைத் தூக்கி எறிந்துவிட்டு, சுய முன்னேற்றத்தில் கவனம் செலுத்த வேண்டும். பௌர்ணமி நாட்களில் நிலவொளியில் சிறிது நேரம் நடப்பது இவர்களின் மனக் குழப்பத்தைப் போக்கும்.

