MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • மகா சிவராத்திரி: மஞ்சள் கடுகு கொண்டு சிவ வழிபாடு செய்தால் கஷ்டங்கள் தீரும்!

மகா சிவராத்திரி: மஞ்சள் கடுகு கொண்டு சிவ வழிபாடு செய்தால் கஷ்டங்கள் தீரும்!

MahaShivratri 2025 Worshipping Lord Shiva With Yellow Mustard : மகா சிவராத்திரி நாளன்று மஞ்சள் கடுகு கொண்டு சிவ வழிபாடு செய்தால் கஷ்டங்கள் யாவும் நீங்கும் என்பது ஐதீகம்.

2 Min read
Rsiva kumar
Published : Feb 25 2025, 04:32 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
மகா சிவராத்திரி: மஞ்சள் கடுகு கொண்டு சிவ வழிபாடு செய்தால் கஷ்டங்கள் தீரும்!

மகா சிவராத்திரி: மஞ்சள் கடுகு கொண்டு சிவ வழிபாடு செய்தால் கஷ்டங்கள் தீரும்!

MahaShivratri 2025 Worshipping Lord Shiva With Yellow Mustard : ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு பிப்ரவரி 26ஆம் தேதி நாளை புதன்கிழமை கொண்டாடப்படுகிறது. மகா சிவராத்திரி அன்று நாள் முழுவதும் சிவனுக்கு பூஜைகள் செய்து, உபவாசம் இருந்து, இரவு முழுவதும் விழித்திருப்பார்கள். அதுமட்டுமல்லாமல் இந்த நாளில் பக்தர்கள் சிவலிங்கத்திற்கு பல பொருட்கள் கொண்டு வழிபாடு செய்வார்கள். குறிப்பாக பாலாபிஷேகம் செய்வதால் வீட்டில் அமைதி, மகிழ்ச்சி நிலவும் என்று நம்பப்படுகிறது. ஆனால் எதைச் சமர்ப்பித்தாலும், சமர்ப்பிக்காவிட்டாலும் இந்த சிவராத்திரி அன்று சிவனுக்கு ஒன்றை மட்டும் அர்ப்பணித்தால் உங்கள் கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும் என்பது ஐதீகம். அது என்ன என்பது குறித்து முழுவதும் பார்க்கலாம்.

24
மகா சிவராத்திரி: மஞ்சள் கடுகு கொண்டு சிவ வழிபாடு செய்தால் கஷ்டங்கள் தீரும்!

மகா சிவராத்திரி: மஞ்சள் கடுகு கொண்டு சிவ வழிபாடு செய்தால் கஷ்டங்கள் தீரும்!

கடுகு பற்றி உங்களுக்கு அறிமுகம் தேவையில்லை. ஆனால் மஞ்சள் கடுகு பற்றி எப்போதாவது கேள்விப்பட்டதுண்டா? இதை சிவராத்திரி அன்று சிவனுக்கு அர்ப்பணித்தால் நிறைய நன்மைகள் நடக்குமாம்.

மஞ்சள் கடுகு ஏன் சமர்ப்பிக்க வேண்டும்?

மஞ்சள் கடுகு பூஜைக்கு புனிதமாக கருதப்படுகிறது. அதனால் தான் இதை பூஜையில் பயன்படுத்துகிறார்கள். சிவலிங்கத்திற்கு இதை நைவேத்தியமாக வைத்தால் சுற்றுச்சூழல் சுத்தமாகும். அதேபோல், சாதகமான சக்தி அப்படியே இருக்கும். எதிர்மறை சக்தியை குறைக்க நினைத்தால், அதை சிவலிங்கத்திற்கு சமர்ப்பிக்கலாம் என்று நம்பப்படுகிறது. இது கெட்ட பார்வையையும் தடுக்கும். சிவலிங்கத்திற்கு இதை நைவேத்தியமாக வைப்பது வியாழன் கிரகத்தின் தோஷங்களை நீக்குகிறது. பொருளாதார செழிப்பு அதிகரிக்கும்.

34
மகா சிவராத்திரி: மஞ்சள் கடுகு கொண்டு சிவ வழிபாடு செய்தால் கஷ்டங்கள் தீரும்!

மகா சிவராத்திரி: மஞ்சள் கடுகு கொண்டு சிவ வழிபாடு செய்தால் கஷ்டங்கள் தீரும்!

இதற்கு, நீங்கள் முதலில் நன்றாக குளிக்க வேண்டும். அதன் பிறகு, பூஜை தட்டை அழகாக அலங்கரிக்க வேண்டும். இப்போது அதில் மஞ்சள் கடுகை போட்டு கோவிலுக்கு எடுத்து செல்ல வேண்டும். இதன் பிறகு, சிவனுக்கு ஜலாபிஷேகம் செய்து இந்த மஞ்சள் கடுகை சிவனுக்கு அர்ப்பணியுங்கள். இதை சமர்ப்பிப்பதன் மூலம், உங்கள் வீட்டில் உள்ள அனைத்து எதிர்மறைகளும் நீங்கிவிடும். மேலும், சிவனின் ஆசீர்வாதம் உங்கள் மீது இருக்கும். உங்கள் கஷ்டங்கள் அனைத்தும் தீர்ந்துவிடும்.

 

44
மகா சிவராத்திரி: மஞ்சள் கடுகு கொண்டு சிவ வழிபாடு செய்தால் கஷ்டங்கள் தீரும்!

மகா சிவராத்திரி: மஞ்சள் கடுகு கொண்டு சிவ வழிபாடு செய்தால் கஷ்டங்கள் தீரும்!

மகாசிவராத்திரி அன்று இந்த விஷயங்களை நினைவில் கொள்ள வேண்டும். அதாவது, மகாசிவராத்திரி அன்று, நீங்கள் காலையில் எழுந்து குளிக்க வேண்டும். அதன் பிறகு, புதிய ஆடைகளை அணிந்து இந்த விரதத்தை தொடங்க வேண்டும். இதையடுத்து கோவிலுக்கு சென்று சிவனை வணங்க வேண்டும். பிறகு மாலையில் ஆரத்தி கொடுப்பதன் மூலம் இந்த விரதத்தை முடிக்க வேண்டும். இதன் மூலம் உங்கள் பூஜை முடிவடையும். மேலும், உங்கள் விருப்பம் நிறைவேறும்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved