- Home
- Astrology
- Astrology: ஐப்பசி மாதத்தில் கவனமாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.! பிரச்சினைகள் ரவுண்டு கட்டி அடிக்குமாம்.!
Astrology: ஐப்பசி மாதத்தில் கவனமாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.! பிரச்சினைகள் ரவுண்டு கட்டி அடிக்குமாம்.!
Aippasi Month rasi palangal: புரட்டாசி முடிந்து ஐப்பசி மாதம் துவங்க இருக்கிறது. அக்டோபர் நடுப்பகுதி முதல் நவம்பர் நடுப்பகுதி வரை கிரகங்களின் நிலைகள் குறித்தும், கவனமாக ராசி இருக்க வேண்டிய ராசிகள் குறித்தும் இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

ஐப்பசி மாதத்தில் நடக்கும் கிரக பெயர்ச்சிகள்
சூரியன் (அக்டோபர் 17 - நவம்பர் 16): சூரியனின் பெயர்ச்சியை வைத்தே தமிழ் மாதங்கள் கணக்கிடப்படுகின்றன. அந்த வகையில் அக்டோபர் 17ஆம் தேதி சூரிய பகவான் துலாம் ராசியில் பெயர்ச்சி ஆக இருக்கிறார். இதன் காரணமாக ஐப்பசி மாதம் பிறக்க இருக்கிறது. இந்த மாதத்தில் பல கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்பட இருக்கின்றன.
குரு (அக்டோபர் 18): ஐப்பசி மாதத்தின் தொடக்கத்தில் அக்டோபர் 18 ஆம் தேதி குரு பகவான் கடக ராசியில் உச்சம் பெற்று சஞ்சரிக்க இருக்கிறார். குருவின் வலிமையான இந்த நிலையானது பல ராசிகளுக்கு நன்மை தரக்கூடும். குறிப்பாக அவரது பார்வை பெறும் ராசிகள், நல்ல பலன்களை அனுபவிக்க உள்ளனர்.
சுக்கிரன் (நவம்பர் 2 - நவம்பர் 26): சுக்கிர பகவான் நவம்பர் 2 ஆம் தேதி அன்று தனது சொந்த வீடான துலாம் ராசிக்கு சென்று ஆட்சி பலம் பெறுகிறார். சுக்கிரன் ஆட்சி பலம் பெறுவது கலை, அழகு, காதல், ஆடம்பர விஷயங்களில் நல்ல முன்னேற்றத்தையும், மகிழ்ச்சியையும் கொடுக்கும். மேலும் சுக்கிரனுடன் சூரியன் சேர்ந்து சுக்ராதித்ய யோகம் உருவாவது பல ராசிகளுக்கு எதிர்பாராத நன்மைகளைத் தரும்.
செவ்வாய் (அக்டோபர் 27 - டிசம்பர் 7): செவ்வாய் பகவான் அக்டோபர் 27 ஆம் தேதி தனது சொந்த வீடான விருச்சிக ராசிக்கு சென்று ஆட்சி பலம் பெறுகிறார். செவ்வாய் பகவான் ஆட்சி பலம் பெறுவது தைரியம், துணிச்சல், நிலம், சகோதர உறவுகள் ஆகியவற்றில் வலு சேர்க்கும்.
புதன் (அக்டோபர் 24 - நவம்பர் 23): புதன் பகவான் அக்டோபர் 24 ஆம் தேதி விருச்சிக ராசிக்கு செல்கிறார்.
சனி மற்றும் ராகு: சனிபகவான் வக்கிர இயக்கத்தில் பயணிக்கிறார். லாப ஸ்தானத்தில் கும்ப ராசியில் ராகுவுடன் இணைந்து சஞ்சரிக்கிறார். சனியும் ராகவும் நீண்ட நாட்களாக இதே நிலையில் இருப்பதால் சில ராசிக்காரர்களுக்கு குழப்பம், தாமதம் ஆகியவை ஏற்படலாம்.
ஐப்பசி மாதம் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்
ஐப்பசி மாத கிரக நிலைகளின் அடிப்படையில் சில ராசிகள் சற்று கவனமாக இருக்க வேண்டியது அவசியம். அந்த ராசிகள் பின்வருமாறு:
துலாம்
துலாம் ராசியின் அதிபதியான சுக்கிரனும், துலாம் ராசியில் நீச்சம் பெறும் சூரியனும் துலாம் ராசியில் சந்திப்பதால், குழப்பமான மனநிலை, உடல்நலக் குறைவு, முக்கிய முடிவுகளை எடுப்பதில் தாமதம் ஆகியவை ஏற்படலாம். தொழில் மற்றும் வேலையில் முடிவெடுக்கும் பொழுது பொறுமை அவசியம். உடல்நலத்திலும் ஆரோக்கியம் தேவை.
தனுசு
தனுசு ராசியின் அதிபதியான குரு பகவான் அஷ்டமத்தில் உச்சம் பெற்றாலும், அஷ்டமத்தில் இருப்பதால் வரவை விட செலவுகள் அதிகரிக்கலாம். மேலும் வளர்ச்சிக்கு இடையூறான சில சம்பவங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே நிதி விஷயங்களில் அதிக எச்சரிக்கை தேவை. அதிக அலைச்சல், திடீர் பயணங்களால் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். பணியிடத்தில் உயர் அதிகாரிகளுடன் நல்லுறவைப் பேணுவது நல்லது.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு சனி வக்கிர நிலையில் இருப்பதால் சில காரியங்கள் நடைபெறுவது போல இருக்கும். ஆனால் கடைசி நேரத்தில் தடைபடும் சூழல் ஏற்படலாம். திடீர் செலவுகள், கடன் சுமை குறித்த மனக்கவலைகள் இருக்கலாம். முதலீடுகள் மற்றும் கடன் கொடுப்பது வாங்குவது போன்றவற்றில் அதிக கவனம் தேவை. வீண் விவாதங்களை தவிர்ப்பது பலன்களைத் தரும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)