- Home
- Astrology
- பிப்ரவரி 20 அன்று ஒரே நாளில் உருவாகும் 3 யோகங்கள்.! எந்த ராசிகளுக்கு லாபம்? உங்க ராசி இருக்கா?
பிப்ரவரி 20 அன்று ஒரே நாளில் உருவாகும் 3 யோகங்கள்.! எந்த ராசிகளுக்கு லாபம்? உங்க ராசி இருக்கா?
Indraya Rasi Palan Tamil : பிப்ரவரி 20 வெள்ளிக்கிழமை, சந்திரன் மற்றும் குருவினால் கேந்திர யோகம் மற்றும் கஜகேசரி யோகம் உருவாகிறது. உத்திரட்டாதி நட்சத்திரத்துடன் சர்வார்த்த சித்தி யோகமும் உருவாகும். இதனால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் பற்றி காணலாம்.

ரிஷபம்
ரிஷப ராசிக்கு பத்தாம் வீட்டில் சுக்கிரன் சஞ்சரிப்பதால் தொழிலில் அனுகூலமான நாளாக இருக்கும். தொழில் ஒப்பதங்கள் சாதகமாகும். அரசுத் திட்டங்களில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். படைப்பாற்றல் மற்றும் கல்வித்துறையில் லாபம் காண்பீர்கள். உங்கள் புத்திசாலித்தனத்தையும், திறமையையும் வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் உருவாகும்.
சிம்மம்
சிம்ம ராசிக்கு நல்ல நாளாக இருக்கும். சூரியன் ஏழாம் வீட்டில் இருப்பதால் குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். வேலையில் பெரிய வாய்ப்புகள் கிடைக்கும். அரசியல் தொடர்புகளால் நன்மை ஏற்படும். வேலை தேடுபவர்களுக்கு வெற்றி கிட்டும். குறைந்த ஊதியத்தில் வேலை பார்த்து வருபவர்களுக்கு பன்னாட்டு நிறுவனங்களில் வேலைக்கான அழைப்புகள் வரலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்கு மகிழ்ச்சி கூடும் நாளாக இருக்கும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். தேர்வில் நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். உங்களின் முடிவெடுக்கும் திறன் மற்றும் அனுபவத்தால் நன்மை உண்டாகும். வங்கிப் பணிகளில் வெற்றி காண்பீர்கள். ஆபத்தான முடிவுகளில் இருந்து விலகிச் செல்வீர்கள். கடினமான சூழல்கள் கூட உங்களுக்கு சாதகமாக மாறும். பிரிந்து சென்ற உறவுகள் மீண்டும் இணையும்.
கும்பம்
கும்ப ராசிக்கு வெற்றி நிச்சயம். அதிர்ஷ்டம் மற்றும் கடின உழைப்பு கைகொடுக்கும். பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். நிதி நிலைமை வலுப்பெறும். வீட்டில் மகிழ்ச்சி நிலவும். ஒரு பழைய பிரச்சனையை தீர்த்து மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். குழந்தைகள் தொடர்பான நல்ல செய்திகளை கேட்பீர்கள். உங்கள் வீட்டில் பொருள் வசதிகள் வருவதால் மகிழ்ச்சி அதிகரித்து காணப்படும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

