- Home
- Astrology
- சிவராத்திரிக்கு பிறகு பணக்காரனாகும் ராசிகள் - 5 கிரகங்களின் அபூர்வ சேர்க்கையால் கோடீஸ்வர யோகம் பெறும் ராசிகள்!
சிவராத்திரிக்கு பிறகு பணக்காரனாகும் ராசிகள் - 5 கிரகங்களின் அபூர்வ சேர்க்கையால் கோடீஸ்வர யோகம் பெறும் ராசிகள்!
பஞ்சகிரஹி யோகத்தால் உண்டாகும் நன்மையால் இந்த 5 ராசியினருக்கு அதிர்ஷ்டம் தேடி வரப் போகிறது. அந்த ராசியினர் யார் யார் என்று பார்க்கலாம்.

மஹா சிவராத்திரி பஞ்சகிரஹி யோக பலன்கள்
2026-ம் ஆண்டு மஹாசிவராத்திரி ஒரு ஆன்மீகத் திருவிழாவாக மட்டுமல்லாமல், ஜோதிட ரீதியாகவும் மகா சக்தி வாய்ந்ததாக அமையவுள்ளது. பல ஆண்டுகளுக்குப் பிறகு, ஐந்து முக்கிய கிரகங்கள் ஒன்றிணையும் 'பஞ்சகிரஹி யோகம்' இந்த நன்னாளில் கூடிவருகிறது. இந்த விசேஷமான அமைப்பால் குறிப்பிட்ட ஐந்து ராசியினருக்குப் பொற்காலம் தொடங்குகிறது. அந்த ராசியினர் யார் என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
பஞ்சகிரகி யோக பலன்கள்
வரும் பிப்ரவரி 15, ஞாயிற்றுக்கிழமை அன்று கொண்டாடப்பட உள்ள மகாசிவராத்திரி, பல தசாப்தங்களில் இல்லாத ஒரு மகா அதிசயத்தைக் கொண்டுவருகிறது! கும்ப ராசியில் சூரியன், சந்திரன், புதன், சுக்கிரன் மற்றும் ராகு என ஐந்து கிரகங்கள் ஒன்றாகக் கூடி 'பஞ்சகிரஹி யோகத்தை' உருவாக்குகின்றன. ஈசனின் அருளோடு இந்த அபூர்வ கிரகச் சேர்க்கையும் இணைவதால், ஐந்து ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது. கையில் பணப்புழக்கம் அதிகரிப்பதுடன், குடும்பத்தில் மகிழ்ச்சியும் இரட்டிப்பாகும். அந்த அதிர்ஷ்ட ராசிகள் உங்கள் ராசியாக இருக்குமா? என்று பார்க்கலாம்.
மேஷ ராசி பஞ்சகிரக யோக பலன்கள்
இந்த ஆண்டு மகாசிவராத்திரி அன்று நிகழும் ஐந்து கிரகங்களின் இணைவு, குறிப்பிட்ட ராசியினரின் சமூக அந்தஸ்தையும் அதிகாரத்தையும் பன்மடங்கு உயர்த்த உள்ளது. எதிர்காலத்தில் பெரும் லாபத்தைத் தரக்கூடிய புதிய தொழில்கள் அல்லது முயற்சிகளைத் தொடங்க இதுவே மிகச்சிறந்த தருணம். குறிப்பாக, வெளிநாடு செல்லக் காத்திருப்பவர்களின் நீண்ட நாள் கனவு இந்த காலகட்டத்தில் நனவாகும். தம்பதிகளிடையே நிலவி வந்த மனக்கசப்புகள் நீங்கி, கணவன்-மனைவி உறவு முன்பை விட பலப்படும். ஈசனின் அருளால் இவர்களுக்குப் பொற்காலம் தொடங்குகிறது!
கடக ராசிக்கான பஞ்சகிரக யோக பலன்கள்
தற்போது நிகழ்ந்துள்ள பஞ்சகிரக யோகம் சில ராசியினருக்கு வரப்பிரசாதமாக அமையவுள்ளது. குறிப்பாக, பிள்ளைகளின் எதிர்காலம் மற்றும் வாரிசு யோகம் குறித்த சுப செய்திகள் இல்லம் தேடி வரும். நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த நீதிமன்ற வழக்குகள் உங்களுக்குச் சாதகமாக முடிவடைய அதிக வாய்ப்புள்ளது. குடும்பத்தினர் அல்லது நண்பர்களுடன் நீங்கள் மேற்கொள்ளும் பயணம் மனதிற்குப் புத்துணர்ச்சியையும் மகிழ்ச்சியையும் தரும். உடல் ஆரோக்கியம் சீராகி, புத்துணர்வுடன் செயல்படுவீர்கள். சோதனைகள் முடிந்து சாதனைகள் தொடங்கும் காலமிது!
சிம்மம் ராசிக்கான பஞ்சகிரக யோக பலன்கள்
அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு உங்களுக்குக் கிடைக்கும் காலம் இது. பெரியவர்களின் ஆலோசனையோடு தொடங்கும் புதிய காரியங்கள் வெற்றியில் முடியும். காதல் வாழ்க்கை இனிக்கும். வீடு, கடை போன்ற சொத்துக்களை வாங்கும் கனவு நனவாகும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு, மன நிம்மதி கிட்டும். வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டிய நேரமிது!
துலாம் ராசியினருக்கான பஞ்சகிரக யோக பலன்கள்
பஞ்சகிரகங்களின் சேர்க்கையால் இந்த ராசியினருக்குப் பண வரவு அபரிமிதமாக இருக்கும். வேலையின்றித் தவிப்பவர்களுக்கு அவர்களின் தகுதிக்கேற்ற சிறந்த வேலைவாய்ப்புகள் தேடி வரும். தடைபட்ட சுப காரியங்கள் அல்லது தொழில் திட்டங்களுக்கு மாமியார் வழி உறவினர்களிடமிருந்து எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். குடும்பத்தினருடன் புனித யாத்திரைகள் சென்று வரும் பாக்கியம் உண்டாகும். சேமிப்புகள் உயர்ந்து, நிதி ரீதியாக நீங்கள் ஒரு வலுவான நிலையை அடைவீர்கள். பொருளாதார நெருக்கடிகள் நீங்கி பொற்காலம் தொடங்குகிறது.
தனுசு ராசியினருக்கான பஞ்சகிரஹி யோகத்தின் பலன்கள்
பஞ்சக்கிரஹி யோகத்தின் முழுமையான அருளாசி இந்த ராசியினருக்குக் கிடைக்கப் போகிறது. மன ரீதியாக நிலவி வந்த குழப்பங்கள் அகன்று, ஆக்கபூர்வமான முடிவுகளை எடுப்பீர்கள். பொருளாதார ரீதியாகப் பல வழிகளில் இருந்து வருமானம் வரத் தொடங்கும். கல்வி பயிலும் மாணவர்கள் தங்களின் கடின உழைப்பிற்கு ஏற்ற வியத்தகு வெற்றியைப் பெறுவார்கள். பொது வாழ்வில் அல்லது அரசியலில் இருப்பவர்களுக்கு அவர்களின் அந்தஸ்தும் செல்வாக்கும் உயரும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த நாள்பட்ட சிக்கல்கள் தீர்ந்து, புதிய உற்சாகத்துடன் செயல்படுவீர்கள்.